Patthumalai Bandham - பத்துமலை பந்தம்
Kalachakkaram Narasimma
Narrador Pushpalatha Parthiban
Editora: itsdiff Entertainment
Sinopse
Pathumalai Bandham by Kalachakkaram Narasimma வழங்குபவர்கள்: Aurality மற்றும் சுவாசம் பதிப்பகம் வாசிப்பவர்: புஷ்பலதா பார்த்திபன் காலச்சக்கரம் நரசிம்மாவின் நாவல்கள் அமானுஷ்யம், ஆச்சரியம், வரலாற்றுத் தகவல்கள் கொண்ட சுவாரசியமான நடையுடன் வாசகர்களை ஒருதனி உலகத்துக்குள் அழைத்துச் செல்பவை. புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாமல் தொடர்ந்து படிக்கத் தூண்டும் எழுத்து நடையை கொண்டவை. பத்து மலை பந்தம் என்ற இந்த நாவலும் இதற்கு விதிவிலக்கல்ல.நவ பாசாண முருகன் சிலை மற்றும் அதை சுற்றி நடக்கும் அதிசய சம்பவங்கள் என இந்த நாவல் தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவிற்கு பாய்ந்து செல்லும் விமானத்தை போல பறந்து செல்கிறது. சித்தர்களின் வாழ்க்கை, அவர்களது அரிய செயல்கள், தவறாக நடப்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் தண்டனை, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என இந்த நாவல் சொல்லும் விவரங்கள் ஏராளம். சுவாரசியமான ஒரு ஆச்சரிய ஆன்மீக பயணத்தை இந்த நாவல் வாசகர்களுக்கு அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை எழுத்தாளர் Kalachakkaram Narasimma (Author) எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம்
Duração: aproximadamente 8 horas (07:55:40) Data de publicação: 27/08/2025; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

