¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
மணமகளே மருமகளே வா - cover

மணமகளே மருமகளே வா

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

“நம்பிக்கைங்கிற தலைப்பில் எல்லாரும் கட்டுரை எழுதி, நாளை எடுத்துட்டு வரணும், சரியா?”ஒன்பது, பத்து வயதில் அவள் முன் உட்கார்ந்திருக்கும் ஐந்தாறு சிறுவர், சிறுமிகள் தலையாட்டுகிறார்கள்.“அக்கா நான் நல்லா படிச்சு பெரிய ஆபிசராக வருவேன்னு நினைக்கிறேன். அதுவும் நம்பிக்கைதானே.”“எண்ணங்கள்தான் நம்மைசெயல்படுத்துது சுமி. மனசுக்குள் ஒன்றையே நினைத்து செயல்படும்போது அது நிறைவேறுவதற்கான வழியும் பிறக்கும். நீ விருப்பப்படி பெரியவளாகி, ஆபிசராகி, உன் அம்மா, அப்பாவை பெருமைப்படவைப்பே.”“தாங்க்ஸ் அக்கா....”கண்களில் ஒளிதெரிய கள்ளமில்லாமல் சிரிக்கிறாள் அந்த சிறுமி.செருப்பை வாசலில் கழட்டிவிட்டு, ஒருக்களித்து இருந்த கதவை திறந்து உள்ளே வருகிறார் சம்பத். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தந்து கொண்டிருந்த நந்தினி...“பெரியப்பா... வாங்க...”வரவேற்கிறாள்...“அப்பா இருக்கானா நந்தினி. என்ன பிள்ளைகளுக்கு டியூஷனா?” கேட்டபடி வர...“சரி. எல்லாரும் கிளம்புங்க. நாளைக்கு வரலாம்.” புத்தகப் பையை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓட...“உட்காருங்க பெரியப்பா... இதோ அப்பாவை கூப்பிடறேன்.” அதற்குள் அண்ணனின் குரல் கேட்டு உள்ளிருந்து வேகமாக வருகிறார் சதாசிவம்.“அண்ணா வாங்க, வாங்க... அண்ணி வரலையா... நீங்க மட்டும்தான் வந்தீங்களா... ப்ரக்யா நல்லா இருக்காளா...”அண்ணனை பார்த்த சந்தோஷம் அவர் முகத்தில் தெரிகிறது.“எல்லாரும் நல்லா இருக்கோம். உள்ளூரில் இருக்கோம்னுதான் பேரு. பார்க்கக்கூட முடியலை. இத்தனைக்கும் இரண்டு பேரும் ரிடையர்ட் ஆயிட்டோம்.”சிரிப்புடன் சொன்னவர்...“ரமேஷ் ஸ்கூல் போயிட்டானா?”“ப்ளஸ்டூ இல்லையா... ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சீக்கிரமே போயிட்டான்.”“பெரியப்பா... காபி எடுத்துட்டு வரட்டுமா. அம்மா குளிச்சுட்டு இருக்காங்க...”“என்னம்மா கேள்வி. போய் எடுத்துட்டு வா...” சதாசிவம் சொல்ல.“வேண்டாம் சதா... இப்பத்தான் வீட்டில் சாப்பிட்டு வந்தேன். நீ ஏன் நிக்கிறே... உட்காரு...”அண்ணன் முன் பவ்யமாக நிற்கும் சதாசிவம். எதிரில் இருந்த ஸ்டூலில் உட்காருகிறார்.தம்பியை பார்க்கிறார் சம்பத். சிறு வயதிலிருந்து இன்றுவரை அண்ணன் என்ற மரியாதை குறையாமல் நடக்கிறான். இருவருக்குமிடையே ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், பாசம், அன்பில் கடுகளவும் குறையாமல். அண்ணன் கவர்ன்மெண்ட் வேலையிலிருந்து நன்கு சம்பாதித்து வீடு வாசல் என்று சகல வசதிகளோடு இருக்கிறார் என்று பொறாமைப்படாமல். ஸ்கூல் டீச்சராக இருந்து வாடகை வீட்டில் சொற்ப வருமானத்தில் மகன், மகள் என்று செலவுகளை சமாளித்து வாழ்கிறார்.அவரவருக்கு என்ன கொடுப்பினை இருக்கோ அதுதானே கிடைக்கும். அண்ணன் வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்தபோது ஓடி, ஓடி உழைத்தவர் அவர்தான்.எங்கண்ணன் நல்லா இருந்தா நான் நல்லா இருக்கிற மாதிரி.உன்னை பார்த்தால் ஆச்சரியமாக இருக்குப்பா... எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம. அண்ணன் கூப்பிட்டாருன்னு பத்து நாளா ஒரு வேலைகாரனை போல உழைக்கிறே. உன் மனசு எனக்கு கிடையாதுநானாக இருந்தால் பொறாமையிலேயே வெந்து போயிருப்பேன்... கிரகப்பிரவேசம் வீட்டில் தூரத்து உறவு முறை ஒருவர் சதாசிவத்திடம் சொல்ல...யாரை பார்த்து யார் பொறாமைப்படறது. அவர் என் ரத்தம். எங்கண்ணன் புத்திசாலி. என்னை விட அதிகம் படித்தார். நல்ல வேலை கிடைச்சு. அண்ணியின் குடும்ப நிர்வாகத்தில் இன்னைக்கு வீடு கட்டியிருக்கிறார். அது எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கு தெரியுமா.எங்க பரம்பரையில் எல்லாரும் சராசரியாக வாழ்ந்தாங்க... சொந்த வீடு இல்லை. இப்ப எங்கண்ணன் தலையெடுத்து வீடு கட்டியிருக்கிறார். பெருமைப்பட வேண்டிய விஷயத்தை பார்த்து பொறாமைப்பட முடியுமா...தயவு செய்து என்கிட்டே இப்படி பேசாதே... அன்பு, பாசத்தில் இணைஞ்சிருக்கிற எங்களை இப்படியெல்லாம் பேசி பிரிக்க பார்க்காதீங்க...தம்பியின் பேச்சை அங்கு எதேச்சையாக வந்த சம்பத் கேட்டு மனம் நெகிழ்ந்தார். இப்படியொரு உடன்பிறப்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
Disponible desde: 12/02/2024.
Longitud de impresión: 60 páginas.

Otros libros que te pueden interesar

  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Ver libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver libro