¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
அன்பின் தன்மையை அறிந்த பின்னே - cover

அன்பின் தன்மையை அறிந்த பின்னே

ரமணிசந்திரன்

Editorial: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinopsis

கண்ணாடி முன் நின்று முகத்தைச் சீர் செய்து கொண்டிருந்த வசுந்தராவுக்கு உள்ளேயிருந்து உத்தர விட்டுக் கொண்டிருந்த தாயின் குரல், எரிச்சலூட்டியது.‘எப்படியாவது, இன்று வருகிறவனையாவது, விட்டு விடாமல் பிடித்துக் கொள்’ என்று, கீறல் விழுந்த ரிக்கார்டு மாதிரி சொல்லிக் கொண்டே இருந்தால், என்ன அர்த்தம்? அவள் என்ன, வருகிறவனின் கையைப் பற்றியா, பிடித்து வைக்க முடியும்?அல்லது, ஒவ்வொருவனாக வந்து, நன்றாக மூக்குப் பிடிக்க முழுங்கிவிட்டு, அவளைத் தட்டிக் கழித்து விட்டுச் செல்வதில்தான், அவளுக்குச் சந்தோஷமா?அன்றி, இப்படி அடிக்கடி யார் முன்னேயாவது காட்சிப் பொருளாக நிற்பதில்தான், மகிழ்ச்சியா?சொல்லப் போனால், முதலிலிருந்தே அவளுக்கு அதில் மிகவும் வெறுப்புதானே? அருவறுப்பும் தானே? அவளும், உயிரோடு உணர்ச்சியும் உள்ள, கூடவே சிந்திக்கவும் தெரிந்த ஒரு மனிதப் பிறவியாயிற்றே என்கிற எண்ணமே இல்லாமல், அவளது மூக்கு, முழி, நிறம் பற்றி விலாவாரியாகப் பேசி, அதற்கு மேல் நகை, தொகை பேரம் நடத்துவதைக் கேட்க, அவளுக்கும் தான் எப்படி இருக்குமாம்?ஒருதரம் வந்தவர்களில், ஓர் அம்மாள், வசுவின் தலைமுடியை இழுத்துக் கூடப் பார்த்தாள். ஒட்டு முடியா என்று பரிசோதித்தாளாம். அதிர்ச்சியும் ஆத்திரமுமாக வசுந்தரா தலையை இழுத்துக் கொண்டு முறைக்க, ‘சந்தையிலே மாடு பிடிக்கும்போதுகூடப் பல்லைப் பிடித்துப் பாராமல் ஓட்டி வருவது இல்லை, வீட்டுக்கு மருமகளைச் சும்மா இழுத்துக் கொண்டு போக முடியுமா?’ என்று கேட்டாள், அந்தப் பெண்மணி.இழுப்பதாமே?மாடும் நானும் ஒன்றா?’ என்று கேட்கத் துடித்த நாவை, உறுத்து நோக்கி, உதட்டின் மீது கை வைத்துக் காட்டிய தாயின் சைகை அடக்க, வசுந்தரா வாயை மூடிக் கொண்டு பேசாதிருந்தாள்.‘இழுத்துக் கொண்டு போவது’ என்று சொன்னதற்காக, அம்மாவுக்கே, அந்த அம்மாள் மேல் ஆத்திரம் வந்திருக்க வேண்டும். அதைவிட்டு, மகளான அவளை அடக்குகிறார்களே என்று, உள்ளூரப் பொறுமிய போதும், தாயின் கோபத்துக்கு அஞ்சி, வசுந்தரா, தலையைக் குனிந்து, தரையைப் பார்த்தபடி சும்மா உட்கார்ந்திருந்தாள்.ஆயினும், அவள் முறைத்துப் பார்த்ததே, பெரும் குற்றமாகி, இந்தத் திமிர் பிடித்த பெண் வேண்டாம் என்று, அந்தப் பிள்ளை வீட்டார் சென்றுவிட, வசுவுக்கு அவள் தாயிடமிருந்து நல்ல திட்டு கிடைத்தது.பெண் என்றால் ஐம்புலன்களையும் அடக்க வேண்டுமாம், எரிச்சலைக் காட்டக் கூடாது, முகத்தைச் சுளிக்க கூடாது, நினைப்பதைப் பேசக் கூடாது, நிமிர்ந்து நோக்கக் கூடாது.ஆனால், இந்த மாதிரி அறிவுரைகள் எல்லாம், அடுத்த பெண் விஷயத்தில் மட்டும், அம்மாவுக்கு நினைவிருப்பதே இல்லையே?செல்லப் பெண் என்ன செய்தாலும் அது தான் சரியென்று, தோன்றி விடுகிறதே. அப்போதுதான், வசுந்தராவுக்கு மிகவும் மனதுக்குக் கஷ்டமாகிவிடும்.மூத்த மகள் செய்யும் போது, தப்பு என்று சொல்லித் திட்டுகிறவள், அதையே இளைய மகள் செய்தால், ஒரு புன்னகையோடு கண்டு கொள்ளாமல் போய்விடுவாள்.ஒருவேளை, அவளும், சௌந்தர்யாவைப் போல, அம்மாவைக் கொண்டு அதே அழகுடன், எலுமிச்சம்பழ நிறத்தில் பிறந்திருந்தால், அவளுக்கும் அம்மாவின் ‘செல்லம்’ கிடைத்திருக்கக் கூடும். ஆனால், வசு, அவள் அப்பாவின் வாரிசாக அல்லவா பிறந்து தொலைத்திருக்கிறாள். அதுதான், அம்மாவைப் பொறுத்தவரையில், வசுந்தரா செய்த பெரும் தவறாக ஆகிவிட்டது.ஆனாலும், இது ரொம்பவும் அநியாயமாகத்தான், வசுந்தராவுக்குப் பட்டது
Disponible desde: 03/04/2025.
Longitud de impresión: 230 páginas.

