Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
ஜோடிப் புறாக்கள் - cover
LER

ஜோடிப் புறாக்கள்

ரமணிசந்திரன்

Editora: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinopse

அன்புத் தோழி மஞ்சுளாவின் வீட்டிலிருந்து வெளியேறிய கவிதா பஸ் நிற்கும் இடத்தை நோக்கி விறுவிறு என்று நடக்கத் தொடங்கினாள்.உடல் தன் போக்கில் நடைபோட, இதயத்தில் மின்னல் வெட்டியது! இடித்தது! புயலும் மழையுமாக இரைச்சலிட்டன. உறுதியாகத் தெரிந்துவிட்ட உண்மையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறினாள்.“உயிரே நீதான்” என்று சொன்னவன் மாறி விட்டானே!‘வண்ண மலரே’ என்று கொஞ்சியவன் வண்டாகிவிட்டானா?இது உண்மைதானா? எப்படி இருக்க முடியும்? அவளால் நம்ப முடியவில்லை.மின்னாமல் வீழ்ந்த இடிபோல் எண்ணாமல் நேர்ந்த துன்பத்தின் சுமைதாளாமல் தவித்தாள்; தடுமாறினாள். அதுமட்டும் நடுத்தெருவாக இல்லாமல் வீடாக இருந்தால், ‘ஓ’ வென்று கதறியிருப்பாள்.சற்று நின்று நிதானத்தை வரவழைத்துக் கொண்டாள்.அதற்குள் சரவணனுடைய சிரித்த முகம் மனதில் எழுந்தது. உள்ளத்தில் கள்ளங்கபடு உள்ளவன் முகமா அது? இல்லவே இல்லை என்று சத்தியம்கூடச் செய்வாள் கவிதா. ஆனால் கண்ணெதிரே அவன் நடந்து கொள்ளும் விதம், அவன் கள்ளமனம் படைத்தவன்தான் என்பதைப் பறை சாற்றியது. மஞ்சுளா தெள்ளத் தெளிவாய்க் கண்டுவிட்டு அல்லவா சொன்னாள்? அவள் சொன்னதில் ஐயத்துக்கு இடம் இல்லையே...“சரவணன், உங்களை நல்லவர் என்று நம்பினேன் கடைசியில் இப்படி மோசம் செய்கிறீர்களே” அவள் இதயம் விம்மியது.‘வெளித்தோற்றத்தைக் கொண்டு ஒருவரை எடை போடாதே’ என்று யார் சொல்லியிருப்பார்கள்? யாரோ நம்போல அனுபவித்தவர்கள்தாம் சொல்லியிருப்பார்கள். ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்று நம்மைஎச்சரிக்கை செய்து இருக்கிறார்கள். நாம்தான் என்னவோ நம்மை மிஞ்சிய மூளையில்லை என்று முட்டாள்தனமாக நடந்து கொண்டு பிறகு மாட்டிக்கொண்டு விழிக்கிறோம் என்று நொந்து கொண்டாள்.சரவணன் நல்லவன்! ஒருநாளும் சொல் மாறமாட்டான் என்று கவிதா நம்பிக்கையோடு நினைத்து இருந்தாள். அவனுடைய சீரிய பண்பும், நேரிய நோக்கும் அமைதியான போக்கும் அமரிக்கையான நடவடிக்கையும் அத்தகைய எண்ணங்களை அவள் மனதில் எழுப்பி இருந்தன.கூடவே சரவணனுடைய தூரத்து உறவினன் கோபாலின் நினைவு வந்தது. சில நேரம் சரவணனோடு அவன் வருவான்.அவனுடைய தொங்கு மீசையும், ஓயாத சிகரெட்டால் கறுத்த உதடுகளும், சதா பெண் முகம் நாடி அலையும் கண்களும், மட்டரகச் சிரிப்பும், சே சரவணனே, “அவன் பெண்களிடமும் பழக அருகதை உள்ளவன் அல்ல. நான் இல்லாத நேரம் வந்தால் வெட்டி விடுங்கள்” என்று எச்சரித்திருந்தான். அப்படி எல்லாம் அடுத்தவனைப்பற்றி எச்சரிக்கை செய்தவன், இப்போது அவனைப் போலவே நடந்துவிட்டான். இது எப்படி சாத்தியமாயிற்று?நிமிர்ந்து பார்த்தாள் கவிதா. பஸ் நிற்குமிடம் வந்தாயிற்று. எந்திரம்போல் பஸ்சுக்காக வரிசையில் நின்றாள். ஆனால் நம்ப வைத்து மோசம் செய்தவனைப் பற்றிய எண்ணங்களில் இருந்து மனதை அகற்ற முடியவில்லை. சே... துரோகி.“என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார், வரிசையில் அவள் முன்னே நின்ற ஒருவர்.எண்ணியதோடு மட்டுமின்றி வாய்விட்டுச் சொல்லியும் விட்டோம் என்பதை அறிந்ததும் அவமானமாகிவிட்டது. அவளுக்கு. ‘ஒன்றுமில்லை’ என்று சமாளித்தாள். குனிந்து தன் தங்க நிற மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தாள். அலுவலகத்திற்கு இன்னமும் நேரம் இருந்தது. இங்கே நிற்பதைவிட அடுத்த ‘ஸ்டாப்’ வரை நடக்கலாம் என்று நினைத்தாள். நடந்தால் நெஞ்சில் சுமை சற்றுக் குறையும் என்று தோன்றவே நடக்கத் தொடங்கினாள்.
Disponível desde: 03/04/2025.
Comprimento de impressão: 188 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Gomathi - cover

