¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
காதலே என் சுவாசமாய்… - cover

காதலே என் சுவாசமாய்…

ஆர்.மகேஸ்வரி

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

மறுநாள்...
 
பகலெல்லாம் சூரியனின் கதிர் வீச்சுத் தாங்காமல்... களைத்துச் சோர்ந்திருந்த பூமிக் குழந்தை... இரவு துடிப்பாய்... துள்ளலாய்... பனியில் நனைந்த புத்தம் புது ரோஜா போலக் காட்சியளித்தது. 
 
இன்று கௌசல்யா எட்டு மணியாகியும் வரவில்லை. தவிப்பில் அர்ச்சனாவின் நிமிடங்களைக் கரைத்து விட்டு... ஒரு எட்டரை மணி வாக்கில்... ஒரு இளைஞனுடன் டூவீலரில் வந்து இறங்கினாள். 
 
அந்த இளைஞன் அழகாய் இருந்தான். வண்டியைச் சர்ரென்று திருப்பிக் கையாட்டி விடை பெற்றது... அர்ச்சனாவின் இதயத்துள் பழையவற்றைக் கிளறிக் காயப்படுத்தியது. 
 
“கௌசல்யா... யாருடி அவன்?” பயத்துடன் கேட்டாள். 
 
“என் பிரண்ட்மா!” அலட்சியமாய்ப் பதில் வந்தது.
 
“பத்திரிகைக்காரங்க கண்ணில் பட்டால்... படமெடுத்துப் போட்டு... இல்லாதது பொல்லாததை எழுதிவைத்தால்... உன் அப்பாவுக்குத்தானே அசிங்கம்!” 
 
“அவன் வெறும் ப்ரண்ட்தான்! சும்மா கத்தாதேம்மா...! கடற்கரை போய்க் கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தோம்! அதைத் தப்பா எடுத்துட்டு... ஏன் பத்ரகாளியா ஆடறே?” 
 
“ஏய், இந்த கெட்டபழக்கத்தை விட்டுடு! எங்களைக் கொல்லாதேடி! அப்பாட்ட நீ லேட்டாய் வந்ததைச் சொல்ல மாட்டேன்! நாளையில இருந்து காலேஜ் விட்டதும்... நேரே வீட்டுக்கு வர வேலையைப் பார்! புரியுதா?” சீறிவிட்டுச் சென்றாள், அர்ச்சனா. 
 
அதற்கு அடுத்தநாள்... அன்புவும் வந்துவிட, கௌசல்யா வந்த பாடில்லை.
 
“கௌசல்யா இன்னுமா வரலை? ஏதாவது ப்ரண்டுங்க வீட்டுல பங்ஷன்னு போயிருப்பாளா?” பயந்து பதற்றத்துடன் கேட்டான். 
 
'இன்று அன்புவே கண்டு கொள்வான். கண்டதும் மகளை நினைத்து வருந்துவான். கடவுளே! அன்பு வருந்தாமல் காப்பாற்று! கௌசல்யா அந்தப் பையனோடு வந்து இறங்கக் கூடாது! கடவுளே... கடவுளே...!' மனதிற்குள் வேண்டிக் கொண்டிருக்க... 
 
அதே இளைஞனோடு ஜோடியா... டூவீலரில் கட்டிப் பிடித்துக் கொண்டு வந்து... இறங்கி... அன்பு அங்கே இருப்பதைக் கண்டு... அந்த இளைஞனுக்குக் காற்றிலே முத்தத்தைப் பறக்க விட்டு... அவன் திரும்பிப் போகும்வரை கையாட்டி... விடைகொடுத்து மெதுவாய் வந்தாள். 
 
எளிதில் கோபமடையாத அன்பு... அவள் அலட்சியம் கண்டு சட்டென்று கோபமானான். 
 
“என்ன கௌசல்யா...? ஏன் லேட்? கல்லூரி விட்டதும் நேரே வீடு வராமல்... சரி... யார் அந்தப் பையன்? உன்னோட படிக்கிறானா?” 
 
