Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
மணம் வீசும் மலர்கள் - cover

மணம் வீசும் மலர்கள்

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

“விக்ரம், ஊருக்கு போய்ட்டு வந்தாலே, உன் மூடு சரியாக இரண்டு நாளாகுது. இஷ்டமில்லாமல் ஏன் போற.”“அப்படி விட முடியலைடா. என் தங்கைக்காகதான் போறேன்.”“சரி, வா, இன்னைக்கு ஹாஸ்டலில் மட்டன் சாப்பாடாம். போய் சாப்பிடலாம்.”“நான் வரலை குமார். நீ போ. எனக்கு கொஞ்சம் ‘ப்ராஜெக்ட்’ வேலை இருக்கு. முடிச்சுட்டு மெதுவா சாப்பிடறேன்.”“ஆமாம், நீ இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வந்தா, வெறும் தயிர் சாதம் தான் கிடைக்கும். சொன்னா கேளு...” கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறான் குமார்.“சரி, இப்படி பெத்தவரை விஷமாக வெறுக்கிறியே, படிப்பு முடிஞ்சதும் என்ன செய்யப்போற. ஊர் பக்கம் போய்தானே ஆகணும்.”சாப்பிட்டபடி கேட்கும் நண்பனை பார்த்தவன்,“அதை பத்தி நானும் யோசிச்சுட்டு இருக்கேன். ஏதாவது கிடைக்கிற வேலையை தேடிக்கிட்டு, எங்காவது போகப்போறேன். நிச்சயமாக ஊர் பக்கம் போகமாட்டேன்.”“நீ சொல்ற. உன் அப்பா அப்படி விட்டுடுவாறா. இல்லை, அவங்களுக்காக உன் தங்கையைதான் வேண்டாம்னு விட்டுடுவியா.”“புரியலை குமார். பாவம் வித்யா... பொம்பளபுள்ளை. அவங்க சொல்றபடி கேட்டு இருந்துதான் ஆகணும். அப்பாவோட ஒய்ப்போடு சேர்ந்து வீட்டுவேலையெல்லாம் செய்யறாஅப்பாவுக்கு கடையில் வியாபாரம் இல்லையாம். ப்ளஸ்டு படிச்சது போதும்னு படிப்பை நிறுத்தப்போறாங்க. இதில் கல்யாணமும் பண்ணப் போறாங்களாம். எப்ப ஒழிச்சுக் கட்டுவோம்னு அந்த கிராதகி நினைச்சுட்டு இருக்கா. இப்போதைக்கு என்னாலும் எதுவும் செய்ய முடியலை. அதான் வருத்தமாக இருக்கு.”“சரி, நீ சொல்றதை பார்த்தா, உன் தங்கையும் உங்க சித்திக்கிட்டே கஷ்டப்பட்டுகிட்டுதான் இருக்கா போலிருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கிறது நல்ல விஷயம்தானே. அதுக்கப்புறமாவது அவங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் இல்லையா.”குமார் சொல்ல, அவன் சொல்வதும் ஒரு விதத்தில் சரியாக இருக்குமென்று விக்ரமிற்கு படுகிறது.கண்ணாடி முன் நின்று தலை சீவுகிறான் முகுந்தன். சுருளான முடி படிய மறுக்கிறது.கருப்பாக இருந்தாலும் பார்க்க அழகாகதான் இருக்கிறேன். தனக்குள் சிரித்தவன்,“அம்மா, அம்மா...” என்றான்.“எதுக்கு முகுந்தா கூப்பிடறே. இப்பதான் அடுப்பில் குழம்பை வச்சேன். என்ன விஷயம் சொல்லு.” வருகிறாள் சாரதா.“ஸ்கூலில் பி.டி. மாஸ்டராக இருக்கேன். பார்க்கவும் ஆஜானுபாகுவாக அழகாகவே இருக்கேன். எதுக்காக, பெண் வீட்டில் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்க.”“அட கடவுளே... அதுக்காக இவ்வளவு அவசரமாக கூப்பிட்டே. குறை உன்கிட்டே இல்லைபா. நமக்கு சொந்தமாக வீடு இல்லையாம். அப்பா இல்லாத பையன். கடைசி வரை குடும்ப பொறுப்பு உன் தலையில்... இவன் சம்பாத்தியத்தில் வீடு, வாசல் எல்லாம் வெறும் கனவுதான்னு... வேண்டாம்னு சொல்லிட்டதாக புரோக்கர் சொன்னாருப்பா.”“அப்படியா சொன்னாங்க. ஏதோ நீ சொன்னியேன்னு பார்க்க சுமாராக இருந்தாலும், போட்டோவை பார்த்துட்டு சரின்னு சொன்னேன்.”“பெரிய கோடீஸ்வர வீட்டில் சம்பந்தம் பண்ணட்டும். சரி, விடு. நமக்குன்னு ஒருத்தி இனிமேலா பிறக்கப்போறா. பார்ப்போம்.”“முகுந்தா, நான் சொல்றேன்னு கோபப்படாதே. நீ ஏன் லோன் போட்டு வீடு ஏதாவது வாங்கக்கூடாது.இந்த காலத்தில் சொந்த வீடு இல்லைன்னா, ஒரு படி, மட்டமாகதான் நினைக்கிறாங்கப்பா.”கட்டிலில் உட்கார்ந்தவன், அம்மாவை இழுத்து பக்கத்தில் உட்கார வைக்கிறான்.“அம்மா, அவசரப்படவேண்டாம். என் சம்பாத்தியத்தில் கடன் எதுவும் இல்லாமல் குடும்பம் நடந்தறோம். ஏதோ கையிலும் கொஞ்ச காசு இருக்கு. இப்ப லோன் போட்டு, பணத்தை லோனுக்கு கட்டி சிரமப்படணுமா சொல்லு. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நாம் நிம்மதியைதான் தக்க வச்சுக்கணுமே தவிர, அடுத்தவங்களுக்காக வாழணும்னு நினைச்சா... நிம்மதி பறி போயிடும்மா.”“நீ சொல்றதும் சரிதான்னு தோணுது. இருந்தாலும் நல்ல இடத்தில் பெண் வரமாட்டேங்குதே. அதான் மனசுக்கு யோசனையாக இருக்கு.”“நீ ஏன் பெரிசா யோசிக்கிறே. நம்மை மாதிரி இருக்கிற இடத்தில் பெண் பாரு. உனக்கு பிடிச்சிருந்தால் போதும். தாலி கட்டி கூட்டிட்டு வரேன்.எனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னுதான் ஆசைப்பட்டியே தவிர, பெரிய இடத்து சம்பந்தம் வரணும்னு ஆசைப்பட்டியாம்மா.”“அப்படியெல்லாம் இல்லை முகுந்தா. நல்ல பெண்ணாக மனசுக்கு பிடிச்சவளாக அமைந்தால் போதும்.”“அப்புறம் என்னம்மா. போ. போய் அடுப்பில் வச்ச குழம்பை பாரு. கரிகிடப் போகுது.”வெண் பற்கள் தெரிய சிரிக்கும் மகனை பார்த்தபடி உள்ளே போகிறாள் சாரதா.
Disponible depuis: 12/02/2024.
Longueur d'impression: 94 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Voir livre
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Voir livre
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Voir livre
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Voir livre
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Voir livre
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Voir livre