Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
அந்த ரத்த நாட்கள் - cover
LER

அந்த ரத்த நாட்கள்

ரமணிசந்திரன்

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

‘ரூபலா...”‘பாரத்’தை தூங்கப் பண்ணிக்கொண்டிருந்த ரூபலா திரும்பினாள். விவேக் ஒரு ஆங்கில வார இதழை கையில் வைத்துக் கொண்டு சிரித்தபடி தெரிந்தான். இரவு பத்துமணி இடம் சென்னை.“என்னவாம்...?’’“ஒரு சர்தார்ஜி ஜோக் சொல்லட்டுமா...?’’“ச்சே...! அந்த மாதிரியான ஜோக்கெல்லாம் என்கிட்டே வேண்டாம்...”விவேக் அவளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.“அய்யய்யே...! நீ நினைக்கிற மாதிரி அது செக்ஸ் ஜோக் கிடையாது.’’“பின்னே...?”“சொல்றேன் கேட்டுப்பாரு...’’“சரி சொல்லுங்க...”“ஒரு சர்தார்ஜி தவளைகளைப் பத்தி ஆராய்ச்சி பண்றதுல ஒரு பெரிய விஞ்ஞானி. அவரோட ஆராய்ச்சி திறமைக்கு சாம்பிளா ஒரு எக்ஸ்பரிமெண்ட். ஒரு தவளையை பிடிச்சு மேஜைமேல விட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னாராம். உடனே அது தாவி குதிச்சது. உடனே சர்தார்ஜி அந்த தவளையை பிடிச்சு அதனோட நாலு கால்ல ஒரு காலை வெட்டிட்டு மேஜைமேல விட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னாராம். தவளை தன்னோட மூணு காலையும் உபயோகிச்சு குதிச்சதாம். சர்தார்ஜி அந்த தவளையை மறுபடியும் மூணுகால்ல ஒரு காலை வெட்டிட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னாராம். தவளை ரெண்டு காலை உபயோகிச்சு குதிச்சது. சர்தார்ஜி விடலை. தவளையை பிடிச்சு ரெண்டு கால்ல ஒண்ணை வெட்டிட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னார். தவளை கஷ்டப்பட்டு முயற்சி பண்ணி ஒரு காலை உபயோகிச்சு ‘ஜம்ப்’ பண்ணியதாம். சர்தார்ஜி மறுபடியும் தவளையைப் பிடிச்சார். இருந்த ஒரு காலையும் வெட்டிட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னார். அது குதிக்காமே அப்படியே படுத்திட்டிருந்தது. உடனே சர்தார்ஜி தன்னோட ஆராய்ச்சிக் குறிப்பில் இப்படி எழுதினாராம். தவளைக்கு அதன் நான்கு கால்களையும் வெட்டி விட்டால் காது கேட்காது...”ரூபலா வாய்விட்டு சிரித்துக் கொண்டிருக்கும் போதே - வாசலில் காலிங்பெல் கேட்டது.“டி... டிங்...’’விவேக் கையிலிருந்த பத்திரிகையை மேஜை மேல் வீசிவிட்டு எழுந்தான்.‘‘இந்நேரத்துக்கு யார்ன்னு தெரியலை...?”வாசல்பக்கம் போன விவேக் - போலீஸ் துறைக்கு உரிய முன் யோசனையோடு பக்கவாட்டு ஜன்னலைத் திறந்து வாசலைப் பார்த்தான்.ஒரு இளைஞன் நின்றிருந்தான். முப்பது வயது இருக்கலாம். தெரு விளக்கின் வெளிச்சம் மேலே விழுந்ததில் அவனுடைய நிறம் தெரிந்தது. தாடி வளர்க்க ஆரம்பித்திருந்தான். கண்களுக்கு கீழே மெலிதாய் கருவளையங்கள். தோளில் ஒரு ஜோல்னா பை.“யாரு...?”விவேக் கேட்க -அவன் சட்டென்று குரல் வந்த பக்கமாய் திரும்பி - க்ரில் ஜன்னலில் தெரிந்த விவேக்கைப் பார்த்துகும் பிட்டான்.“வணக்கம் ஸார்... என் பேர் சங்கரநாராயணன். உங்களைப் பார்த்து பேசறதுக்காகத்தான் வந்தேன்...’’அவனுடைய குரலும் முகபாவமும் இவன் ஆபத்தானவன் இல்லை என்பதை விவேக்கிற்கு உணர்த்த - கதவுக்கு போய் தாழ்ப்பாளை விலக்கினான்.அந்த சங்கரநாராயணன் உள்ளே வந்தான். மறுபடியும் வணக்கம் சொன்னான்ஸார்! ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி உங்கக்கிட்டே பேசணும். நீங்க வீட்ல இருப்பீங்களோ... இல்லை... வெளிநாடு ஏதாவது போயிருப்பீங்களோன்னு பயந்துட்டே வந்தேன்.”‘‘என்ன விஷயம்...?’’‘‘உட்கார்ந்து பேசணும் ஸார்... எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம்...’’விவேக் வரவேற்பறையிலிருந்த நாற்காலியைக் காட்டிவிட்டு தானும் உட்கார்ந்தான்.“ம்... சொல்லு...’’ அவன் மெல்லிய குரலில் பேச்சை ஆரம்பித்தான்.‘‘எனக்கு சொந்த ஊர் காங்கயம் ஸார். என்ஜினீயரிங் படிச்சு முடிச்சுட்டு வேலைக்காக ட்ரை பண்ணிட்டிருக்கேன்...‘‘சரி...’’‘‘ஸ... ஸார்... நான் இப்போ உங்ககிட்டே சொல்லப் போற விஷயம் என்னோட எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடியதுதான், இருந்தாலும்... அதைப் பத்தி கவலைப்படாமே உங்ககிட்டே வந்திருக்கேன்...’’‘‘நீ இன்னும் விஷயத்துக்கே வரலை...’’“வந்துட்டேன் ஸார்...” சொன்னவன் தன்னுடைய ஜோல்னாப்பைக்குள் கையை நுழைத்து ஆடியோ காஸெட் ஒன்றை எடுத்தான்.“இதை டேப் ரிக்கார்டரில் போட்டுப் பாருங்க... ஸார்...விவேக் அந்த கேஸட்டை வாங்கி - திருப்பிப் பார்த்து - அது ஒரு சாதாரண கேஸட்தான் என்று ஊர்ஜிதமானதும் - உள்ளே போய் ரிக்கார்ட் பிளேயரைக் கொண்டு வந்து - கேஸட்டை அதன் வாய்க்குள் திணித்து - ப்ளே பட்டனைத் தட்டினான்.டேப் சுழன்றது.காஸட்டினின்றும் வெளிப்பட்ட வார்த்தைகள் -விவேக்கை அதிர்ச்சியில் வீழ்த்தியது. இருதயத்துக்குள் ஒரு பூகம்பம் பதிவாயிற்று
Disponível desde: 08/02/2024.
Comprimento de impressão: 65 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Oru Thuli Kadal - cover

