Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
அழகு மயில் ஆடும் - cover
LER

அழகு மயில் ஆடும்

ரமணிசந்திரன்

Editora: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinopse

“தொம்த தானி தார திரனா... திரனா... திரனன...” சவுக்க காலத்தில் தொடங்கி மத்திமத்தில் ஆடி கடைசியாகத் துரித காலத்தில் மின்னல் வேகத்தில் தாளம் தவறாமல் ஆடி முடித்தாள் மீரா.“பிரமாதம்!” என்று கைதட்டினான் சுந்தரேசன்.“இதே ஆட்டம். இங்கொன்றும் அங்கொன்றுமாய் நகைகள். நல்ல இங்கிலீஷ் கலர்களில் ஆடை. போதும், எல்லா வெளிநாட்டுக்காரர்களும் உன் காலடியில் தான் கிடக்கப் போகிறார்கள்” என்று கூறியவாறு ஒரு நீளமான சிகரெட்டைப் பற்ற வைத்தான் அவன்.இது ஒன்று அவனிடம் மீராவுக்குப் பிடிக்காது, ஆடும் போது நடராஜப் பெருமானை மனதில் வைத்து, மேடையைக் கோவிலாக உருவகித்து, அவருக்குச் செய்யும் பூஜையே தன் ஆட்டம் என்று எண்ணுவாள் அவள்.அங்கே வந்து சுந்தரேசன் சிகரெட்டுப் புகையை ஊதினால் அவளுக்கு வெறுப்பாகிவிடும்.இதை அவனிடம் எத்தனையோ தடவை, ஜாடைமாடையாகவும், பிறகு நேரடியாகவும் கூடச் சொல்லிப் பார்த்துவிட்டாள்.ஆனால், “இது ஒன்றை விட்டுவிடு கண்ணு. தொண்டையிலும் மூக்கிலும் அந்த நெடி இல்லையென்றால் எனக்கு யோசனையே ஓடுவதில்லை” என்று முடித்து விட்டான் அவன்அதற்குமேல் அதிகமாக அவனிடம் ஏதும் சொல்ல அவளுக்கும் மனம் வரவில்லை.எப்படிச் சொல்வது?ஒருவகையில் அவளது முன்னேற்றத்துக்காக முழுமூச்சுடன் பாடுபடுகிறவன் அவன். அவனது ‘நடராஜ தரிசனம்’ குழுவில் அவளை முக்கிய நாயகியாக்கி சிறப்பு தந்திருக்கிறவன்.அத்தோடு அவளது வாழ்விலும் பங்கேற்கப் போகிறவன். அவனிடம் அவளால் எப்படிக் கடுமையாகப் பேச முடியும்?ஆனால் கடுமையென்ன, வெள்ளமாய்ப் பெருகிய வியர்வையை ஒற்றி எடுத்தபடி பெரிய பெரிய மூச்சுகளை உள் எடுத்து வெளி விட்டுக்கொண்டிருந்த அவளுக்குச் சற்று நேரம் சும்மா கூடப் பேச முடியவில்லை.வேகமாக ஆடியதால் சிவந்திருந்த கன்னங்களையும், வியர்வையால் ஒட்டியிருந்த உடை வெளிப்படுத்திய வடிவான உடல் அமைப்பையும், வேக மூச்சுகளால் அது விம்மித்தணிந்த விதத்தையும் சற்று நேரம் வெறித்த சுந்தரேசன், “இது ஒரு மடத்தனம் இந்த நாட்டில்” என்றான் எரிச்சலோடு.‘எது?’ என்பது போல அவனை ஏறிட்டாள் மீரா.டஇதுவே மேல்நாடாக இருக்கட்டும்; இப்போது இருவரும் முத்தமிட்டுக் கொண்டு இருப்பார்கள். சேர்ந்தே வாழுவார்கள். இந்தப் பட்டிக்காட்டு பாரத நாட்டில் என்னடா என்றால் ஒழுக்கக்கேடு என்று முத்திரை குத்தி ஒரேயடியாக ஒதுக்கிவிடுவார்கள்” என்றான் வெறுப்புடன் அவன்.அவன் சொல்வது புரிந்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டு பேசாதிருந்தாள் மீரா.அவன் இன்னமும் எரிச்சலுற்று, “சரி, இலைமறைகாய் போல வாழலாம் என்றால் நீ அதற்குமேல் பெரிய பட்டிக்காடு. ஸ்டார் டி.வி. தொடர்களை எல்லாம் பார்த்து என்ன பிரயோசனம்?” என்றான் மேலும்.இனி இதே குரலில் அடுக்கத் தொடங்கிவிடுவான். என்னதான் மணக்கப் போகிறவன் என்றாலும் அதற்குமுன் சேர்ந்து வாழ்வது என்றால் அவள் மனம் ஒப்புவதாக இல்லை. அதை வெளிப்படையாகச் சொல்லி இன்னமும் ‘மூடை’க் கெடுக்க வேண்டாம் என்று நினைத்தவளாக, “சிவதாண்டவத்தில் ஒரு சின்ன இடம் சரியாக வரவில்லை. சுந்தரேசன். அதை மட்டும் இன்னொருதரம் பயிற்சி செய்துவிடலாமா? இன்று புரோகிராமில் ஆட வேண்டுமில்லையா?” என்று பேச்சை மாற்றினாள்
Disponível desde: 03/04/2025.
Comprimento de impressão: 126 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • நாடகவியல் - cover

