¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
சொர்க்க வாசல்! - cover

சொர்க்க வாசல்!

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

அண்ணன் நடராஜ் நின்றிருந்த தோரணையும் “யார்றி அவன்” என்று குரலை ஒருமாதிரி இழுத்துக் கேட்ட விதமும் சௌந்தர்யாவின் வயிற்றில் ஓர் அவஸ்தையான ரசாயன கலவையை ஏற்படுத்த கையில் வைத்திருந்த தண்ணீர் பாத்திரம் தானாய் நழுவியது.“டிங்...டிணார்”“அ... அண்ணா...” சௌந்தர்யாவின் பெரிய விழிகள் நட்ராஜ் முகத்திலேயே திகைத்து நின்றது. நெற்றியிலும் மேலுதட்டிலும் அவசர அவசரமாய் அரும்பிவிட்ட வியர்வைச்சுரங்கள் வழிய நேரம் பார்த்தன.“அவன் யார்னு கேட்டேன்”“வ... வந்து... வந்து...”பாத்திரம் விழுந்த சத்தம் கேட்டு அறைக்குள் எட்டிப் பார்த்த சிவசாமி சௌந்தர்யாவின் நிலைமையைப் பார்த்ததும் முகம் மாறினார்.“டேய் என்னடா நடந்தது?”அப்பாவைப் பொருட்படுத்தவில்லை. நடராஜ் வாயில் இருந்த டூத் பேஸ்ட் நுரையை சமையலறை ஜன்னல் வெளியே தோட்டத்து செடிகள் மீது உமிழ்ந்துவிட்டு சௌந்தர்யாவின் பக்கம் கண்கள் சிவக்க திரும்பினான்.“யாரவன்?”எச்சில் விழுங்கினாள்.“காதலிக்கிறியா?”“ஆ... ஆமா...” சொல்லி முடிப்பதற்குள் உடம்பு பூராவும் சில்லிட்டுப் போன மாதிரியான உணர்வு.“எத்தனை நாளா?“மூ... மூணு மாசமா”“அவன் பேர் என்ன?”“வ... வருண்”“என்ன ஜாதி”“ந... நம்ம ஜாதிதான்”‘என்ன அண்ணன் இவ்வளவு நிதானமாய் பேசிக்கொண்டிருக்கிறார்’ என்று சௌந்தர்யா நினைத்த வினாடி -நடராஜ் கத்தினான். “ரோகிணி என் பெல்ட்டைக் கொஞ்சம் எடுத்துட்டு வா”அந்தக் கத்தலுக்காகவே காத்திருந்த ரோகிணி சமையலறைக்குள் நுழைந்தாள். கையில் பாம்பு சட்டை உரித்த மாதிரியான பெல்ட்.சிவசாமி பதறிப்போய் நடராஜின் தோளைப் பற்றினார். “டேய்...”“அப்பா இவளை காலேஜுக்கு அனுப்பக்கூடாதுன்னு நான் முடிவு பண்ணினப்ப நீங்க என்ன சொன்னீங்க? சௌந்தர்யா படிக்க ரொம்ப ஆசைப்படறா, படிக்க வையேன்டான்னு சொன்னீங்க. உங்க பேச்சைக் கேட்டு காலேஜுக்கு அனுப்பினேன். இப்ப இவ என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கா தெரியுமாப்பா? இவபடிக்க ஆசைப்படலை. காதலிக்க ஆசைப்பட்டிருக்கா. ஆம்பிளை சுகத்துக்காக...”“டேய் நிறுத்துடா... பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு போகாதே. இந்த வயசுல இதெல்லாம் சகஜம். அந்தப் பையன் யாரு. என்னன்னு விசாரிப்போம். நம்ம குடும்பத்துக்கு ஏத்த குடும்பமாய் இருந்தா...”“சம்பந்தம் பேசலாம்னு சொல்றீங்களா?”“ஆமா! சௌந்தர்யா சொல்லிட்டா. பையன் ஜாதி பிரச்சினை ஓவர். வேற ஏதாவது பிரச்சனைகள் இருக்கான்னு பார்த்துட்டு...”ரோகிணி குறுக்கிட்டாள்.
Disponible desde: 16/01/2024.
Longitud de impresión: 90 páginas.

Otros libros que te pueden interesar

  • Uyirin Marupakkam - cover

    Uyirin Marupakkam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Where is the soul in your body? How does it leave the body when someone's dead? Only mystics know! A mystic returns after his death. A journalist who investigates this story. A very different yet intriguing story. Listen to Uyirin Marupakkam.
    