    Gomathi

    Ki Rajanarayanan

    • 0
    • 0
    • 0
    கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல். A collection of 14 selected short stories by well-knows writer Ki.Rajanarayanan. His charachters are as unique as his writing style. Writer Sundara Ramasamy describes the stories of Ki.Ra as a fruit garden of Tamil literary world. His aesthetics is unparalleled and he is considered a pioneer of literature from Karisal region in Tamil.
    Ver livro
  • வெள்ளியங்காட்டான் கவிதைகள் சமுதாயம் - cover

    வெள்ளியங்காட்டான் கவிதைகள் சமுதாயம்

    Velliyankattan

    • 0
    • 0
    • 0
    வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.  "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. 
    உணர்ச்சி வசப்படுபவன் கவிஞன். சத்தியத்திலும் சமத்துவத்திலும் பற்றுடையவன். சராசரி மனிதன் விலகிப் போக ஒதுக்க, கவிஞன் ஒதுங்கிப் போகிறான். உண்மையை உயிராகக் கொண்டவன் கவிஞன். அறமறிந்து ஒழுகுபவன். பிறாரால் ஆளமுடியாதவன். தன்னைத் தான் ஆள்கிறவன். தலைவனை அறிந்து அடைந்தவன். மக்கள் மொழியில் விபத்தானதை சம்பத்து எனக் கொள்பவன். கவிஞனை இப்படி இனம் காண்கிறார் வெள்ளியங்காட்டான். அவருடைய கவிதைகளை ஐந்து ஒலி நூல்களாக பேராசிரியர் ரமணி அளிக்கிறார். இந்த முதல் ஒலிநூலில் சமுதாயம் என்ற துணைத் தலைப்பில் அவருடைய 35 கவிதைகள். 
     
    Ver livro
  • Stainless Steel Paathregalu - cover

    Stainless Steel Paathregalu

    Vasudhendra

    • 0
    • 0
    • 0
    ತಾಯಿ ಮತ್ತು ಮಗನ ನಡುವಿನ ಸೂಕ್ಷ್ಮ ಒಡನಾಟದ ಹೃದ್ಯ ಬರಹಗಳು. ಈ ಪುಸ್ತಕಕ್ಕೆ ರಾಜ್ಯ ಸಾಹಿತ್ಯ ಅಕಾಡೆಮಿಯ ಪುಸ್ತಕ ಬಹುಮಾನ ಬಂದಿದೆ.
    Ver livro
  • Vazhipokkan - cover

    Vazhipokkan

    Saavi

    • 0
    • 0
    • 0
    உலகத்தில் எல்லோரும் வழிப்போக்கர்களே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். சிலர் எங்கே போகிறோம் என்கிற லட்சியம் இல்லாமலே போய் கொண்டு இருக்கிறார்கள், சிலர் இருட்டிலே நடக்கிறார்கள், சிலர் வழியிலேயே நடக்கிறார்கள், சிலர் ஒளியைத் தேடி நடக்கிறார்கள், சிலர் கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதையில் நடக்கிறார்கள். சிலர் பட்டு விரித்த பாதையில் நடக்கிறார்கள். இரண்டுங்கெட்ட இடர்ப்பட்ட நிலையில் இடை வழியிலேயே பயணத்தை முடித்துக் கொள்பவர்களும் பலர். அவ்வப்போது வறுமையின் கொடுமை பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இடையிடையே குறுக்கிடும் இடையூறுகளையும் தோல்விகளையும் எதிர்த்துப் போராடிய வண்ணம் வாழ்க்கையை பஞ்சினும் லேசாக மதித்து புன்னகைத்தபடியே முன்னேற்றம் காண வழி தேடும் சுந்தரத்தின் கதைதான் இந்த வழிப்போக்கன்.
    Ver livro
  • Yashasina Vasane - cover

    Yashasina Vasane

    Shanthinath Desai

    • 0
    • 0
    • 0
    ಶಾಂತಿನಾಥ ದೇಸಾಯಿ ಅವರು ಪ್ರಮುಖ ಆಧುನಿಕ ಕನ್ನಡ ಲೇಖಕರಾಗಿದ್ದಾರೆ ಮತ್ತು ಅವರ ಕಥೆಗಳು ಮಾನವ ಸಂಬಂಧಗಳ ವಿಷಯಗಳೊಂದಿಗೆ ವ್ಯವಹರಿಸುತ್ತದೆ ಮತ್ತು ಬದಲಾಗುತ್ತಿರುವ ಸಮಾಜದ ಸವಾಲುಗಳನ್ನು ಮತ್ತು ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಮೌಲ್ಯಗಳಿಂದ ಅದರ ದಿಕ್ಚ್ಯುತಿಯನ್ನು ಅನ್ವೇಷಿಸುತ್ತದೆ.
    Ver livro
  • Parrr - cover

    Parrr

    Vaikom Mohammed Bashir

    • 0
    • 0
    • 0
    முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். 'ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்' (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.
    Ver livro