Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
சிறகடிக்க ஆசை! - cover

சிறகடிக்க ஆசை!

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

லேகா காலேஜ் முடிந்து வீடு திரும்பியபோது - சாயந்தரம் ஆறு மணி.பாத்ரூம் ஷவரில் பதினைந்து நிமிஷங்கள் நனைந்து விட்டு ரோஜாப் பூ நிற நைட்டிக்குள் நுழைந்தாள் லேகா.டொக்...டொக்...டொக்...கதவுத் தட்டல் கேட்டதைத் தொடர்ந்து குரல் கொடுத்தாள்.“யாரு...?”“நான்தாம்மா...”அறைக்கு வெளியே இருந்து வேலைக்காரி தங்கத்தின் குரல் கேட்டது.“உள்ளே வா...”ஆவி பறக்கும் டிகிரி காபியோடு உள்ளே வந்தாள் அவள்.“இந்தாங்கம்மா காபி...”“அப்படி டேபிள் மேல வெச்சிட்டுப் போ...”வழியும் காபிக் கோப்பையை சிந்தாமல் கவனமாய் மேஜையின் மேல் வைத்துவிட்டு தயக்கமாய் நின்றிருந்தாள் தங்கம்மேஜைக்கருகே இருந்த பர்சனல் கம்ப்யூட்டரில் உறையை நீக்கிக் கொண்டே அவளைப் பார்த்தாள் லேகா.“என்ன வேணும் தங்கம்...”“அ... அய்யா கொஞ்ச நேரத்துக்கு முன்னால போன் பண்ணியிருந்தார் லேகாம்மா...”“எதுக்கு...?”“உங்களைத்தான் விசாரிச்சார்...”“என்ன விசாரிச்சார்...?”“நீங்க காலேஜிலிருந்து வந்தாச்சான்னு கேட்டார்... இல்லைன்னு சொன்னதும்... பதறிப் போய்ட்டார்...”“எத்தனை மணிக்கு போன் பண்ணினார்…?”“அஞ்சு மணிக்கு...”“காலேஜ் நாலரை மணிக்கு முடியுது... டாண்ணு அஞ்சு மணிக்கு வீடு வந்து சேர முடியுமா...? லைப்ரரிக்குப் போக வேண்டியிருக்கும்... அல்லது ப்ரொபசர்கள்கிட்டே சந்தேகம் கேக்க வேண்டியிருக்கும்...”“உங்க கவலை உங்களுக்கு... அவர் கவலை அவருக்கு… அவர் இருக்கறப்ப லேட் ஆனா பரவாயில்லை... அவர் வெளியூர் போயிருக்கிறப்ப நீங்க வீடு வந்து சேர லேட் ஆச்சுன்னா... அய்யா என்னை சத்தம் போடுவார்ம்மா...”“அவரோட கவலையில் கொஞ்சம்கூட நியாயம் இல்லை தங்கம்... நான் ஒண்ணும் பச்சைக் குழந்தை இல்லை...”“அவருக்கு நீங்க என்னிக்குமே குழந்தைதாம்மா... பெண்ணைப் பெத்தவங்களுக்கு அவளை ஒருத்தன்கிட்டே கட்டிக்குடுக்கற வரைக்கும் வயத்தில் நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கிற மாதிரிதான் இருக்கும்...”“இட்ஸ் ஹைலி இடியாட்டிக்.”“என்னவோ இங்கிலீஷில் திட்டறீங்கன்னு தெரியுது. நாளைக்கு நீங்க ஒரு பொண்ணுக்கு அம்மா ஆனிங்கன்னா அப்போதுதான் உங்க அப்பாவோட கவலை என்னன்னு உங்களுக்கு நிஜமாவே புரியும். அதுவரைக்கும் அவர் மேல் உங்களுக்குக் கோபம்தான் வரும்...”“கவலையானாலும் சரி... சந்தோஷமானாலும் சரி... அது நியாயமாவே இருந்தாலும் அளவோட இருக்கணும்... அளவுக்கு மீறி கவலைப்படக்கூடாது... இவர் அளவுக்கு மீறி கவலைப்படறார்... அவர் கவலைப்படறாரா... இல்லை நான் தப்பான பாதையில் போயிடுவேன்னு சந்தேகப்படறாரான்னு எனக்குப் புரியலை...”“இல்லைம்மா...”என்று வார்த்தைகளை ஆரம்பித்த தங்கத்தைப் பாதியில் மறித்தாள் லேகா.“உன்னோட லெக்ச்சர் போதும்... மறுபடியும் அவர் போன் பண்ணினார்ன்னா. நான் பத்திரமா வீடு வந்து சேர்ந்தாச்சுன்னு சொல்லிடு...”“சரிம்மா...”தலையசைத்து விட்டுத் தங்கம் நகர்ந்த விநாடி -டிரிங்...டிரிங்...டிரிங்...டெலிபோன் வீறிட ஆரம்பித்தது.“அய்யாவாகத்தான் இருக்கும்மா...” என்று சொல்லிவிட்டு தங்கம் அறையைக் கடந்தாள்.ரிசீவரை எடுத்துக் காதில் பொருத்தி “ஹலோ...” என்றாள் லேகா.தங்கம் சொன்ன மாதிரியே ராமகிருஷ்ணன்தான் பேசினார்.“லேகா... வந்துட்டியாம்மா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் கூப்பிட்டேன்... நீ இன்னும் வீட்டுக்கு வரலைன்னு வேலைக்காரி சொன்னா...”“காலேஜில் ஒரு ப்ரொபசர்கிட்டே சந்தேகம் கேக்கப் போயிருந்தேன்...”“அப்படி ஏதாவது இருந்தா... வீட்டுக்கு ஒரு போன் அடிச்சு சொல்லிடு லேகா... நான் வெளியூரிலிருந்தாலும் மனசெல்லாம் உன் மேலேயே இருக்கும்.”“அப்பா... இட் ஈஸ் டூ மச்...”“என்னோட கவலை உனக்குப் புரியாது...”“நான் எங்கே போனாலும் பைக்கிலும் காரிலும் நீங்க அனுப்பற செக்யூரிட்டி ஆட்கள் நிழல் மாதிரி வர்றாங்களே… அவங்களுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்திட்டிங்கனா நான் எங்கே இருக்கேன்... என்ன பண்றேன்னு அவங்க மூலமாகவே தெரிஞ்சிக்கலாமே...?”“லே… லேகா...”“என்னப்பா அதிர்ச்சி ஆயிட்டிங்க..?”
Available since: 02/08/2024.
Print length: 88 pages.

