¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
கிழக்கு வெளுத்ததம்மா - cover

கிழக்கு வெளுத்ததம்மா

ரமணிசந்திரன்

Editorial: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinopsis

அன்றைய மீட்டிங் தன்னை இவ்வளவு தூரம் பாதித்து விடக்கூடும் என்று எட்டாத கற்பனையில் கூட மீரா எண்ணியிருக்கவில்லை. பாதிப்பை உணர்ந்த பிறகும் கூட அவளால் அதை நம்ப இயலவில்லை.ஆறு ஆண்டுகள்!நீண்ட நெடிய ஆறு ஆண்டுகளாகப் பயின்று வைத்திருந்த அமைதி அப்படிப் பறந்துவிடுமா?எதையோ இழந்துவிட்டாற்போல என்னவோ கிட்டாமல் போனதுபோல நெஞ்சுக் கூட்டினுள் ஏன் இந்தத் தவிப்பு?அன்றைய நிகழ்ச்சிகளை அசைபோடக்கூட! உள்ளுர அவளுக்கு அச்சமாக இருந்தது.அச்சமென்ன? அதற்கு அவசியமே இல்லையே என்று வெகு சிரமப்பட்டு ஓர் அலட்சியத்தை வருவித்துக் கொண்டு அவள் நிமிர்ந்தபோது அவளது காண்டஸா, கேட்டின் வழியே வழுக்கிய படி சென்று அவளது வீடு என்று சொல்லப்படும் மாளிகையின் முன்னே சென்று நின்றது.சூழ்நிலையை உணர்ந்து சுதாரித்து அவள் திரும்புமுன் பணியாளர் ஒருவன் ஓடிவந்து கார்க் கதவைத் திறந்து விட்டுப் பணிவுடன் ஒருபுறம் ஒதுங்கி நின்றான்.தன் உடைக்குப் பொருத்தமாக எடுத்துச் சென்றிருந்த வெள்ளி நிறக் கைப்பையைக்கூட மறந்து, இயந்திரமாய் இறங்கி வீட்டுப் படியேறினாள மீரா.நேராக அவளது அறைக்குள் சென்று விட்டால், குளிரக் குளிர ஷவரில் குளித்து விட்டால் இந்தக் கொதிப்பு அடங்கி விடுமோ!ஆனால் கொதிப்பா இது?... கொஞ்...சம் கூடக் கோபமே இல்லையே
 
முகத்துக்கு நேராகப் ‘பொய்க் கணக்குச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறீர்கள்’ என்று அவன் குற்றம் சாட்டும் போது கூட ஆத்திரம் வரவில்லையே.ஆனால் உடம்பெல்லாம் எரிகிற மாதிரி இந்த அனலைக் குளிர்விப்பதே நினைவாக மாடிப்பக்கம் திரும்பியவளுக்குத் தன் அறையில் இருந்த ஆள் உயரப் படங்கள் நினைவு வந்தன.அவைகளைப் பார்த்தால் அமைதி திரும்பக் கூடுமோ என்று எண்ணி ஓர் எட்டு எடுத்து வைத்தவள் தயங்கி பக்கவாட்டில் இருந்த ‘ஃப்ரெஞ்ச் லிண்டோ’ வைத் திறந்து கொண்டு இறங்கித் தோட்டத்திற்குச் சென்று மரத்தடிகளில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த ஆசனங்களுள் ஒன்றில் அமர்ந்தாள்.சீராக வெட்டப்பட்டிருக்கும் பாந்த புல் தரையும், இடை இடையே வட்டப் பாத்திகளில் பூத்துக் குலுங்கும் மலர்ச் செடிகளும் ஆங்காங்கே மரங்களுமாக அந்தப் பரந்த தோட்டம் எப்போதுமே அவளுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவது வழக்கம்.இன்று அதுவும் தோற்றது.இத்தனைக்கும் வானம் கொஞ்சம் அதிக நீலமாக, இலைகள் கொஞ்சம் அதிகப் பசுமையாகத் தான் தெரிகிறது. மலர்கள் கூடக் கொஞ்சம் அதிக அழகாகத்தான் பளிச்சிட்டன...ஆனாலும்...“என்ன நடந்தது மருமகளே!”சற்றுத் திகைத்து “ஓ...ஒன்றுமில்லை மாமா.” என்று பணிவுடன் எழுந்தாள் மீரா.“பரவாயில்லை. உட்காரம்மா.” என்று தானும் அமர்ந்து கொண்டார் சேதுபதி.அவள் மீண்டும் அமரும் வரையில் பொறுத்திருந்து விட்டுப் “பின் ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” என்று விசாரித்தார். “வந்து ஒரு காபி கூடக் குடிக்கவில்லை? இங்கேயே கொண்டு வரச் சொல்லிவிட்டு வந்தேன்.” என்றார் கரிசனத்துடன்.பாசத்தைப் பொழியும் இவரிடம் என்னவென்று சொல்வது?
Disponible desde: 03/04/2025.
Longitud de impresión: 181 páginas.

