¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
கலைந்து போகும் கோலங்கள் - cover

கலைந்து போகும் கோலங்கள்

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

வாழ்க்கையே வெறுமையாக தோன்றியது குமாருக்கு.யோசிக்க யோசிக்க மனதில் வெறுப்பும், சலிப்புமே மிஞ்சியது.இருபத்தாறு வயதிற்குரிய சுறுசுறுப்பு அவனிடம் இல்லை.எழுந்திருக்க மனமில்லாமல் படுக்கையில் புரண்டான்.“குமார்... குமார்... மணி எட்டாச்சு. இன்னுமா தூங்கறே”போர்வையை விலக்கி அம்மாவை பார்த்தவன்...“இப்ப உனக்கு என்ன வேணும்.”“என்னப்பா இப்படி கேட்கிற. வயசு புள்ளை பொழுது விடிஞ்சு... இப்படி படுத்திருக்கலாமா... எழுந்து வா குமார். காபி கலந்து தரேன்.”லட்சுமியின் மென்மையான குரல், அவனை இளக்க...“சரி, நீ போ... நான் வரேன்...”வெளியே வந்தாள்.“என்ன உன் மகனை சுப்ரபாதம் பாடி எழுப்பிட்டியா...”“ராத்திரி ரொம்ப நேரம் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருந்தான். லேட்டாகத்தான் தூங்கினான். அதான் போய் பார்த்தேன். எழுந்துட்டான்.”“ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு அவர் ப்ரோக்ராம் என்னவாம்... படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காட்டி... கிடைச்சதை ஏத்துக்கணும். இப்படி வெட்டியா உட்கார்ந்திருந்தா என்ன நடக்கும்” சலிப்பு தெரிந்ததுஅவனும் முயற்சி பண்ணிட்டுதாங்க இருக்கான்.”“ஒவ்வொரு நாளா போயிட்டு இருக்கு... நாள் மட்டும் போகலை. அதோடு மட்டும் போகலை. அதோடு வயசும் போகுது. ஒரே பிள்ளை அவன் மேல் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன். எல்லாம் போச்சு.”“சரி, நான் கிளம்பறேன். பென்ஷன் மட்டும் வரலைன்னா... நாம் தெருவில்தான் நிக்கணும்.”“சோமசுந்தரம் வேளச்சேரியில் ஒரு கடையில் வேலையிருக்குன்னு சொன்னான். போய் பார்க்கிறேன். அஞ்சு, பத்து கிடைச்சா செய்யறது.”எழுந்து காலில் செருப்பை நுழைக்க,“என்னங்க... இட்லி ஊத்திட்டேன். சாப்பிட்டு போங்க.”“அது ஒண்ணுதான் குறைச்சல். எல்லாம் வந்து சாப்பிட்டுக்கறேன்.”ஸ்டாண்டு போட்டு நிறுத்தியிருந்த டி.வி.எஸ். பைக்கை எடுக்கிறார் ரத்தினம்.இட்லியை சட்னியில் தொட்டு வாயில் வைத்தவன்...“என்னை என்னம்மா செய்ய சொல்றே. நான் என்ன சும்மா ஊர் சுத்திட்டா இருக்கேன். வேலை தேடிட்டுதான் இருக்கேன்.”“இப்ப முடிச்சுட்டு வர்ற பசங்க... லட்டு லட்டா மார்க் வாங்கினவங்களைதான் சேர்த்துக்கிறாங்க. என்னை மாதிரி இரண்டு வருஷத்துக்கு முன்னால் அரியர்ஸில் பாஸானவங்களை கண்டுக்க மாட்டேன்கிறாங்க. நெட்டிலும் நிறைய கம்பெனிக்கு பயோ-டேட்டா அனுப்பி வச்சுட்டுதான் இருக்கேன். எதுவும் நடக்க மாட்டேன்குது.”“இதுக்குதான் அப்பா படிக்கிற காலத்திலேயே, உன்கிட்டே போராடினாரு.”,“நான் சாதாரண குமாஸ்தாதான். பெரிசா சொத்து, சுகம் எதுவுமில்லை. நான் சம்பாதிக்கிற பணம்தான் நம்மை காப்பாத்திட்டிருக்கு. நீ நல்லா படிச்சு உன் தகுதியை வளர்த்துக்கன்னு கிளி பிள்ளைக்கு சொல்றமாதிரி சொன்னாரு. வயசு திமிரு. அவர் சொன்னதை கேட்டியா... இப்ப தடுமாறுவது நீதானே. நல்லா படிச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா.”சாப்பிட்டு கொண்டிருந்த தட்டைதூர வீசுறான்.“குமார்... என்னப்பா இது... நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு தட்டை வீசுறே... தப்புப்பா... இப்படியெல்லாம் செய்யக்கூடாது.”பரிதவிப்புடன் இறைந்து கிடந்த சாப்பாட்டை பார்த்து சொல்கிறாள்
Disponible desde: 12/02/2024.
Longitud de impresión: 48 páginas.

Otros libros que te pueden interesar

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver libro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver libro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver libro