¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
மலர்ந்த விழிகள் - cover

மலர்ந்த விழிகள்

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

பூவாந்தல் கிராமம். செழிப்பான பூமி என்று சொல்ல முடியாவிட்டாலும், பசுமை அழகுடன் காட்சியளித்தது. கிராமத்தில் மொத்தமே அறுபது குடும்பங்கள்தான் இருக்கும். அங்கிருப்பவர்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்திருந்தார்கள். பூவாந்தல் கிராமத்துக்கு அடுத்திருப்பது சதுரமங்களம். அதுவும் இதை போலவே சிறிய கிராமம்தான்.இரண்டு கிராமத்துக்கும் பொதுவாக நிமிர்ந்து நிற்கும் அந்த சிவன் கோயில்தான். பத்து வருடமாக இரு கிராமத்துக்கும் பகை வளர காரணமாக இருந்தது.கிராமத்தில் இருப்பவர்கள் ஒருவரையொருவர் ஜென்ம பகையாளியாக பார்த்தார்கள். பேச்சுவார்த்தை கிடையாது. அந்த கிராமத்தில் விற்பனையாகும் பாலை கூட, சதுரமங்களத்தினர் வாங்க மறுத்தார்கள். மூன்று வேளை பூஜையும், அபிஷேகமும் நடந்த சிவனுக்கு இன்று... எந்த பூஜையும் இல்லாமல், கோயில் கதவு இழுத்து பூட்டப்பட்டிருந்தது.பத்து வருடம் முன் கோயில் திருவிழாவில், யார் பெரியவர் என்று ஏற்பட்ட மோதல்... ஒருவரையொருவர் வெட்டிக் கொள்ளும் அளவுக்கு மூர்க்கமாக மாறியது.“கோயிலுக்கு இடம் கொடுத்தது... எங்க கிராமத்தை சேர்ந்த பெரியவர், அவர் நிலத்தை கோயிலுக்கு விட்டு கொடுத்தாரு. அப்ப திருவிழாவில் முதல் மரியாதை, பரிவட்டம் கட்டறது, எங்க கிராமத்து பெரிய மனுஷருக்குதானே இருக்கணும். எங்க உரிமையை நாங்க விட்டுத் தர முடியாது” - சதுரமங்களத்தைச் சேர்ந்தவர்கள் சொல்ல...“அதெப்படி... நிலத்தை கொடுத்தா சரியா போச்சா. அதில் பிரம்மாண்டமாக கோயில் கட்ட, தன் சொத்து, சுகத்தை வித்தது பூவாந்தல் கிராமத்தை சேர்ந்தவங்க. அதை மறந்துடாதீங்க. இந்த சிவனே... எங்களால்தான்இன்னைக்கு இந்த கர்ப்பகிருகத்தில் காட்சியளிக்கிறாரு. அதனால முதல் மரியாதை எங்களுக்குத்தான்” - பூவாந்தல் கிராமத்தினர் எதிர்முழக்கம் செய்ய...பெரியவர்களின் காரசாரமான பேச்சுவார்த்தை, இளைஞர்களை கோபப்படுத்த... பொங்கலிட்டு திருவிழா கொண்டாட வந்த இரு கிராமத்து பெண்களும்... தடுமாறி நிற்க... கம்பு, அரிவாள் என்று ஒருவரையொருவர் வெட்டி கொள்ள, பால் பொங்கி வழிய வேண்டிய இடத்தில் இரத்தம் ஓடியது...கிராமத்தில் போலீஸ் நுழைந்தது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த கலெக்டர் வர, யாருடைய பேச்சுவார்த்தையும் அவர்களிடம் எடுபடவில்லை.வேறு வழியில்லாமல், உங்களுக்குள் ஒற்றுமையும், சமாதானமும் வரும்வரை இந்த கோயிலில் எந்த பூஜையும், புனஸ்காரமும் வேண்டாம்.கோயில் கதவுகள் இழுத்து மூடப்பட்டது. திருவிழா, கொண்டாட்டம் எல்லாம் நின்றுபோக, இரு கிராமத்தினரும் ஒருவரையொருவர் குற்றம் சொல்ல... பகை வளர, பேச்சுவார்த்தை நின்று... விட்டு கொடுக்க மனமில்லாத மனிதர்களுக்கிடையே கடவுளும் மௌனமாகி போனார்.பூவாந்தல் கிராமத்தில் லட்சுமியின் ஒரே மகளான சுபத்ரா... பத்தாவது படித்து... அருகில் இருந்த ஊரில் எஸ்.டி.டி. பூத்தில் வேலை பார்த்தாள். அந்த ஊரைச் சேர்ந்த விஜயாவும் அங்கு வேலைக்கு வர... இருவருக்கும் இடையில் நட்பு பலப்பட்டது.“சுபத்ரா இன்னைக்கு என்ன சாப்பாடு கொண்டு வந்திருக்கே?”“தயிர்சாதம், ஊறுகாய்...”“என்னடி இது... சவசவன்னு. எப்படி சாப்பிடுவே. இன்னைக்கு மதியம் என்னோடு வீட்டுக்கு வர்றியா?”“வேண்டாம்பா. எங்கம்மா பாசத்தோடு கட்டிக் கொடுத்த சாப்பாடு வீணாக்கலாமா? சாதாரண விவசாய கூலியாக இருந்து, என்னை ஆளாக்கியிருக்காங்க. அப்பாவை இழந்த எனக்கு... எல்லாமுமாக இருக்கிறவங்க எங்கம்மா. அவங்க எது கொடுத்தாலும் அது எனக்கு அமுதம்தான்...”“அப்பாடா... ஒருவேளை வீட்டுக்கு சாப்பிடவான்னு கூப்பிட்டா, இவ்வளவு சொல்ற... சரி... சரி... நீ தயிர் சாதத்தையே சாப்பிடு...” விஜயா சிரிக்க...அங்கு வருகிறான் திவாகர்.மெடிக்கல் காலேஜில் படிப்பை முடித்து, ஹவுஸ் சர்ஜனாக இருப்பவன். சதுரமங்களம் கிராமத்தை சேர்ந்தவன். பார்ப்பவர் மனதில் இவன் அழகான இளைஞன் என்ற எண்ணம் தோன்றும்.சிரிக்கும் கண்கள். அடர்ந்த தலை கேசத்தை கைகளால் அடிக்கடி கட்டுபடுத்துவான். சதுரமங்களம் கிராமத்தை பொறுத்தவரை, அங்கிருக்கும் இளம் பெண்களுக்கு அவன் ஒரு ஹீரோ. ஆனால் அவன் மனதோ... விழுந்து கிடப்பது... சுபத்ராவின் கடைக்கண் பார்வையில்...அவளை பார்ப்பதற்கென்றே அந்த எஸ்.டி.டி. பூத்தை தேடி வருவான். அவள் மனதை புரிந்துகொண்ட சுபத்ராவும்... அவன் மேல் ஈர்ப்பு இருந்தாலும் அதை வெளிப்படுத்த தயங்கினாள்.
Disponible desde: 12/02/2024.
Longitud de impresión: 60 páginas.

Otros libros que te pueden interesar

  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver libro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver libro
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Ver libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver libro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver libro