    Oru Thuli Kadal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இரண்டு தடங்களை வைத்துக் கதை எழுதுவதில் நிபுணரான ராஜேஷ்குமார் அவர்களின் மற்றோர் படைப்பு.
    ஒருபுறம் அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப்பட்ட குடும்பத்தை கலைக்க பவ்யா என்னும் புயல் வீச வருகிறது. மற்றொருபுறம் தனது தைரியத்தாலும், நேர்மையான தன்மையாலும் வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொள்கிறாள் மற்றொருவள். அப்புயலின் தாக்கத்தால் அக்குடும்பத்தின் நிலையை அறிய கேளுங்கள் " ஒரு துளி கடல்".
    
    இக்கதையை கேட்டும் வாசகர்கள், இருவேறு தடங்களும் ஒரு கட்டத்தில் ஒன்றிணையும்போது ஆச்சரியம் அடைவார்கள். எழுத்தாளரின் கதை நடை நம்மை கதைக்குள் மூழ்கடிக்கிறது.
    Ver livro
  • Ini Minmini - cover

    Ini Minmini

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    The story starts with petition submitted at the Kovai Collector Office. What is the link between this incident and the mysterious inhabitants of a palace in NewYork? Protagonist Minmini is involved in all this. Why? Listen to Ini Minmini.
    
    கோயம்புத்தூரையும், நியூயார்க்கையும் இணைக்கிற ஒரு கதைக்களம்தான் இந்த நாவல். கோவை கலெக்டர் ஆபீஸில் மனு கொடுக்க வரும் நபரிடம் ஆரம்பமாகும் ஒரு அதிர்ச்சிகரமான விஷயம், நியூயார்க்கில் உள்ள ஒரு பழமையான மாளிகையில் வாழந்து கொண்டு இருக்கும் மர்மமான நபர்களோடு எப்படி சம்பந்தப்படுகிறது. இதில் கதையின் நாயகியான மின்மினியின் பங்கு என்ன என்கிற கேள்விகளுக்கு பதில் தெரியும்போது நமக்கு கிடைப்பது மிகப் பெரிய அதிர்ச்சி.
    Ver livro
  • Detective DK - Case No:04 - சாத்தான்காட்டு ரகசியம் - Where death waits! - cover