Other books that might interest you

  • Neela Nilaa - cover

    Neela Nilaa

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Students studying archaeology decide to venture into a deep forest to research about an old fort. Despite the warnings by the forest department, they enter the forest. Did they reach the fort? What is the relationship between the fort and moon? What is Blue Moon? Listen to Neela Nila!
    
    அடர்த்தியான ஒரு காட்டுப்பகுதிக்குள் இருக்கிறது ' காணாதது கண்டான் ' என்கிற ஒரு பழங்காலத்து கோட்டை. எந்த காலத்திலோ கட்டப்பட்ட அந்தக் கோட்டையை ஆய்வு செய்வதற்காக ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த சில ஆராய்ச்சி மாணவ மாணவிகள் வருகிறார்கள். வனத்துறை எச்சரிக்கையையும் மீறி அவர்கள் காட்டுப் பகுதிக்குள் நுழைகிறார்கள்.
    அவர்களால் ' காணாதது கண்டான் ' கோட்டையை அடைய முடிந்ததா.....? எதைத் தேடி அவர்கள் வந்தார்கள். அவர்கள் தேடிவந்த பொருளுக்கும் நிலாவுக்கும் என்ன சம்பந்தம்? நிலா சரி! அது என்ன நீல நிலா ......... ?
    Show book
  • Velvet Kutrangal - cover

    Velvet Kutrangal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    What happened to the flight that started from Malaysia to Beijing? There is a possibility noone even thought about? Listen to this racy thriller to know more.
    
