Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
நீயில்லாமல் நானும் நானல்ல - cover

நீயில்லாமல் நானும் நானல்ல

ஆர்.மகேஸ்வரி

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

வானம் இருட்டத் தொடங்கியது.
 
காலடி ஓசை கேட்டு... தன்னை இயல்பு நிலைக்கு மாற்றிக் கொண்டு திரும்பிப் பார்த்தான். கணேஷ், ராஜா, திலீப்... எனத் தனது நண்பர்கள் பட்டாளம். அவர்கள் தன்னை வம்புக்கு இழுத்து எவ்வாறு கதறடிக்கப் போகின்றனரோ எனப் பயந்தான் 
 
“டேய் அரவிந்தா... படிக்கறே காலத்தில் பெண்கள் பக்கமே திரும்பக்கூட மாட்டே! சாமியாராச்சே...” ராஜா முடிப்பதற்குள்.  
 
“சாமியார்தான்! இப்போ சம்சாரியாகப் போறார்!”
 
திலீப் அபிநயித்துச் சொல்ல... அத்தனை பேரும் கைத்தட்டிச் சிரித்தனர். தன் கவலையை மறந்து அரவிந்தனும் சிரித்து விட்டான். 
 
“பெண்களைப் பற்றி பேசினாலே முகம் சுளிப்பே! காதைப் பொத்திக்குவே... ம்ம்... இப்போது என்னடாவென்றால் எங்களுக்கு முன்னாடியே மேரேஜா?” சொல்லி விட்டு நக்கலாய் தலையசைத்தான் கணேஷ்.
 
“சரி அதெல்லாம் போகட்டும் விடுங்கடா. ஆமாம் அரவிந்த்... எத்தனை குழந்தைகள் பெத்துக்குவீங்க?” திலீப் சிரிக்காமல்... சீரியசாய் கேட்க... அரவிந்தனுக்கு இருந்த மனநிலையில் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. 
 
“ஒன்றா...? இரண்டா...?” மேலும் அவனை வம்புக்கு இழுக்க. 
 
“டஜன் தான். கேக்கறான் பாரு கேள்வி!” அரவிந்தன் சீறினான். 
 
“என்னடா மச்சி... சில்ரன்ஸ் பார்க் வைக்கப் போறீயா?”
 
“ஆச்சர்யமா இருக்கே! அமுல் பேபி அரவிந்தனா இப்படியெல்லாம் பேசுவது!” 
 
“விரல் சூப்பி பையனா இருந்தவன் எப்போடா மாறினே? ம்ம்... எங்களுக்கெல்லாம் பொறாமையா இருக்கே!” 
 
“அண்ணியோட அழகுல விழுந்தவன் இன்னும் எந்திரிக்கவே இல்லையா...? இப்ப புரியுது... நீ அண்ணி கிட்ட எவ்வளவு மயங்கி கிடக்கேன்னு!”
 
“நீ சொல்வது நூறு சதவீதம் சரிதான் மாமா” இப்படி ஆளாளுக்கு கிண்டலடிக்க... 
 
அரவிந்தன் தொய்ந்து போய் விட்டான்.
 
“ச்சே! என்னடா இது? என் நிலைமை புரியாம... உங்க திருவாயை மூடுங்கடா!” அரவிந்தன் கையெடுத்துக் கும்பிட்டான்.  
 
திலீப் கேட்டான். “முக்கியமா ஒண்ணை மறந்து விட்டோம். ஆமா லவ்வா...?” 
 
“டேய்... டேய்... போதும்டா சாமிகளா! இதுக்கும் மேலே என்னால் தாங்க முடியாது... போங்கடா... அங்கே போய் நம்ம பிரண்ட்ஸை என் சார்பா இன்வைட் பண்ணுங்க... என்னை கொஞ்சம் தனியே விடுங்கடா... ப்ளீஸ்...” அப்பாவியாய் அவன் கெஞ்ச... 
 
அப்போது அங்கே கௌசல்யா வேகமாய் வந்தாள். அரவிந்தனைப் பார்த்து தலையசைத்து அருகே அழைத்தாள். மகா மட்டமாய் கண்ணை சிமிட்டி வேறு கவர்ச்சியாய் சிரித்தாள். 
 
பதறிப்போனான். அவள் செய்கையால் வெட்கிப் போனான். 'என்ன மாதிரிப் பெண் இவள்! 
 
நான்கு பேர் இருக்கிறார்களே... அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று துளிகூட இல்லையா! இந்த லட்சணத்தில் அவளோடு எப்படித்தான் குடும்பம் நடத்துவதோ!' இப்படி அரவிந்தன் நினைக்கும்போதே நெஞ்சில் நெருஞ்சியை வைத்து தேய்த்தது போல இருந்தது.” 
 
“ஒன்மினிட் ப்ரண்ட்ஸ்” என்று அவன் அவளின் அருகில் ஓட... “கல்யாணத்துக்கு முன்பே ஒரு கண்ணசைவுக்கு இப்படி சிட்டாய் பறப்பவன் முடிஞ்சா இன்னும் என்ன கூத்தெல்லாம் செய்வானோ!” என்று நண்பர்கள் நக்கலடித்துக் கொண்டு சென்றது அரவிந்தனின் காதில் விழுந்தது. 
 
கௌசல்யாவின் அதீத அலங்காரமும்... கண்ணைப் பறிக்கும் லிப்டிக்கும் ஏனோ அவனுக்கு அசிங்கமாய் தெரிந்தது. 
 
கல்லூரி நாட்களில் நண்பர்களிடம் பெண்களைப் பற்றி வாதிட்டது ஞாபகத்தில் மின்னியது
Available since: 02/07/2024.
Print length: 124 pages.

Other books that might interest you

  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Show book
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book