Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
மனம் விரும்புதே உன்னை - cover
LER

மனம் விரும்புதே உன்னை

ஆர்.மகேஸ்வரி

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

தெருவிளக்குகள் எரிய ஆரம்பித்திருந்தன.பூரணி ஹாலின் மூலையில் செருப்பை கழற்றி வைக்கப் போன போதுதான் கவனித்தாள் அங்கு இன்னொரு ஜோடி செருப்பிருந்தது.பூரணி கண்கள் சுருக்கி யோசனையோடு உள்ளே நுழைந்தபோது தெரிந்து போனது.விஜயலட்சுமி வந்திருந்தாள். சிவக்குமாரின் அம்மா!விசாலாட்சி எதையோ சொல்லி சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தாள். விமலா அவர்கள் முன் தட்டில் சாப்பிட போண்டாவும் காபியும் கொண்டு வந்து வைத்தாள். முதலில் விஜயலட்சுமிதான் பூரணியைப் பார்த்தாள்.“வாம்மா... பூரணி!” என்று வாஞ்சையோடு அழைத்தாள்.பூரணி தலைகுனிந்தபடி ஏதும் பேசாமல் அவர்களைத் தாண்டி செல்ல முற்பட்டபோது விஜயலட்சுமி அவள் கையைப் பற்றினாள்.“உக்காரு பூரணி!” வேறு வழியின்றி அமர்ந்தாள்.“உன்னைப் பார்க்கறதுக்காக... ஒரு மணி நேரமா காத்துக்கிட்டிருக்காங்க உங்க அத்தை! ஏம்மா லேட்டு?” என்றாள் விசாலாட்சி.அம்மாவை ஒரு கணம் முறைத்தவள் விஜயலட்சுமி பக்கம் பார்வையைத் திருப்பினாள்.“என்ன விஷயம்?” பூரணி பளிச்சென்று கேட்கவும் அந்தம்மாள் கொஞ்சம் தடுமாறித்தான் போனாள்.“ஒண்ணுமில்லேம்மா! உன்னைப் பார்க்கறதுக்கு ஏதாவது காரணத்தை தூக்கிட்டு வரணுமா? உன்னைப் பார்க்கணும் போல இருந்துச்சு! அதோட... சிவக்குமார். வேலை விஷயமா கேரளா போய் வந்தான். உனக்குநேந்திரங்காய் சிப்ஸ் பிடிக்கும்னு உங்கண்ணன் மூலமா தெரிஞ்சு வச்சிக்கிட்டு... உனக்காக வாங்கிட்டு வந்தான். இந்தா பூரணி” என்றபடி ஒரு கிலோ பாக்கெட்டை அவளிடம் நீட்டினாள்.பூரணி அதை வாங்காமல் வெறித்துப் பார்த்தாள்.“வாங்கிக்க பூரணி!” என்றாள் விசாலாட்சி.மௌனமாய் வாங்கிக் கொண்டாள்.“எங்க வீட்டுக்கு நீ சீக்கிரம் வரணும் பூரணி எனக்கு சிவக்குமார் ஒரே பையன்தான்! அவனும் ஆபீஸ்க்கு போயிடறான் நான் தனியா வீட்லே இருக்க வேண்டியிருக்கு. நீ வந்த பிறகு தான் அந்த வீடு கலகலன்னு இருக்கும்!”‘இருக்கும்... இருக்கும்.’ என்றெண்ணிக் கொண்டாள் பூரணி.“சம்பந்தியம்மா... முதல்ல போண்டா சாப்பிடுங்க. ஆறிப் போகுது!” என்றாள் விசாலாட்சி.“பூரணி... நீயும் சேர்ந்து சாப்பிடேன்!”“இல்லே... வேண்டாம். ஆபீஸ் கேன்ட்டீன்ல சாப்பிட்டுட்டுதான் வந்தேன் நான் முகம் கழுவணும்!” என்றபடி எழுந்து விட்டாள்.“கேன்ட்டீன்ல சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதே பூரணி” விஜயலட்சுமி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து சென்று விட்டாள்.