    நாடகவியல்

    சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

    • 0
    • 0
    • 0
    நாடகவியல் 
    வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்) எழுதிய 'நாடகவியல்' (1900), தமிழ் நாடகக் கலைக்கான இலக்கணத்தையும், அதன் வரலாற்றையும் விளக்கும் ஒரு முக்கிய நூலாகும். நாடக அமைப்பு, வகைகள், வசன நடை மற்றும் நாடகக் கொள்கைகளை விளக்கும் முதல் அறிவியல் பூர்வமான தமிழ் நூல் இதுவாகும், இது தனித்தமிழ் இயக்க காலத்தில், தமிழ் நாடகத் துறைக்கு வலுவான அடித்தளமிட்டது. நாடகத்தை எவ்வாறு எழுத வேண்டும், மேடையேற்ற வேண்டும் என்பதற்கான விதிகள் (நாடக இலக்கணம்) இதில் கூறப்பட்டுள்ளன. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக இருந்த சூரியநாராயண சாஸ்திரியார், ஆங்கில நாடக அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழ் நாடக மரபையும் இணைத்து இந்நூலை எழுதினார்.தனித்தமிழ் ஆர்வம்: அந்நியச் சொற்களைத் தவிர்த்து, தூய தமிழில் நாடகக் கலைச் சொற்களைப் பயன்படுத்தியவர். பரிதிமாற் கலைஞர்: தம் பெயரைப் பரிதிமாற் கலைஞர் எனத் தூய தமிழில் மாற்றிக்கொண்டது போல, நாடகக் கலையிலும் செந்தமிழ் நடை சிறக்க பாடுபட்டார். இந்நூல் நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் நாடக ஆர்வலர்களுக்கு ஒரு கையேடாகத் திகழ்கிறது, 
    முனைவர் ரமணியின் ஒலிநூல்களில் ஒரு சிறப்பிடம் பெறுகிறது இந்நூல்.
    Ver livro
  • Solaimalai Ilavarasi - cover

    Solaimalai Ilavarasi

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களில் பயணிக்கின்றது. அப்பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவரின் நிகழ்கால வாழ்வையும் மேலும் அவர் தன்னுடைய முற்பிறவி நினைவுகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கதை கதாநாயகனின் சுதந்திர போராட்டத்தையும், அவன் காதலையும் பற்றிக் குறிப்பிடுகின்றது.
    Ver livro
  • வஞ்சித்தாய் வஞ்சிக்கொடியே - Vanjithaai Vanjikkodiye - cover

    வஞ்சித்தாய் வஞ்சிக்கொடியே -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    சிறுவயது முதலே நாயகனை மனதில் வைத்து காதலில் உருகும் நம் நாயகிகள் இதழினி மற்றும் தன்மதி. 
    தன் குரல் மூலம் அறிமுகமாகிய பெண்களை விரும்பும் நாயகர்கள் ஜீவன் மற்றும் சஞ்சய். 
    தந்தையின் வற்புறுத்தலின் பேரில் திருமண வாழ்வில் இணையும் ஜீவன்-இதழினி மற்றும் சஞ்சய்-தன்மதி. 
    இரு நாயகர்களும் தங்கள் காதலை தங்கள் மனம் முடித்த பெண்களிடம் உணர்வார்களா? அல்லது அவர்கள் காதலித்த வஞ்சியின் குரலை மனதில் நிறுத்தி கரம் பிடித்த பெண்களை தண்டிப்பார்களா? 
    வஞ்சனையில் சிக்கிய நாயகர்களை அதிலிருந்து மீட்பார்களா வஞ்சிக்கொடிகள்?
    Ver livro
  • Echcham - cover

