¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
சிறகடிக்க ஆசை! - cover

சிறகடிக்க ஆசை!

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

லேகா காலேஜ் முடிந்து வீடு திரும்பியபோது - சாயந்தரம் ஆறு மணி.பாத்ரூம் ஷவரில் பதினைந்து நிமிஷங்கள் நனைந்து விட்டு ரோஜாப் பூ நிற நைட்டிக்குள் நுழைந்தாள் லேகா.டொக்...டொக்...டொக்...கதவுத் தட்டல் கேட்டதைத் தொடர்ந்து குரல் கொடுத்தாள்.“யாரு...?”“நான்தாம்மா...”அறைக்கு வெளியே இருந்து வேலைக்காரி தங்கத்தின் குரல் கேட்டது.“உள்ளே வா...”ஆவி பறக்கும் டிகிரி காபியோடு உள்ளே வந்தாள் அவள்.“இந்தாங்கம்மா காபி...”“அப்படி டேபிள் மேல வெச்சிட்டுப் போ...”வழியும் காபிக் கோப்பையை சிந்தாமல் கவனமாய் மேஜையின் மேல் வைத்துவிட்டு தயக்கமாய் நின்றிருந்தாள் தங்கம்மேஜைக்கருகே இருந்த பர்சனல் கம்ப்யூட்டரில் உறையை நீக்கிக் கொண்டே அவளைப் பார்த்தாள் லேகா.“என்ன வேணும் தங்கம்...”“அ... அய்யா கொஞ்ச நேரத்துக்கு முன்னால போன் பண்ணியிருந்தார் லேகாம்மா...”“எதுக்கு...?”“உங்களைத்தான் விசாரிச்சார்...”“என்ன விசாரிச்சார்...?”“நீங்க காலேஜிலிருந்து வந்தாச்சான்னு கேட்டார்... இல்லைன்னு சொன்னதும்... பதறிப் போய்ட்டார்...”“எத்தனை மணிக்கு போன் பண்ணினார்…?”“அஞ்சு மணிக்கு...”“காலேஜ் நாலரை மணிக்கு முடியுது... டாண்ணு அஞ்சு மணிக்கு வீடு வந்து சேர முடியுமா...? லைப்ரரிக்குப் போக வேண்டியிருக்கும்... அல்லது ப்ரொபசர்கள்கிட்டே சந்தேகம் கேக்க வேண்டியிருக்கும்...”“உங்க கவலை உங்களுக்கு... அவர் கவலை அவருக்கு… அவர் இருக்கறப்ப லேட் ஆனா பரவாயில்லை... அவர் வெளியூர் போயிருக்கிறப்ப நீங்க வீடு வந்து சேர லேட் ஆச்சுன்னா... அய்யா என்னை சத்தம் போடுவார்ம்மா...”“அவரோட கவலையில் கொஞ்சம்கூட நியாயம் இல்லை தங்கம்... நான் ஒண்ணும் பச்சைக் குழந்தை இல்லை...”“அவருக்கு நீங்க என்னிக்குமே குழந்தைதாம்மா... பெண்ணைப் பெத்தவங்களுக்கு அவளை ஒருத்தன்கிட்டே கட்டிக்குடுக்கற வரைக்கும் வயத்தில் நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கிற மாதிரிதான் இருக்கும்...”“இட்ஸ் ஹைலி இடியாட்டிக்.”“என்னவோ இங்கிலீஷில் திட்டறீங்கன்னு தெரியுது. நாளைக்கு நீங்க ஒரு பொண்ணுக்கு அம்மா ஆனிங்கன்னா அப்போதுதான் உங்க அப்பாவோட கவலை என்னன்னு உங்களுக்கு நிஜமாவே புரியும். அதுவரைக்கும் அவர் மேல் உங்களுக்குக் கோபம்தான் வரும்...”“கவலையானாலும் சரி... சந்தோஷமானாலும் சரி... அது நியாயமாவே இருந்தாலும் அளவோட இருக்கணும்... அளவுக்கு மீறி கவலைப்படக்கூடாது... இவர் அளவுக்கு மீறி கவலைப்படறார்... அவர் கவலைப்படறாரா... இல்லை நான் தப்பான பாதையில் போயிடுவேன்னு சந்தேகப்படறாரான்னு எனக்குப் புரியலை...”“இல்லைம்மா...”என்று வார்த்தைகளை ஆரம்பித்த தங்கத்தைப் பாதியில் மறித்தாள் லேகா.“உன்னோட லெக்ச்சர் போதும்... மறுபடியும் அவர் போன் பண்ணினார்ன்னா. நான் பத்திரமா வீடு வந்து சேர்ந்தாச்சுன்னு சொல்லிடு...”“சரிம்மா...”தலையசைத்து விட்டுத் தங்கம் நகர்ந்த விநாடி -டிரிங்...டிரிங்...டிரிங்...டெலிபோன் வீறிட ஆரம்பித்தது.“அய்யாவாகத்தான் இருக்கும்மா...” என்று சொல்லிவிட்டு தங்கம் அறையைக் கடந்தாள்.ரிசீவரை எடுத்துக் காதில் பொருத்தி “ஹலோ...” என்றாள் லேகா.தங்கம் சொன்ன மாதிரியே ராமகிருஷ்ணன்தான் பேசினார்.“லேகா... வந்துட்டியாம்மா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் கூப்பிட்டேன்... நீ இன்னும் வீட்டுக்கு வரலைன்னு வேலைக்காரி சொன்னா...”“காலேஜில் ஒரு ப்ரொபசர்கிட்டே சந்தேகம் கேக்கப் போயிருந்தேன்...”“அப்படி ஏதாவது இருந்தா... வீட்டுக்கு ஒரு போன் அடிச்சு சொல்லிடு லேகா... நான் வெளியூரிலிருந்தாலும் மனசெல்லாம் உன் மேலேயே இருக்கும்.”“அப்பா... இட் ஈஸ் டூ மச்...”“என்னோட கவலை உனக்குப் புரியாது...”“நான் எங்கே போனாலும் பைக்கிலும் காரிலும் நீங்க அனுப்பற செக்யூரிட்டி ஆட்கள் நிழல் மாதிரி வர்றாங்களே… அவங்களுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்திட்டிங்கனா நான் எங்கே இருக்கேன்... என்ன பண்றேன்னு அவங்க மூலமாகவே தெரிஞ்சிக்கலாமே...?”“லே… லேகா...”“என்னப்பா அதிர்ச்சி ஆயிட்டிங்க..?”
Disponible desde: 08/02/2024.
Longitud de impresión: 88 páginas.