விசாலாட்சிக்கே என்னமோப் போலாகி விட்டது.“தப்பா நினைச்சுக்காதீங்க! அவ குழந்தை மாதிரி. அவ யதார்த்தமாதான்...”“அடடா... எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு? நான் தப்பா நினைச்சுக்கலியே நானும் பொண்ணுதானே? அவமனசை என்னால் புரிஞ்சுக்க முடியுது. பள்ளமாகிப்போன இதயத்துல அன்பால பூசி மெழுகிடுவேன். அந்த நம்பிக்கை எனக்கிருக்கு. அவ புரிஞ்சுக்கறதுக்கு பழகிக்கறதுக்கு கொஞ்ச நாளாகும்அது எல்லா பொண்ணுங்களுக்கும் உள்ள ஆரம்ப பிரச்சனைதானே? நீங்க இந்த விஷயத்தை பெரிசுபடுத்தறதுதான் எனக்குப் பிடிக்கலே!”விசாலாட்சியின் கண்கள் கண்ணீரில் தளும்பின.“என் பொண்ணை இப்படி நடுக்கடல்ல தள்ளிவிட்டுட்டியேன்னு கடவுளை தினந்தோறும் பழி சொல்லி சண்டை போட்டுக்கிட்டிருந்தேன். ஆனா, அந்த கடவுளே இப்ப உங்க ரூபத்துலே வந்திருக்கு. என் பொண்ணை கடவுள் கைவிடலே! அவ செஞ்ச புண்ணியம் நீங்க அவளுக்கு மாமியாரா கிடைச்சிருக்கீங்க!”“சேச்சே... என்னைப் போய் கடவுள், கடவுள்னு. விமலா! போண்டா நீயா செஞ்சே? அருமையா மெது மெதுன்னு இருக்கு. இன்னொன்னு சாப்பிடணும்ணு ஆசையா தான் இருக்கு. ஆனா, என் பேரப்பிள்ளைகளையெல்லாம் கொஞ்சறதுக்கு கடவுள் எனக்கு ஆயுளைத் தரணும். இதை அதிகமா சாப்பிட்டா எனக்கு மூச்சிரைக்கும்!” சிரித்தபடி சொன்னாள்.“ஏம்மா அப்படி சொல்றீங்க? உங்க பேரப்பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி அதுங்களும் குழந்தைங்க பெத்துக்கறதையும் பார்க்கத்தான் போறீங்க!” என்றாள் விமலா.“என்னம்மா... நல்லாருக்கீங்களா?” என்ற குரல் கேட்டு மூவரும் வாசல் பக்கம் திரும்பினர்.அன்னம்மாள் நின்றிருந்தாள்.அந்த நேரத்தில் அந்த இடத்தில் அவளை எதிர்பார்க்கவில்லை விசாலாட்சி.“வா... வாங்க” என்றாள்.“பூரணி எங்கே? ஆபீஸ்லேர்ந்து வந்துட்டாளா?” அன்னம்மாளின் கண்கள் பூரணியைத் தேடியது.விஜயலட்சுமி புருவம் சுருக்கி வந்த பெண்மணியைப் பார்த்தாள்.விசாலாட்சி மரியாதை நிமித்தமாக அவர்களை அறிமுகப்படுத்தியாக வேண்டிய கட்டாயம்.“இவங்க... பூரணியோட மாமியார்!” என்றாள் விஜயலட்சுமியிடம்.“வணக்கம்மா!” என்று கைகூப்பினாள்வணக்கம்! நீங்க?” என்றாள் அன்னம்மாள்.
Disponível desde: 13/01/2024.
Comprimento de impressão: 43 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver livro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver livro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver livro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver livro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Ver livro
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Ver livro