    Detective DK - Case No:04 -...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    பல நூறு ஆண்டுகளாக யாரும் அணுக முடியாத சாத்தான்காடு. அங்கு நுழைந்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து போனார்கள். ஆனால் அந்தக் காட்டுக்குள் அமானுஷ்யத்தைத் தாண்டி ஒரு பெரிய ரகசியம் புதைந்திருக்கிறது. நம் நாயகன் DK எவ்வாறு அந்த மர்மத்தை வெளிக்கொண்டு வருகிறான் என்பதைக் காண இந்த வீடியோவைப் பார்க்கவும். மர்மம், திகில், சாகசம் நிறைந்த இந்த படைப்பை தவற விடாதீர்கள்! 
    Pala nooru aandugalaga yaarum anaaga mudiyatha Saathaan Kaadu… Anga pona yellaaarum marma maathiri sethutu vandhirkanga. Aana andha kaattukulla oru periya ragasiyam amanooshyatha thaandi marandhu irukku. Nam hero DK eppadi andha marma ragasiyatha veli kondu varraan-nu kaanum idha video miss pannadheenga! Marmam, thigil, saagasam niraintha oru vera level experience. 
    An Ancient Forest. A Deadly Curse. One Man Dares to Enter. For centuries, no one has returned alive from Saathankadu – a forest whispered to be cursed. Those who entered met mysterious and violent deaths. Locals speak of ghostly shadows, whispers in the dark, and an unseen presence that guards something… ancient. But when a strange symbol connected to a powerful political figure appears in the forest's border, Detective DK and Rishi must step in not just to uncover the truth, but to survive it. What lies beyond the fear? A lost history? A hidden power? Saathankadu Ragasiyam is the fourth thrilling adventure in the Detective DK Investigations series - blending psychological horror, Tamil folklore, and raw investigation in one unforgettable tale.
    Ver livro
  • Then Kizhakku Minnal - cover

    Then Kizhakku Minnal

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Protagonist who lives in the US with his family is forced to come back to India as his son is dying of some weird disease. He is advised to pray to his family deity. He encounters various supernatural obstacles in his journey. Listen to Then Kizhakku Minnal.
    
    குலதெய்வ வழிபாடு - அதன் பின் உள்ள சக்தியை கூறிடும் நாவல். அமெரிக்காவில் வாழ்ந்துவரும் கதாநாயகனின் மகனுக்கு விசித்திர நோய். குல தெய்வ வழிபாடு செய்தால் குணமாகும் என்கிறது ஜோதிடம். அதன் பொருட்டு இந்தியா வருபவனுக்கு விசித்திர சோதனைகள். அவ்வளவும் அமானுஷ்யம்!
    Ver livro
  • Thamaraikulam - cover

    Thamaraikulam

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    பற்பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த யூதா என்ற அதிபயங்கர பெண்பித்துபிடித்த மந்திரவாதியின் பிடியில் சிக்கும் சோபியாவின் குடும்பம், பலவித துர்சம்பவங்களை எதிர்கொள்கிறது. சோபியாவின் வீட்டில் வேலைசெய்யும் கிளாராவும் , கோவிலகத்தை சேர்ந்த உதயனும் இதை கண்டுபிடித்து அதை தடுக்க மாந்திரிக நம்பூதிரி மற்றும் பாதிரியார் காபிரியேல் உதவியை நாடுகிறார்கள். தெய்வ சக்தியினால் தீய சக்தி எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யமிகுந்த திகிலூட்டும் அனுபவங்களுடன் அமைந்த கதை "தாமரைக்குளம்"
    Ver livro
  • Uyirin Marupakkam - cover

    Uyirin Marupakkam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Where is the soul in your body? How does it leave the body when someone's dead? Only mystics know! A mystic returns after his death. A journalist who investigates this story. A very different yet intriguing story. Listen to Uyirin Marupakkam.
    
    உடம்பில் உயிர் எந்த பாகத்தில் இருக்கிறது? அது எப்படி வெளியேறுகிறது? இந்த கேள்விகளுக்கு சித்தர்களை தவிர யாருக்கும் விடை தெரியாது. இறந்தபின் திரும்ப உயிரோடு வரும் ஒரு சித்த சன்யாசி. அது எப்படி என்று ஆராயும் பத்திரிகையாளன். வித்தியாசமான களம், விறுவிறுப்பான போக்கு.
    Ver livro