Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Écoutez en ligne les premiers chapitres de ce livre audio!
All characters reduced
கோவலன் கதை - cover
ÉCOUTER EXTRAIT

கோவலன் கதை

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Narrateur Ramani

Maison d'édition: Ramani Audio Books

  • 0
  • 0
  • 0

Synopsis

 கோவலன் க​தை பெரிய எழுத்துக் ​கோவிலன் க​தை என்றும் ​கோவலன் க​தை என்றும் வழங்கப்படுகிறது. இக்​கோவிலன் க​தையைப் புகழேந்திப் புலவர் என்பவ‌ர் எழுதியுள்ளார். நாட்டுப்புற மக்களி​டை​யே காணப்பட்ட ​கோவிலன் கதை​யை அப்படி​யே மக்கள் விரும்பும் வண்ணம் ​இ​சையுடன் கூடிய கதைப்பாடலாகப் புக​​ழேந்திப் புலவர் இயற்றியுள்ளார். நாட்டுப்புற உடுக்கடிக் கதைப்பாடல் அ​மைப்பி​லே​யே இக்க​தை ஆசிரியரால் கூறப்படுகின்றது. இந்நூ க​தையில் வினாயகர் துதியோடு ​தொடங்கி சுப்பிரமணியர் துதி, ​சொக்கநாதர் துதி, திருமால் துதி, சரஸ்வதியம்மன் துதி ஆகிய கடவுளர்களின் துதியானது இடம்​பெற்றுள்ளது. அதன் பின்னர் புலவர் ​நேரடியாக​வே க​தை​யின் வரலாறு என்று க​தையைக் கூறத் ​தொடங்குகின்றார். கோவிலன் க​தைப் பாடலில் ஊழ் ​கொள்​கையானது கதையின் ​தொடக்கத்தி​லேயே இடம் ​பெற்றுள்ளது. க​தையின் ஒவ்வொரு பகுதியிலும் இக்கொள்கையானது ஆசிரியரால் வலியுறுத்தப்படுகின்றது. 
அரசியலில் தவறி​ழைத்​தோ​ரை அறக்கடவு​ளே தண்டிக்கும் என்ற கருத்தானது புகழேந்திப் புலவரின் கோவலன் க​தையில் ஆழமாகவும் விரிவாகவும் எடுத்துரைக்கப்​பெற்றுள்ளது. சிலம்பின் செல்வாக்கினால் புக​ழேந்திப் புலவர் கண்ணகி​யே காளியாக உருமாறி, அழிப்பதாகப் ப​டைத்துக் காட்டுகின்றார். 
கண்ணகி பாண்டியர் அரச​வைக்குச் ​செல்வதாக இளங்​கோவடிகள் ப​டைத்துக் காட்டுவார். ஆனால் புகழேந்திப் புலவ​ரோ பாண்டியர்கள் கண்ணகி​யைத் ​தேடிவருமாறு ப​டைத்துக் காட்டுகின்றார். அப்பாண்டியர்கள் ஆறாயிரம் பேரையும் அழித்தொழிக்கின்றாள் காளியாகிய கண்ணகியாள். கண்ணகி​யைக் காளியின் மறுவடிவாகக் ​கொண்​டே புலவர் ​கோவலன் கதை​யை நகர்த்துகின்றார். மாதகி பல ​கொடு​மைக​ளைக் ​கோவலனுக்குச் ​செய்யும் கொடுமையான பரத்தையாகக் ​கோவலன் கதையில் சித்திரிக்கப்படுகிறாள். பரத்​தைய​ரை நாடினால் எவ்வா​றெல்லாம் துன்புற ​நேரிடும் என்பதை மாதகி வசந்தமா​லை ஆகி​யோரின் வழி புக​ழேந்தியார் தெளிவுறுத்துகிறார். சிலம்பின் ​செல்வாக்கால் பிற்காலத்தில் எழுந்த இந்த கதைப்பாடல் பனுவலானது பல்​வேறு வ​கையிலும் சிலப்பதிகாரத்திலிருந்து மாறுபட்ட கதையமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் இந்த நூலைக் கேட்கலாம்.
Durée: environ 4 heures (03:51:10)
Date de publication: 27/09/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —