Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் உணவுகள் - இதய நோய்க்கு வழிவகுக்கும் ஒரு முக்கிய காரணம் - cover
LER

கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் உணவுகள் - இதய நோய்க்கு வழிவகுக்கும் ஒரு முக்கிய காரணம்

Owen Jones

Editora: Tektime

  • 0
  • 0
  • 0

Sinopse

இன்றைய காலகட்டத்தில் அதிகம் பேசப்படும் வார்த்தைகளில் ஒன்று கொலஸ்ட்ரால், ஏனெனில் கொலஸ்ட்ரால் வாழ்விற்கும் உயிர் இழப்பிற்கும் இடையில் நிற்கிறது. இருப்பினும், அதைப்பற்றிப் பல கூற்றுக்கள் பிரபலமாக இருக்கின்றன. உணவுப் பழக்கம் என்று வரும்போது, எதைச் சாப்பிடுவது, எதைத் தவிர்ப்பது என நாம் முடிவெடுக்க மிகவும் சிரமப்படுகிறோம். அடிப்படையில் கொலஸ்ட்ரால் என்பது, நமது உடலில் மற்றும் சில வகையான உணவுப்பொருட்களில் காணப்படும் மெழுகு போன்ற கொழுப்பு. இது உயிர் அணு சவ்வுகளின் உருவாக்கம், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் D உற்பத்தி போன்ற உடலியல் செயல்முறைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிரதானமாகக் குறை-அடர்த்தி லிப்போ புரதங்கள் (LDL) மற்றும் உயர்-அடர்த்தி லிப்போ புரதங்கள் (HDL) ஆகிய இரண்டு வகை கொழுப்புப் புரதங்களால், கொலஸ்ட்ரால் இரத்த ஓட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
கொலஸ்ட்ரால் நமது உடலுக்கு அத்தியாவசியமானது என்றபோதிலும், மிகை அளவு LDL கொலஸ்ட்ரால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களுக்கு வழிவகுக்கும். நிறைவுற்றகொழுப்பு மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவை உண்பது, உடற்பயிற்சியின்மை மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் போன்ற வாழ்க்கை முறைகள், கொலஸ்ட்ரால் அளவை ஆரோக்கியம் பாதிக்கும் அளவிற்கு அதிகரிக்கும்.
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் இலைப் புரதங்கள் போன்ற இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவதன் மூலம், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம். தெவிட்டிய கொழுப்பு மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு அதிகம் இருக்கும் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.
நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது போன்ற செயல்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும். தேவைப்பட்டால், இதய நோய்ப் பாதிப்புகளைத் தவிர்த்து, ஒட்டுமொத்த உடல் நலத்திற்காக மருத்துவர்கள் / உடல் நல வல்லுநர்கள், வாழ்க்கை முறை மாற்றங்களுடன், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.
கொலஸ்ட்ரால் அளவை அடிக்கடி பரிசோதிப்பது, அளவு அதிகரிப்பதை ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிக்கவும் அதைச் சிறந்த முறையில் கட்டுப்படுத்தவும் உதவும். நான் ஒரு மருத்துவர் / உடல் நல வல்லுநர் அல்ல, இருப்பினும் இந்தத் தலைப்பைப்பற்றி நிறையப் படித்து, ஆராய்ந்து அதன் பிறகு தான் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறேன். இந்தத் தலைப்பைப்பற்றி நீங்கள் ஆழமாகச் சிந்திக்கவும் மருத்துவ ஆலோசனை தேவையா எனப் புரிந்துகொள்ளவும் இந்த புத்தகம் உதவும்.PUBLISHER: TEKTIME
Disponível desde: 09/04/2024.
Comprimento de impressão: 117 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Andha Moondru Katthikal - cover

    Andha Moondru Katthikal

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Ver livro
  • பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரர் (The Richest Man in Babylon) [Tamil] - cover

    பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரர்...

