¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
மேகமாய் வந்து போகிறேன் - cover

மேகமாய் வந்து போகிறேன்

ஆர்.மகேஸ்வரி

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

சாப்பிட்டு முடித்து... தயாளன் சென்னைக்குப் புறப்பட்டுப் போனதும் சுப்ரியா மனம் கலங்கினாள்.“நீ ஒழுங்காய் இருந்திருந்தால்... நானும் ஒழுங்காய் இருப்பேனே டாடி! இப்படி வீடு வீடா என்னை விட்டு... எதை மாத்தப்போறே?”இந்த சின்ன வீட்டிற்குள் எவ்வளவு நேரம் தான் இருப்பது? போரடித்தது அவளுக்கு!மூன்று பெட்ரூம், ஒரு ஹால், பூஜையறை, கிச்சன், பாத்ரூம் வகையறாவுடன் மொட்டை மாடி! அவ்வளவதான்! இந்த வீட்டின் மொத்தமும், சென்னையில் உள்ள அவள் வீட்டின் ஹாலில் அடங்கி விடும்.அவளுக்கென்று ரோமா தன் அறையை ஒதுக்கித் தந்திருந்தாள்.சுப்ரியா முகம் சுளித்தாள்.“இதுவா... இதிலேயா நான் தங்கணும்? எங்க வீட்டு பாத்ரூம் அளவுக்குதான் இருக்கு?”ரோமா சங்கடமாய் நெளிந்தாள்.“எனக்கு இது அதிகம். ஆனா, உனக்கு பத்தாது தான்!”“பக்கத்து ரூம் கொஞ்சம் பெரிசாயிருக்கே? அங்கே ஷிப்ட் பண்ணு!”“அ... அது... எங்க ஆதி அண்ணாவோடது சுப்ரியா.”“இருக்கட்டுமே... ஸோ வாட்?”“அ... அண்ணனுக்கு தான் வச்சப் பொருள் வச்ச இடத்துல இல்லைன்னா கோபம் வரும். ப்ளீஸ்... அட்ஜஸ்ட் பண்ணிக்க.”“ஏஸியெல்லாம் இல்லையா? அட சீலிங் ஃபேன் கூட இல்லாம எப்படி உயிர் வாழறே ரோமா?”அவளின் பேச்சில் தொனித்த ஏளனமும், கிண்டலும் அவர்களின் வசதியின்மையை சுட்டிக்காட்டுவதை நன்றாகவே உணர்ந்தாலும் ரோமாவிற்கு அவள் மீது கோபமே வரவில்லை.“இது உங்க ஊரு மாதிரி ஹாட் இல்லை சுப்ரியா! வெலிங்டன். ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கிற ஊரு. அதோ டேபிள் ஃபேன் இருக்கு. ஆனா, ஈவினிங்ல இந்த ஜன்னலை மூட மறந்துட்டியோ... பனிப்புகை உள்ளே நுழைஞ்சு உன்னை உறைய வச்சிடும். பி கேர்ஃபுல்!”.“ரியல்லி? ஜன்னல் வழியா பனிப்புகை உள்ளேயே வந்துடுமா? சில்லுன்னு இருக்குமா? என்னை அப்படியே... கவர் பண்ணிக்குமா? த்ரில்ங்கா இல்லே?” விழிகள் விரிய ஆர்வமாய் கேட்ட போது...ரோமாவிற்கு சிரிப்புதான் வந்தது.“ஏன் சிரிக்கிறே?”“ரொம்ப சாதாரண விஷயம் தான் இது? ஆனா அதைக் கூட தெரிஞ்சுக்காம... இத்தனை வருஷமா சென்னையிலே மாசுப்பட்ட புகையிலேயே வாழ்ந்திருக்கியே...”“‘வாட்... டு... டூ? இப்படியொரு அத்தை இருக்காங்கன்றதே எனக்கு இப்ப தானே தெரியும்?”“சென்னையை தவிர எங்கேயும் போனதில்லையா?”“பாண்டிச்சேரி, மகாபலிபுரம் தவிர, ரெண்டு முறை கனடாவுக்கும், சிங்கப்பூர், மலேஷியாவுக்கும் ஃப்ரண்ஸோட ஜாலி டூர் போயிருக்கேன். தட்ஸால்!”பேசிக்கொண்டே தன் லெதர் பேக்கிலிருந்து ஷாம்பூ, ஸ்ப்ரே, மாய்ச்ரைஸர் போன்ற பொருட்களை எடுத்து டேபிள் மீது வைத்தாள்.ரோமா பெட் கவரை மாற்றிக் கொண்டே அவளை ரசித்தாள்.மூங்கில் போன்ற தேகம். பள பள சருமம். மாசு மருவில்லாத முகம். உறுத்தாத நிறத்தில் லிப்ஸ்டிக். ஒரே சீராக வெட்டப்பட்ட தோள் தாண்டி புரண்ட கூந்தலுக்கு... அங்கங்கே விட்டு விட்டு தங்க நிறம் பூசியிருந்தாள். முழங்கால் வரை கவ்விப் பிடித்திருந்த பேண்ட்... அவளின் வழுவழுப்பபான கால்களை காட்டியது. டைட்பனியன் அவளின் அளவான அளவை சொல்லியது. மொத்தத்தில் சுப்ரியா அதிரடியான நாகரீகப் பட்டாசு.“உங்கண்ணே எங்கே?”“பெங்களூரில் வொர்க் பண்றார்!”“ஓஹோ... எங்கே... அவரோட போட்டோவையேக் காணோம்”“அதோ... ஹால்ல மாட்டியிருக்கே?”“அதுவா... ஏய்... அது பாரதியார் இல்லே?”“போச்சு... எங்கண்ணன்தான் அது! பாரதியார்னா ரொம்பப்பிடிக்கும். அதனால் அவரை மாதிரி வேஷம் போட்டு போட்டோ எடுத்துக்கிட்டாரு!”அருகில் சென்று உற்றுப் பார்த்தவளுக்கு வித்தியாசம் புரிந்தது.
Disponible desde: 13/01/2024.
Longitud de impresión: 68 páginas.

Otros libros que te pueden interesar

  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver libro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver libro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver libro