Otros libros que te pueden interesar

  • Haridasan Enum Naan - Krishandeva Raya's Journey to the throne - cover

    Haridasan Enum Naan -...

    Dhivakar

    • 0
    • 0
    • 0
    வரலாற்று நாவல் - ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் பல இடர்களுக்கிடையில் எவ்வாறு விஜய நகரத்து ( ஹம்பி) அரசனானான் என்பதே " ஹரிதாசன் எனும் நான் " எ ன்னும் இந்தப் புதினம்  
    தமிழனான ஹரிதாசன் சந்திரகிரி சிற்றரசனின் இளவல் . இப்புதினம் அவன் வாயிலாக சொல்லப்படுகிறது. தானே சொல்வதாக கதையை சொல்வது என்பது மிக மிகக் கடினமான ஒரு உத்தி . மொத்த புதினத்தையும் இம்முறையில் சொல்வதென்பது அபூர்வம் . 
    ஆசிரியர் திவாகர் வெகு கவர்ச்சிகரமான முறையில் இதனை இயற்றியுள்ளார்  
    டாக்டர் ஆர் . சம்பத்  
    மூத்த பத்திரிக்கையாளர் 
    Ver libro
  • கவிஞன் - cover

    கவிஞன்

    Velliyankattan

    • 0
    • 0
    • 0
    வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.  "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. 
    ஒரு கவிஞனுக்குத் தேவை அவனை ஒரு கவிஞனென்று எந்த வரைகோடுகளும் இழுக்காமல் ஏற்றுக் கொள்ளும் பக்குவமே. அப்படித் தன்னை ஏற்றுக் கொள்ளக் கவிபாடும் நிகழ்வுகளின் நீரோட்டமே வெள்ளியங்காட்டான் அவர்களின் கவிஞன் என்ற நூல். //கவினுற உதித்தான் வானில்/ கதிரவன்; கங்குல் அஞ்சிப்/புவிதனை விரைந்து விட்டுப்/போயிற்ரு புகலை நாடி/ செவியினில் தீந்தேன் என்னச்/சிறுகுயில் இசைக்க மெல்லக்/கவிஞன் கண் மலர்ந்தான் செய்ய/ கமலங்கள் மலர்ந்தவாறே..// எனத் தொடங்குகிறது இந்தப் பாவியம். பேராசிரியர் ரமணி ஒலி நூலாக்கியிருக்கிறார்.
    Ver libro
  • Thirumanthiram - cover

    Thirumanthiram

    Thirumular

    • 0
    • 0
    • 0
    திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இந்நூல் மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது. சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது. 
    திருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்று அழைக்கப்படுகிறது. இந்நூலுக்கு திருமந்திரர் திருமந்திர மாலை என்று பெயரிட்டுள்ளார். தமிழ் மூவாயிரம் என்றும் அழைக்கப்படுகிறது. 
    திருமந்திரம் பாயிரமும் அதனை அடுத்து ஒன்பது உட்பிரிவுகளும் கொண்டது. கலிவிருத்தம் என்னும் யாப்பில் அமைந்த பாடல்களால் நூல் அமைந்துள்ளது. இந்த உட்பிரிவானது தந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதனில் 232 அதிகாரங்கள், 3100 செய்யுட்கள் உள்ளன.
    Ver libro
  • Pudhumaipithan Sirukadhai Thoguppu - cover