Otros libros que te pueden interesar

  • Engae En Kannan - cover

    Engae En Kannan

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    An atheist gets hold of a Krishna Idol that has been worshiped by an Iyengar family. Upon receiving instructions from the Iyengar, he worships the idol. What happens after this? Listen to Enge En Kannan.
    
    பல தலைமுறைகளாக ஒரு ஐயங்கார் குடும்பத்தில் ஒரு கிருஷ்ண விக்கிரகம் பூஜிக்கப்பட்டு வருகிறது. காசி யாத்திரை செல்லும் சமயம் விக்கிரகத்தையும் உடன் எடுத்து செல்கிறார் ஐயங்கார். ரயில் பயணத்தில் கிருஷ்ண விக்கிரக பெட்டி, கடவுள் இல்லை என்று சொல்லும் ஒரு நாத்திகன்  வசம் கிடைக்கிறது. அவன் நாத்திகன் ஆனால் நல்லவன். ஐயங்கார் அவனை கண்டறிந்து தன் சார்பில் அந்த விக்கிரகத்தை பூஜிக்க சொல்கிறார். அவனும் அவருக்காக பூஜிக்கிறான். அதுவரை வராத கிருஷ்ணனும் வருகிறான். அதிசயங்கள் புரிகிறான். எப்படி? பலவித திருப்பங்கள் கொண்ட பரபரப்பான கதை.
    Ver libro
  • Detective DK - The First Case: Maranathin Marupakkam - A Perfect Crime One Flaw - cover