    உடம்பில் உயிர் எந்த பாகத்தில் இருக்கிறது? அது எப்படி வெளியேறுகிறது? இந்த கேள்விகளுக்கு சித்தர்களை தவிர யாருக்கும் விடை தெரியாது. இறந்தபின் திரும்ப உயிரோடு வரும் ஒரு சித்த சன்யாசி. அது எப்படி என்று ஆராயும் பத்திரிகையாளன். வித்தியாசமான களம், விறுவிறுப்பான போக்கு.
    Ver libro
  • Mandhira Muzhakkam - cover

    Mandhira Muzhakkam

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    பழங்காலத்தில் ஏழீக்கரை கிராமத்தில் கொடிகட்டிப் பறந்திருந்த குடும்பம் பொன்னாட்டு மனை . மூத்த வாரிசுகளின் ஆடம்பர சுகபோகமான வாழ்க்கை முறைகளால் இன்று வறுமையில் தள்ளப்பட்டு அந்த குடும்பத்தில் மீதம் உள்ளவர்கள், பத்ரன நம்பூதிரியும் இருபத்தேழு வயதான வேலை இல்லா பட்டதாரி மகன் கிருஷ்ணன் உண்ணியும் தான். கிருஷ்ணன் உண்ணி வீட்டில் இருந்த பழைய ஓலைசுவடிகளை புரட்ட, முன்னோர்களின் நினைவு எழுந்து அவர்களை விட கெட்டிக்காரனாக வேண்டும் என்கிற ஆசை கொள்கிறான்.
    
    இந்நிலையில் புகழ்பெற்ற நம்பூதிரி குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருத்தியின் திருமணம் மூன்றாவது தடவையாக தடைப்பட , இந்த சம்பவங்களின் பின்னணியை தெரிந்து கொள்வதற்காக பெண் வீட்டார் பிரஸ்னம் பார்க்க முடிவுசெய்கிறார்கள். தந்தையின் தூண்டுதலால் அங்கு செல்லும் கிருஷ்ணன் உண்ணி நம்பூதிரியின் பெண் திருமணம் நடைபெற , தன் திறமையை செயல் படுத்தி என்ன செய்கிறான் என்பதை அறிய கேளுங்கள் "மந்திர முழக்கம்"
    Ver libro
  • Vivek Irukka Bayamen - cover

    Vivek Irukka Bayamen

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    This is a political thriller. A dramatic political change in Tamil Nadu. Work is going on behind the scenes for the plot to occur. For that an MP is coming to Chennai from Delhi with a bizarre plan. Traumatic events are layered within the execution of that plan. Unexpected deaths. Vivek is all set to find out the facts. Listen to Vivek Irukka Bayamen to know how he sets things in place.
    
    இது ஒரு அரசியல் த்ரில்லர். தழிழ்நாட்டில் அதிரடியான ஒரு அரசியல் மாற்றம்
    நிகழ்வதற்காக திரைமறைவில் சதி பின்னும் வேலை நடக்கிறது. அதற்காக
    டெல்லியிலிருந்து ஒரு விபரீதமான திட்டத்தோடு எம்.பி.ஒருவர் சென்னைக்கு வருகிறார். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்குள் அடுக்கடுக்காய் அதிர்ச்சி சம்பவங்கள். எதிர்பாராத மரணங்கள். உண்மைகளைக் கண்டறிய விவேக் களம் இறங்குகிறான். விவேக்கின் கூர்மையான விசாரணை உண்மைகளை வெளியே கொண்டு வருகிறது.
    Ver libro
  • Then Kizhakku Minnal - cover

    Then Kizhakku Minnal

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Protagonist who lives in the US with his family is forced to come back to India as his son is dying of some weird disease. He is advised to pray to his family deity. He encounters various supernatural obstacles in his journey. Listen to Then Kizhakku Minnal.
    
    குலதெய்வ வழிபாடு - அதன் பின் உள்ள சக்தியை கூறிடும் நாவல். அமெரிக்காவில் வாழ்ந்துவரும் கதாநாயகனின் மகனுக்கு விசித்திர நோய். குல தெய்வ வழிபாடு செய்தால் குணமாகும் என்கிறது ஜோதிடம். அதன் பொருட்டு இந்தியா வருபவனுக்கு விசித்திர சோதனைகள். அவ்வளவும் அமானுஷ்யம்!
    Ver libro
  • Velvet Kutrangal - cover

    Velvet Kutrangal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    What happened to the flight that started from Malaysia to Beijing? There is a possibility noone even thought about? Listen to this racy thriller to know more.
    
    மலேசியாவிலிருந்து பீஜிங் புறப்பட்ட விமானம் என்னவாயிற்று? யாருமே நினைத்து பார்க்க முடியாத ஒரு சாத்தியம் இருந்தது. அதை ஜெட் வேகத்தில் சொல்கிறது இந்த வெல்வெட் குற்றங்கள்.
    Ver libro
  • Oru Thuli Kadal - cover

    Oru Thuli Kadal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இரண்டு தடங்களை வைத்துக் கதை எழுதுவதில் நிபுணரான ராஜேஷ்குமார் அவர்களின் மற்றோர் படைப்பு.
    ஒருபுறம் அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப்பட்ட குடும்பத்தை கலைக்க பவ்யா என்னும் புயல் வீச வருகிறது. மற்றொருபுறம் தனது தைரியத்தாலும், நேர்மையான தன்மையாலும் வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொள்கிறாள் மற்றொருவள். அப்புயலின் தாக்கத்தால் அக்குடும்பத்தின் நிலையை அறிய கேளுங்கள் " ஒரு துளி கடல்".
    
    இக்கதையை கேட்டும் வாசகர்கள், இருவேறு தடங்களும் ஒரு கட்டத்தில் ஒன்றிணையும்போது ஆச்சரியம் அடைவார்கள். எழுத்தாளரின் கதை நடை நம்மை கதைக்குள் மூழ்கடிக்கிறது.
    Ver libro