Otros libros que te pueden interesar

  • வெள்ளியங்காட்டான் கவிதைகள் விழாக்கள் - cover

    வெள்ளியங்காட்டான் கவிதைகள்...

    வெள்ளியங்காட்டான்

    • 0
    • 0
    • 0
    வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.  "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. 
    உணர்ச்சி வசப்படுபவன் கவிஞன். சத்தியத்திலும் சமத்துவத்திலும் பற்றுடையவன். சராசரி மனிதன் விலகிப் போக ஒதுக்க, கவிஞன் ஒதுங்கிப் போகிறான். உண்மையை உயிராகக் கொண்டவன் கவிஞன். அறமறிந்து ஒழுகுபவன். பிறாரால் ஆளமுடியாதவன். தன்னைத் தான் ஆள்கிறவன். தலைவனை அறிந்து அடைந்தவன். மக்கள் மொழியில் விபத்தானதை சம்பத்து எனக் கொள்பவன். கவிஞனை இப்படி இனம் காண்கிறார் வெள்ளியங்காட்டான். அவருடைய கவிதைகளை ஐந்து ஒலி நூல்களாக பேராசிரியர் ரமணி அளிக்கிறார். இந்த ஐந்தாவது ஒலிநூலில் விழாக்கள் என்ற துணைத்தலைப்பில் அவருடைய 13 கவிதைகள்.
    Ver libro
  • Natpu - cover

    Natpu

    Sivasankari

    • 0
    • 0
    • 0
    திருமதி. சிவசங்கரி அவர்களின் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கதைகளும் முதல் தொகுப்பினைப் போன்று சுவாரஸ்யமாகவும் ஆவலைத்தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. இத்தொகுப்பில் யதார்த்தமான நடையில் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறன. நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளை நயம்பட வழங்குகியுள்ளார்.
    Ver libro
  • பாவியக் கொத்து - cover

    பாவியக் கொத்து

    Perunchiththiranar

    • 0
    • 0
    • 0
    பெருஞ்சித்திரனார் (1933–1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கைக‌ள் கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். முப்பத்தைந்து படைப்புகளைப் படைத்துத் தம் இலக்கிய ஆளுமையைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் நிலைநாட்டினார். இவர் படைப்புகளைப் பயின்றோர் தமிழ் உணர்வும் ஊக்கமும் பெற்றனர். தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டாற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித்திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில் தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார். இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன. பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். பெருஞ்சித்திரனாரின் படைப்புகளில் தமிழ்க் குமூகத்தில் உள்ள அனைவரும் தமிழ்ப்பணியாற்ற வேண்டும்; இழந்த பெருமையை மீட்க வேண்டும்; பகையை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும் என்பன உள்ளடக்கமாக அமைந்துள்ளன.
    Ver libro
  • திருவகுப்பு - cover