“இல்லே! காலேஜ்ல சீனியர்! மருத்துவம் நான்காவது வருடம் படிக்கிறான்!” 
 
“அவனோட எங்கே போன?”
 
“ம்... கடற்கரையில் கால் புதையப் புதைய... ஓடிப் பிடிச்சி காதல் விளையாட்டு விளையாடிட்டு வரேன்!” நக்கலாய்ப் பதில் வந்தது. 
 
“ஏய்...” என்று அர்ச்சனா கை ஓங்கி அருகில் போக...
 
“அர்ச்சனா...! நான் கேக்கறேன் இல்ல. நீ ஏன் அவசரப்படுகிறாய்? வாம்மா... வந்து உட்கார்!” என்று கௌசல்யாவை அமர வைத்து... அருகில் அமர்ந்தான். 
 
அலையலையாய்ப் பொங்கி எழுந்த கோபத்தை... எழுந்த வேகத்திலேயே தன்னுள் போட்டுப் புதைத்துக் கொண்டான். 
 
“அப்பாகிட்ட எந்தப் பயமோ... அச்சமோ வேண்டாம்! அலட்சியமும் வேண்டாம்! புரியுதா...? அந்தப் பையன் யார்?” மெதுவாய்க் கேட்டான். 
 
கௌசல்யா மௌனம் காத்தாள்.
 
“அவன் உன் நண்பனா? நண்பன்னால் அவனோட இவ்வளவு நேரம் பேசிட்டு வந்தது தப்பில்லே!”
 
“என்னங்க நீங்க?” - அர்ச்சனா இடைப்புக...
 
“கொஞ்சம் பொறு அர்ச்சனா! சின்னப்பிள்ளை! ஏன் இப்படிக் கோபப்படறே? சரி, கௌசல்யா... வெறும் ப்ரண்ட் மட்டும் தானா? உண்மையை மறைக்காமல் சொல். நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்! தப்பிருந்தா திருத்தி... உனக்குப் புரிய வைப்பேன்!”
 
“ப்ரண்ட் மட்டுமில்லே... என் காதலனும் கூட! நாங்க ஒருத்தரை ஒருத்தர் டீப்பா லவ் பண்றோம்!” கௌசல்யா மௌனம் கலைய... அர்ச்சனா அழுதாள். 
 
“என் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்றாளே! ஐயோ...!” 
 
“அர்ச்சனா! இப்போ என்ன நடந்துடிச்சின்னு அழறே? காதல் ஒண்ணும் தப்பில்லே! ஆனால் விபரம் தெரியாத வயதில் வரது காதலில்லே! இனக்கவர்ச்சி! மெடிக்கல் படிக்கிறே! ரொம்ப கஷ்டமான கோர்ஸ்! நீ படிப்பை மட்டும் பார்!” அன்பு அழுத்தமாய்ச் சொல்ல... 
 
“நான் அவனைக் காதலிப்பேன்! கல்யாணமும் பண்ணிப்பேன்!” 
 
“வேண்டாம் கௌசல்யா...!” அவள் முன் கண்ணீரோடு வந்த அர்ச்சனாவை அலட்சியமாய்ப் பார்த்தாள். 
 
“வேண்டாம்ன்னு சொல்ல... உனக்கு அருகதை இல்லேம்மா! உன் கல்யாணம் எப்படிப் பட்டதுன்னு கேட்டப்ப எல்லாம் லவ் மேரேஜ்ன்னு சொன்னீயே! என் அப்பா இறந்ததும்... இவரைக் கட்டிட்டு வாழறீயா? இது மட்டும் நல்லாவா இருக்கு? நான் வேண்டாம்ன்னா... இவரை விட்டுடுவீயா? காதல் பத்தி... உனக்கு என்ன தெரியும்?” என்ற கௌசல்யா உள்ளே ஓடினாள். 
Disponible desde: 07/02/2024.
Longitud de impresión: 166 páginas.

Otros libros que te pueden interesar

  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver libro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver libro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver libro