    Pudhumaipithan Sirukadhai Thoguppu

    Pudhumaipithan

    • 0
    • 0
    • 0
    புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். 
    Pudhumaipithan, also spelt as Pudumaipithan or Puthumaippiththan (Tamil: புதுமைப்பித்தன்), is the pseudonym of C. Viruthachalam (25 April 1906 – 5 May 1948),[1] one of the most influential and revolutionary writers of Tamil fiction.His works were characterized by social satire, progressive thinking and outspoken criticism of accepted conventions. Contemporary writers and critics found it difficult to accept his views and his works were received with extreme hostility. He as an individual and his works have been extensively reviewed and debated for over sixty years since his death. His influence has been accepted and appreciated by the present day writers and critics of Tamil fiction. In 2002, the Government of Tamil Nadu nationalised the works of Pudumaippithan.
    Ver libro
  • Andal hymns - cover

    Andal hymns

    Andal

    • 0
    • 0
    • 0
    நாலாயிர திவ்விய பிரபந்தப் பாடல்களுக்கு சாஸ்திரிய சங்கீத வடிவு தந்திருக்கிறார்கள். அப்படி நம்மை வந்தடையும் பாடல்கள் நாலாயிரத்தில் ஓரிரு நூறு பாடல்களே. சற்றே நீண்ட வடிவில் பாராயணமாகக் கிடைக்கின்றன. 
    பிரபந்தப் பாடல்கள் இயற்றமிழ் பாற்பட்டவை. இயற்றமிழ்ப் பாடல் வகைகளுக்கும் இனங்களுக்கும் ஓசை வகுப்பு முறை இருக்கிறது. இவ்வோசையில் பிரபந்தப் பாடல்கள் அனைத்தையும் தரும் ஒரு முயற்சிதான் இந்த ஒலியாக்கம். செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் ஓசைகளில் யாப்பிலக்கிணத்துக்கு ஏற்ப ஆண்டாளின் பாடல்களை இந்த ஒலி நூலில் கேட்கலாம். 
    ஆண்டாளின் திருப்பாவை 30 பாசுரங்கள் மற்றும் நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களை இந்த ஒலி நூலில் கேட்கலாம். பன்னிரு ஆழ்வார்களின் பாடல்கள் தனித்தனி ஒலி நூல்களாக ரமணி ஒலி நூலகத்தில் கிடைக்கின்றன. 
     The Vaishnavite hymns, Nalayira Divya Prabantham are set to music as well as recited in the recitation (parayana) tradition. While a randomly selected couple of hundreds of poems only are set to music and sung by performing artists, the recitation has been established as a discipline. These hymns have been composed according to Tamil Prosody known as //yappu//. They belong to what is known as //iyatramiz//. Such classical compositions have four kinds, AkavarpA, Venpa, Kalippa and Vanjippa (Pavinankal). Each of these have several derivative forms known as Pavakaikal. These conform to the traditional method of rendering in Akavalosai, Seppalosai, Thullalosai and Thunkalosai. This tradition has been lost for good. In an attempt to revive the traditional methods of rendering, Ramani Audio Books has recorded about 1500 hours of audio beginning from Ettuththokai down to contemporary literature through Epics, Bhakthi literature (Saivam, Vaishnavam, Buddhism, Islam) as well as Middle Age Tamil Literature. 
    In this audiobook you can listen to Thiruppavai (30 verses) and Nacciyar Thirumozhi (143) verses rendered in crisp and prosodically correct rendering. Other works by Azhvars are given in separate books.
    Ver libro
  • Rakshasa - cover

    Rakshasa

    Shanthinath Desai

    • 0
    • 0
    • 0
    ಶಾಂತಿನಾಥ ದೇಸಾಯಿ ಅವರು ಪ್ರಮುಖ ಆಧುನಿಕ ಕನ್ನಡ ಲೇಖಕರಾಗಿದ್ದಾರೆ ಮತ್ತು ಅವರ ಕಥೆಗಳು ಮಾನವ ಸಂಬಂಧಗಳ ವಿಷಯಗಳೊಂದಿಗೆ ವ್ಯವಹರಿಸುತ್ತದೆ ಮತ್ತು ಬದಲಾಗುತ್ತಿರುವ ಸಮಾಜದ ಸವಾಲುಗಳನ್ನು ಮತ್ತು ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಮೌಲ್ಯಗಳಿಂದ ಅದರ ದಿಕ್ಚ್ಯುತಿಯನ್ನು ಅನ್ವೇಷಿಸುತ್ತದೆ.
    Ver libro