    ஜார்ஜ் எஸ். கிளாசன்

    • 0
    • 0
    • 0
    அதிகம் விற்பனையாகும் ஒரு தனித்துவமான புத்தகம், இதற்கென்று ஒரு ரசிகர் வட்டத்துடன் நவீனகாலப் பொக்கிஷமாக உள்ளது. 
    "பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரர்" புத்தகம் நிதித் திட்டமிடல் மற்றும் சுய முன்னேற்றத்தில் மிகவும் பிரபலமான மற்றும் ஊக்கமளிக்கும் புத்தகமாகக் கருதப்பட வேண்டிய ஒன்று. 
    செழிப்பிற்கான உலகளாவியச் சட்டங்களை முதன்முதலில் கண்டறிந்த பண்டைய பாபிலோனியர்கள் பற்றிய ஊக்கமூட்டும் மற்றும் தகவல்பூர்வமான கதைகளின் மூலம், செல்வத்தை உருவாக்குவதும் பாதுகாப்பதும் வளர்ப்பதும் எப்படி என்பதற்கான சிறந்த அறிவுரைகளை ஜார்ஜ் கிளாசன் வழங்குகிறார். 
    இந்த ஆடியோ புத்தகத்திலிருந்து நீங்கள் இவற்றை அறிந்துகொள்ளலாம்: 
    -          பணத்தைக் கையாளுவதன் சரியான வழிகள் மற்றும் நிலையான நிதிநிலையை அடைவதற்கான ரகசியங்கள்; 
    -          கடினமான பொருளாதாரச் சூழல்களைச் சமாளிக்க உதவும் அடிப்படை நிதிக் கோட்பாடுகள்; 
    -          உங்கள் திட்டங்கள் மற்றும் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான சிறந்த அணுகுமுறைகள்; 
    -          விரும்பியவற்றை எல்லாம் பெற்று நிதிச் சுதந்திரத்தை அடைவதற்கான நுட்பங்கள். 
    ஆசிரியர் குறிப்பிட்டுள்ள கொள்கைகளைப் பின்பற்றி உலகெங்கிலும் லட்சக்கணக்கானோர் பலனடைந்துள்ளனர். சேமிப்பை நிர்வகிப்பதற்கு இந்தப் புத்தகத்திலுள்ள உதவிக்குறிப்புகளை நீங்கள் நடைமுறைப்படுத்தத் தொடங்கினால், அவை உண்மையில் பலனளிப்பதை விரைவில் கவனிப்பீர்கள். 
    நிறைய வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் புதிய உயரங்களை எட்டவும் ஊக்கப்படுத்துவதன் மூலம், இந்தப் புத்தகம் சுய முன்னேற்றத்திற்கும் உதவுகிறது. 
    "பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரர்" புத்தகத்திலுள்ள ஊக்கமூட்டுகின்ற, அறிவுப்பூர்வமான கதைகளைக் கேட்டபிறகு, முடியாதது என்று எதுவுமே கிடையாது என்பதைப் புரிந்துகொள்வீர்கள்! 
    ©2023 ABP Publishing. Translation Naga Chokkanathan, ℗2023 ABP Publishing 
    Original title: The Richest Man in Babylon
    Ver livro
  • Naavidharaai Vadivedutha Narayanan - cover

    Naavidharaai Vadivedutha Narayanan

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Ver livro
  • Unavum Ullunarvum - cover

    Unavum Ullunarvum

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Ver livro
  • Kadavulai Kondravan - கடவுளைக் கொன்றவன் - Short Story Collection - cover

    Kadavulai Kondravan - கடவுளைக்...

    Anônimo

    • 0
    • 0
    • 0
     Kadavulai Kondravan - an aurality audio book production - சித்ரூபனின் கதைகளில் கதைக் களன் அழுத்தமாக நிரக்க இருக்கும். வங்கியில் நடக்கும் கதை என்றால் ஒரு வங்கிக் கிளையின் காட்சியாக உங்கள் முன் விரியும். ஒரு குறும்படம் பார்ப்பதைப் போல. இவரது சொற்சித்திரத்தில் ஒலிகளையும் கேட்க முடியும். எனக்குக் கேட்டது. ஆனால் அதைக் கேட்க உங்கள் காதுகள் கூர்மையாக இருக்க வேண்டும். சித்ரூபனின் கதை மாந்தர்கள் எளிய மனிதர்கள். அவர்களில் அதிகாரம் வாய்க்கப் பெற்றவர்கள் வன்மம் கொண்டவர்களாகத் திரிந்து போகிறார்கள். அவர்கள் அப்படித் திரிந்து போனதற்கான காரணங்களைச் சித்ரூபன் ஆராய்வதில்லை. அது அவர் நோக்கமும் இல்லை. அவர்கள் கையில் அதிகாரமற்ற எளியவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களைச் சொல்லவே - அதாவது படம் பிடிக்கவே - அவர் முனைகிறார், அதில் பெருமளவு வெற்றியும் பெறுகிறார். சித்ரூபனின் கதைகள் நல்ல வாசிப்பனுபவம் தருபவை. ஆனால் அதையும் தாண்டி அவை வேறு பலவற்றையும் உணர்த்துகின்றன. அதனால் இன்றையக் கதைவெளியில் அவை அவசியமானவையாகின்றன. - மாலன் 'சித்ரூபன்' என்ற புனைபெயரில் எழுதி வரும் ராமன் சென்னையில் 1962ல் பிறந்தவர். சிண்டிகேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழின் பிரபலமான வார, மாத இதழ்களில் இவருடைய படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. 
    Chithroopan சித்ரூபன் (Author) எழுதி , சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம். Also available on google play and iphone app store and other places 
    Ver livro
  • Eppadi Seyyavendum Annadhaanam - cover

    Eppadi Seyyavendum Annadhaanam

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்.
    Ver livro