    திருவகுப்பு

    அல்டிவான் டோரஸ்

    • 0
    • 0
    • 0
    ஒரே பொருளை பலவிதமாக வகுத்து தொகுத்து சொல்லும் நூல் வகைக்கு வகுப்பு என்று பெயர். அருணகிரியார் இவ்வகையில் 25 வகுப்புகள் பாடியுள்ளார். அவையாவன‌ 1. சீர்பாத வகுப்பு , 2. தேவேந்திர சங்க வகுப்பு 3. வேல் வகுப்பு 4. திருவேளைக்காரன் வகுப்பு  5. பெருத்த வசன வகுப்பு 6. பூத வேதாள வகுப்பு  7. பொருகளத் தலகை வகுப்பு 8. செருக்களத் தலகை வகுப்பு  9. போர்க்களத் தலகை வகுப்பு 10. திருஞான வேழ வகுப்பு 11. திருக்கையில் வழக்க வகுப்பு  12. வேடிச்சி காவலன் வகுப்பு 13. சேவகன் வகுப்பு 14. வேல்வாங்கு வகுப்பு 15. புய வகுப்பு 16. சித்து வகுப்பு 17. கடைக்கணியல் வகுப்பு 18. சிவலோக வகுப்பு 19. மயில் வகுப்பு 20. கொலு வகுப்பு 21. வீரவாள் வகுப்பு  22. சிவகிரி வகுப்பு 23. திருச்செந்தில் வகுப்பு 24. திருப்பழநி வகுப்பு. இவற்றுள் முதல் 18 தான் அருணகிரியாரின் வாக்கு என்று ஆறுமுக நாவலர் போன்ற ஆன்றோர்களின் கருத்தாகும். ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி  ராமல்விடு வித்தருள்நி   யாயக் காரனும் என்று அருணகிரிப் பெருந்தகை திருவகுப்பில் கூறுவதினால் அவர் மனித உடம்பை விட்டு கிளி ரூபம் பெற்ற பின் திருவகுப்புகளை பாடியிருப்பார் எனத் தோன்றுகிறது. இக்கருத்திற்கு போதுமான ஆதாரங்களும் உள்ளன. பெண்ணாசை பெரும் தீமை விளைவிக்கும் என்பதை பல திருப்புகழில் அருணகிரியார் கூறி இருப்பதை பார்க்கிறோம்.ஆனால் திருவகுப்புகளில் பெண்ணாசையைப் பற்றி எங்குமே கூறப்படவில்லை. மேலும் எம பயத்தைப் பற்றி பல திருப்புகழ் பாக்களில் சித்தரித்திருக்கிறார். முதல் 18 வகுப்புகளில் சேவகன் வகுப்பைத்தவிர வேறு எந்த வகுப்பிலும் இது பற்றி கூறப்படவே இல்லை. உரைபெற வகுத்தருணை நகரின்ஒரு பத்தனிடும் ஒளிவளர் திருப்புகழ் மதாணிக்ரு பாகரனும் என்று வேடிச்சி காவலன் வகுப்பில் 'நான்' என்று சொல்லாமல் 'ஒரு பத்தன்' (பக்தன்) படர்க்கையில் கூறி இருப்பது கவனிக்கப்பாலது. தான் முன்பு மானிடப் பிறவியில் திருப்புகழை இயற்றினேன் என்கிற தொனி இங்கு ஒலிக்கிறது. 
    இவ்விருபத்தைந்து வகுப்புகளையும் ரமணியின் நேர்த்தியான சந்த ஓசையில் கேட்கலாம்.
    Ver libro
  • Nagamandala - cover

    Nagamandala

    Kasturi Bayari

    • 0
    • 0
    • 0
    Short story by Kasturi Bayari
    Ver libro
  • Nilainiruthal - cover

    Nilainiruthal

    Ki Rajanarayanan

    • 0
    • 0
    • 0
    கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல். A collection of 14 selected short stories by well-knows writer Ki.Rajanarayanan. His charachters are as unique as his writing style. Writer Sundara Ramasamy describes the stories of Ki.Ra as a fruit garden of Tamil literary world. His aesthetics is unparalleled and he is considered a pioneer of literature from Karisal region in Tamil.
    Ver libro