    மலேசியாவிலிருந்து பீஜிங் புறப்பட்ட விமானம் என்னவாயிற்று? யாருமே நினைத்து பார்க்க முடியாத ஒரு சாத்தியம் இருந்தது. அதை ஜெட் வேகத்தில் சொல்கிறது இந்த வெல்வெட் குற்றங்கள்.
    Show book
  • Oru Poi Podhum - cover

    Oru Poi Podhum

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    ஓரு பிரபலமான இசையமைப்பாளர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் கொலையில் பல பேர் மேல் சந்தேகம் ஏற்படுகிறது. விசாரணையின் முடிவில் அதிர்ச்சியான முடிவு காத்திருக்கிறது.
    Show book
  • Jeiyppathu Nijam - cover

    Jeiyppathu Nijam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இலட்சியா -95 அதி நவீன ரக விமானத்தை பற்றிய சில இரகசிய குறிப்புகள் வெளிநாட்டவர்களுக்கு விற்க படுவதாக இரகசிய தகவல் டெல்லியில் உள்ள நேஷனல் செக்யூரிட்டி ஃபோர்ஸிடமிருந்து தகவல், சென்னையில் உள்ள விவேக்கிற்கு வர உடனே டெல்லிக்கு விரைகிறான்.
    இலட்சியா -95 பற்றிய சில இரகசிய தகவல்கள் சேட்டர்ஜி, மெஹரா மற்றும் விஷ்ணு வர்த்தன் இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரியும், இதில் இருவர் கொல்லப்படுகின்றனர். கடைசியில் தீவிர இரகசிய குழுவில் உள்ள ஒரு கருப்பாடு யார்? என்று கண்டறிந்த இரகசியங்களை எவ்வாறு மீட்கின்றனர் என்பதை அறிய கேளுங்கள் ஜெயிப்பது நிஐம்..
    Show book
  • Detective DK - Case No:04 - சாத்தான்காட்டு ரகசியம் - Where death waits! - cover

    Detective DK - Case No:04 -...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    பல நூறு ஆண்டுகளாக யாரும் அணுக முடியாத சாத்தான்காடு. அங்கு நுழைந்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து போனார்கள். ஆனால் அந்தக் காட்டுக்குள் அமானுஷ்யத்தைத் தாண்டி ஒரு பெரிய ரகசியம் புதைந்திருக்கிறது. நம் நாயகன் DK எவ்வாறு அந்த மர்மத்தை வெளிக்கொண்டு வருகிறான் என்பதைக் காண இந்த வீடியோவைப் பார்க்கவும். மர்மம், திகில், சாகசம் நிறைந்த இந்த படைப்பை தவற விடாதீர்கள்! 
    Pala nooru aandugalaga yaarum anaaga mudiyatha Saathaan Kaadu… Anga pona yellaaarum marma maathiri sethutu vandhirkanga. Aana andha kaattukulla oru periya ragasiyam amanooshyatha thaandi marandhu irukku. Nam hero DK eppadi andha marma ragasiyatha veli kondu varraan-nu kaanum idha video miss pannadheenga! Marmam, thigil, saagasam niraintha oru vera level experience. 
    An Ancient Forest. A Deadly Curse. One Man Dares to Enter. For centuries, no one has returned alive from Saathankadu – a forest whispered to be cursed. Those who entered met mysterious and violent deaths. Locals speak of ghostly shadows, whispers in the dark, and an unseen presence that guards something… ancient. But when a strange symbol connected to a powerful political figure appears in the forest's border, Detective DK and Rishi must step in not just to uncover the truth, but to survive it. What lies beyond the fear? A lost history? A hidden power? Saathankadu Ragasiyam is the fourth thrilling adventure in the Detective DK Investigations series - blending psychological horror, Tamil folklore, and raw investigation in one unforgettable tale.
    Show book
  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. 
    Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place.
    Show book