    Detective DK - The First Case:...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    மிகச் சிறந்த திட்டமிடலுடன் செய்யப்பட்ட கொலை... அனைத்து சாட்சியங்களையும் அழித்து, புதிய அடையாளத்துடன் வாழ்ந்த கொலையாளி... ஆனால் ஒரே ஒரு சிறிய தவறு அவரை சிக்க வைத்தது. அந்த தவறு என்ன? எப்படி எந்த தவறு அவரை காட்டிக்கொடுத்தது? டி.கே.வின் அறிவியல் பூர்வமான விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தரும் உண்மைகள்! 
    Miga sirandha thittamidhaludan seyyappatta kolai... anaitthu saatchiyangalaiyum azhithu, pudhiya adaiyaalathudan vaazhntha kolaiali... aana ore oru siriya thavaru avarai sikka vaithadhu. Andha thavaru enna? Eppadi andha thavaru avarai kaattikoduthadhu? DK-vin ariviyal poorvamaana visaranaiyil velivarum adhirshti tharum unmaigal! 
    A perfect crime. No evidence. A killer who vanished into a new identity. But one small mistake brings everything crashing down. What was that mistake? How did Detective DK uncover the shocking truth through pure logic and science? Dive into a gripping Tamil crime thriller where every page pulls you closer to a mind-blowing revelation. 'Maranathin Marupakkam' is the first intense case of Detective DK - a brilliant investigator with a sharp eye for hidden details. This is not just a story - it’s a psychological puzzle, a race against time, and a face-off with death.
    Ver libro
  • Ettu Bommai Kaaval - cover

    Ettu Bommai Kaaval

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Usually villages have one guardian deity but this village has eight deities on the eight entrances into the village. There is a treasure hidden in the village and it is impossible to loot it. Someone tries to loot it. What happens? Listen to Ettu Bommai Kaaval.
    
    கிராமங்களில் நுழைமுகத்தில் காவல் தெய்வம் என்று ஒன்றிருக்கும். ஆனால் ஒரு கிராமத்தில் அதன் எட்டு திசையிலும் காவல் தெய்வங்கள் உள்ளன. கிராமத்துக்குள் ஒரு தங்கப்புதையல். அந்த தெய்வங்களை மீறி அதை ஒருவர் கொண்டு செல்ல முடியாது.  ஒருவன் முயல்கிறான்! முடிந்ததா அவனால்?
    Ver libro
  • Adhu Mattum Ragasiyam - cover

    Adhu Mattum Ragasiyam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    எண்பது வயதில் ஒரு முரட்டு மனிதர்! இந்த வயதிலும் பெண்ணாசை. இவருக்கு பயந்தால் தான் ஊரில் வாழவே முடியும். இவர் வாழும் ஊரில் ஒரு மூடப்பட்ட கோவில். இதன் கதவை திறக்க கூடாது. திறந்தால் ஊர் அழியும். கதவின் பின்புறம் உள்ள மர்மம் என்ன? இந்த கோவிலை திறக்க விடாமல் பாதுகாக்கும் முரட்டு மனிதர் யார்? ஒரு காதல் ஜோடி இவரால் படும் பாடு? கதவு திறந்ததா? கேளுங்கள் அது மட்டும் ரகசியம்.
    Ver libro
  • Ragasiyamaga Oru Ragasiyam - cover

    Ragasiyamaga Oru Ragasiyam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    The temple in the village of Siddharpatti is closed everyday at 6PM. Anyone who stays inside the temple post 6 PM gets killed by KaalaBhairava. Listen to this intriguing thriller to know why.
    
    சித்தர்பட்டி ஒரு கிராமம் -இங்கே சித்தர்கள் கட்டிய சிவன் கோயில் ஒரு அதிசயம்.இந்த கோயில் மாலை ஆறு மணியானால் மூடப்படும். ஆறு மணிக்கு மேல் கோயிலுக்குள்  யார் இருந்தாலும் காலபைரவனால் கொல்லப்படுவார். ஏன் அப்படி? திருப்பமும் பரபரப்பும் நிறைந்த திரில்லர் தான் ரகசியமாக ஒரு ரகசியம்.
    Ver libro
  • Iravu Nera Suriyagandhi - cover

    Iravu Nera Suriyagandhi

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ஒரு இளம் பெண்ணின் குற்றச்சாட்டை எதிர்கொண்ட காந்தியவாதியின் குடும்பம் பிரச்சனையில் சிக்குகிறது. முழு குடும்ப உறுப்பினர்களும் விசாரணை முறையில் மூழ்கியுள்ளனர். ஆனால் அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டபோது,
    Ver libro