¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
தள்ளி போகச் சொல்லாதே - cover

தள்ளி போகச் சொல்லாதே

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

மூடியிருந்த ஜன்னல் திரைகளை விலக்கி, வெளிச்சத்தை உண்டாக்கினாள் வேதா.அந்த விசாலமான அறையின் நடுவே போடப்பட் டிருந்த கட்டிலில் கண் விழித்து படுத்திருந்த ராஜம், மருமகளை பார்த்தாள். முகத்தில் நிரந்தரமாக தங்கி விட்ட புன்னகை. இளமையில் அவளிடமிருந்த அழகு, வயது அறுபதை நெருங்கும் சமயத்திலும் அவளை விட்டு விலக மனசில்லாமல் ஒட்டிக் கொண்டிருந்தது. கோபாலனை கை பிடித்து மருமகளாய் வந்த நாளிலிருந்து இந்த குடும்பத்துக்காக முகம் சுளிக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறாள்...“அப்ப சின்ன வயசு சமையல் வேலை, அது, இதுன்னு இழுத்து போட்டு செய்தே. உனக்கும் வயசாயிட்டு வருது வேதா. ராம, லட்சுமணன் மாதிரி அழகாக இரண்டு பிள்ளைகளை பெத்து வச்சுருக்கே... அப்பாவுக்கு மேலே கம்பெனியை திறமையாக நடத்தறாங்க... வருமானமும் எக்கசக்கமாக வருது. அப்புறம் என்னம்மா, மேல் வேலைக்கு ஆள் வச்சுக்கே, என்னை பார்க்க தனி ஆள். அதே போல் சமையலுக்கும் ஆள் வச்சுக்க வேதா...”அன்போடு சொல்லும் மாமியாரை புன்னகையோடு பார்ப்பாள்...“என்னால் முடியும் அத்தை. என் பிள்ளைகளுக்கு, என் புருஷனுக்கு... என் மாமியாருக்கு நான் பார்த்து, பார்த்து செய்யற மாதிரி ஆகுமா அத்தை. வயது என் உடம்பில் தளர்ச்சியை கொண்டு வரலாம். மனசு அன்னைக்கு இருந்தது போல் இன்றும் இளமையாக தான் இருக்கு அத்தை.”இவளை பேசி ஜெயிக்க முடியாது. அன்பாலேயே எல்லாரையும் கட்டி போட்டு விடுவாள்.மருமகளை நினைத்து பெருமிதம் கொள்வாள்.அருகில் வருகிறாள் வேதாராத்திரி நல்லாதூங்கினிங்களா அத்தை?”“ராத்திரியும், பகலும் படுக்கையிலேயே இருக்கிற எனக்கு தூங்கறது தானே வேலை.”“என்ன பண்றது அத்தை. நல்லா நடமாட்டிட்டு இருந்த உங்களை அந்த கடவுள் நாலு வருஷமாக படுக்கையில் போட்டுட்டாரு. இந்த குடும்பத்தை ஆணிவேராக இருந்து நீங்களும், மாமாவும் உருவாக்கினீங்க... மாமா தெய்வமாகிட்டாரு. நீங்க எங்க கண்முன்னே இருக்கிறது எங்களுக்கு எவ்வளவு பெரிய பலம் தெரியுமா... உங்க பேரன்களுக்கு கல்யாணம் பண்ணனும், கொள்ளு பேரன்களை பார்க்கணும். இந்த பூமியில் நீங்க அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்கள் நிறைய இருக்கு அத்தை. அதனால் உங்க மனசில் எந்த கவலையும் நெருங்க கூடாது. உங்க மலர்ந்த முகத்தை தான் நாங்க பார்க்கணும். நான் சொல்றது சரிதானே அத்தை.”மனதை தொட எவ்வளவு தன்மையாக பேசுகிறாள்.“அம்மா வேதா... உன்னோடு இருக்கும் எனக்கு எந்த குறையும் இல்லம்மா... மனசுக்குள் அப்பப்ப எட்டி பார்க்கும் விரக்தி சமயத்தில் இப்படி பேச வைக்குது. இனி இப்படி பேச மாட்டேன் போதுமா...”“ம்... அப்படி சொல்லுங்க...”மலர்ந்து சிரிக்கிறாள்.“கோபால் வாக்கிங் போய்ட்டு வந்துட்டானா...”“இன்னும் வரலை. வந்ததும் நேராக உங்களை பார்க்க தானே வருவாரு.”ரூம் கதவை திறந்து உள்ளே வருகிறாள் சாந்தி.“பெரியம்மா... எழுந்தாச்சா... வெந்நீர் எடுத்துட்டு வரட்டுமா... உடம்பை துடைச்சு டிரஸ் மாத்தலாமா...”“இதோ வந்துட்டா என்னோட சேவகி. நீ போய் வேலையை பாரு வேதா... வா சாந்தி... நீ வரட்டும்னு தான் இருந்தேன்.”ஒரு கையும், காலும் செயலிழந்து கிடக்க, இடது கையை மெல்ல ஊன்றி, தலை தூக்க, அவளுக்கு உதவி செய்து படுக்கையில் உட்கார வைக்கிறாள் சாந்தி.
Disponible desde: 12/02/2024.
Longitud de impresión: 59 páginas.

Otros libros que te pueden interesar

  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver libro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Ver libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver libro