Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
பூவே உன்னை நேசிப்பேன்! - cover
LER

பூவே உன்னை நேசிப்பேன்!

ஆர்.மகேஸ்வரி

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

சமைத்து வைத்தவற்றை கொண்டு வந்து டைனிங் டேபிளில் பரப்பி வைத்தாள்.வாசுகி... எல்லோருக்கும் பரிமாறினாள்.மாலினி ஒரு ஓரமாய் நின்று கொண்டாள். ராகவன் அவளை ஏதேச்சையாய் பார்ப்பதுப் போல் பார்த்து வேதனைப்பட்டார்.‘பாவம்... இங்கே வந்த பிறகு ரொம்ப இளைத்து விட்டாள்.’அன்னம் கணவரின் முகபாவத்தை கவனிக்க தவறவில்லை. வாசுகியை பார்த்து கண்களால் அவளை அப்புறப்படுத்த சொன்னாள்.“இங்கே ஏன் நிக்கறே?” என்று கேட்டாள் வாசுகி.“ஏதாவது தேவைப்படும்னா...”“தேவைப்பட்டா, கூப்பிடறேன். அப்ப வந்தாப் போதும். காலையிலே பவுடர் போட்டு ஊறவச்ச துணி! இன்னும் துவைக்கலே. சாயம் போகறதுக்குள்ளே... அந்த வேலையாவது உருப்படியா முடி... போ”“ச... சரிங்க...” என்று போய்விட்டாள் மாலினி. ராகவன் பரிதாபமாய் அவளைப் பார்த்தார்.“ம்...ம்... வேடிக்கை பார்க்காம சாப்பிடுங்க.” என்றாள் அன்னம். ஆனால், அவருக்கு சாப்பாடு இறங்கவில்லை.“நீ என்னடி... எண்ணி... எண்ணி சாப்பிடறே?”“பிடிக்கலேம்மா...”“பிடிச்சதா சாப்பிடு...!”“எனக்கு எதுவுமே பிடிக்கலே... எதுவுமே நல்லாயில்லே...” என்று சிணுங்கினாள் லாவண்யா.எதுவுமே நல்லாயில்லேன்னு நமக்குத் தெரியுது. உங்கப்பாவுக்கு தெரியலியே! காசை வீசியெறிஞ்சா... எத்தனையோ சமையல்காரங்க கிடைப்பாங்க! ஹூம்... சொன்னா கேட்டாதானே? நம்ம தலையெழுத்து... அந்த சண்டாளி சமைக்கிறதை நாம சாப்பிட்டுதான் தீரணும்!”“ஏண்டி... எதையாவது குறை சொல்லிட்டேயிருக்கே? சமையல் நல்லாதானே இருக்கு?”“இருக்கும்... இருக்கும்... உங்களுக்கு அவ சமைச்சா... தேவாமிர்தமாதான் இருக்கும். பாவி... வந்தாளே என் வீட்டுக்கு... வயித்தெரிச்சலை கொட்டிக்கறதுக்கு?”“எனக்குப் போதும்!” என்றபடி பாதி சாப்பாட்டில் எழுந்து கொண்டாள் லாவண்யா...மகளை கவலையாய் பார்த்தாள் அன்னம்.களைத்துப் போனாள் மாலினி. துணிகளை அலசி காயப்போட்டு க்ளிப் போட்டாள்.அந்த வீட்டில் வாஷிங்மெஷின் இருக்கிறது. ஆறு மாதத்திற்கு முன்பு வரை இயங்கிக் கொண்டிருந்த மிஷின் இவள் வந்த உடனே... என்ன காரணத்தினாலோ இயங்குவதை நிறுத்திக் கொண்டது.மைனர் ப்ராப்ளம்தான். ஆனாலும் அந்த ரிப்பேரை சரிப்பண்ண யாரும் முன்வரவில்லை. மாலினி என்கிற மெஷின் அந்த வீட்டிற்கு வந்தபிறகு... வாஷிங்மெஷினுக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.சுவிட்ச் போட்டதுப் போல், சமையல்காரியும், வேலைக்காரியும் காணாமல் போனார்கள்.மாலினி வருத்தப்படவில்லை.அவளுக்கு... இதைவிட பாதுகாப்பான கூரை வேறு எங்கும் கிடைக்கப் போவதில்லை.யாரிடமோ சிக்கி சின்னாபின்னமாவதைவிட, இந்த வீட்டில் உள்ளவர்களுக்காக உழைத்து சிரமப்படுவது எவ்வளவோ மேல்!கொல்லைப்புற சிமெண்ட் கல்லின் மீது ஆயாசமாய் அமர்ந்து கொண்டாள்.கல்லை ஒட்டிய கொய்யா மரத்தின் மீது அமர்ந்து இருந்த அணியில் இவளைப் பார்த்து வேறு கிளைக்கு தாவி ஓடியதில்... சின்ன கொய்யா ஒன்று அவள் மடியில் விழுந்தது
Disponível desde: 13/01/2024.
Comprimento de impressão: 51 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver livro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver livro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver livro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver livro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver livro