    Echcham

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    ஒரு பழமையான மளிகைக் கடையில், 80 வயது பாட்டாவும் அவரது இளம் கணக்குப் பிள்ளையும் நாள்தோறும் சுவாரசியமான உரையாடல்களில் ஈடுபடுகின்றனர். வெள்ளைக்காரர்களின் விந்தையான ஒரு பழக்கத்தைப் பற்றி அயராது கேள்விகள் எழுப்புகிறார்.வாழ்க்கையின் கடின உழைப்புக்கும் ஓய்வுக்குமிடையே மறைந்திருக்கும் உண்மையை அவர்கள் ஒருநாள் உரையாடலில் கண்டடைகிறார்கள், ஆனால் உண்மையில் எஞ்சியிருப்பது என்ன?
    Ver livro
  • Leelai - cover

    Leelai

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    ஒரு சிறிய கிராமத்தின் தெருவோர சர்க்கஸ் மேடையில், விளக்கொளியும் வியர்வையும் கலந்து மின்னும் ஒரு பெண் நிற்கிறாள்.  
    அவள் அழகி. 
    அவள் தைரியசாலி. 
    அவள் சாமர்த்தியசாலி. 
    அவள் ஏமாற்றுக்காரி. 
    மொத்தத்தில் அவள் ஓர் லீலை - இறுதியில் உங்களை ஒரு பெரிய புன்னகையோடு வியப்பில் ஆழ்த்துபவள். 
    கேட்கும் போதே மனதில் கசப்பும், வியப்பும், கண்ணீரும் ஒன்றாகக் கலந்து, இறுதியில் ஒரு நீண்ட பெருமூச்சும் இதமான சிரிப்பும் தரும் கதை - லீலை
    Ver livro
  • Kanthapuranam Asurakantam - cover

    Kanthapuranam Asurakantam

    Kachiyappasivachariyar

    • 0
    • 0
    • 0
    கந்த புராணம், அல்லது ஸ்கந்த புராணம், என்பது மகாபுராணங்களில் பதின்மூன்றாவது புராணமாகும். காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாசாரியார். அவருடைய குமாரர் தான் கச்சியப்ப சிவாசாரியார். குமரக் கோட்டத்து முருகக்கடவுளுக்கு நாள்தோறும் பூசனை செய்த மெய்யன்பில் வடமொழிப் புராணத்தின் சிறப்பினைத் தமிழ்கூறு நல்லுலகம் அறியும் வண்ணம் இந்தப் புராணத்தை இயற்றினார். அதன் பின் குமரக் கோட்டத்திலேயே அரசர், பிரபுக்கள், கல்வி கேள்விகளில் சிறந்த வல்லுநர்கள் முன்னிலையில் தினம் ஒரு பகுதியாகப் பாடிப் பொருள் கூறி விளக்கி ஓராண்டுக் காலமாகத் தன் நூலினை அரங்கேற்றினார். 
    பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள், கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம். 
    கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும். இது நூறாயிரம் சுலோகங்களால் ஆனது. அது ஆறு சங்கிதைகளைக் கொண்டது. இதில் சங்கர சங்கிதையும் ஒன்றாகும். சங்கர சங்கிதையில் உள்ள பல கண்டங்களில் சிவரகசிய கண்டமும் ஒன்றாகும். இக்கண்டத்தில் ஏழு காண்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் உபதேச காண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களதும் தமிழ்த் தொகுப்பே கந்தபுராணமாகும்.[1] 
    உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது. இது 135 படலங்களையும், 10345 பாடல்களையும் உடைய இது முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது. 
    ramaniaudiobooks.comக்காக முனைவர் ரமணியின் குரலில் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் ஆறு ஒலி நூல்களாக வெளிவருக
    Ver livro