Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
இரை தேடும் பறவைகள் - cover

இரை தேடும் பறவைகள்

ஆர்.மகேஸ்வரி

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

அதுவரை பல்லை கடித்து பொறுமையோடிருந்த மாலதி முதல் ஆளாய் வகுப்பை விட்டு வெளியில் வந்தாள். பகலிலிருந்தே அவளுக்கு நல்ல வயிற்றுவலி. அதனாலேயே கொண்டு வந்திருந்த சாப்பாட்டைக் கூட சாப்பிடவில்லை.“ஏய்... மாலு!” வினோலியா கூப்பிட்டாள்.நடந்துக் கொண்டிருந்த மாலதி நின்று திரும்பினாள்.“ம்... என்ன?”“என்னை விட்டுட்டு நீ பாட்டுக்கு ஓடறே?”“ஸாரி வினோ! ஸ்டமக்பெய்ன்... தாங்க முடியலே! என்னால பஸ்ல வர முடியாது. நான் வீட்டுக்கு ஆட்டோவுல போய்டலாம்னு இருக்கேன். இன்னைக்கு ஒருநாள் நீ தனியா போய்டு... வேறு வழியில்லே!”மாலதியும், வினோலியாவும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். ஒரே பஸ்ஸில் பயணம் செய்பவர்கள். ஒரே பஸ் என்றாலும் வினோலியாவின் வீடு... நங்கநல்லூரில் இருந்தது. மாலதியின் வீடு பள்ளியிலிருந்து சற்று தூரத்தில்தான் இருந்தது.வினோலியா தோழியை கவலையுடன் பார்த்தாள்.“ரொம்ப முடியலியா மாலு! நானும் உன்கூட துணைக்கு வரட்டுமா?”“சேச்சே... வேணாம்பா... உனக்கேன் கஷ்டம்? நானே போய்க்கறேன்!’’“பார்த்து... ஜாக்கிரதையா போ... என்ன?”“சரி!” என்று வலியுடன் அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டுச் சென்றாள் மாலதிஎதிர்வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்டாள்.எதேச்சையாக வாசலுக்கு வந்த அம்பிகா.எதிர்வீட்டின் வாசலில் வந்து நின்ற ஆட்டோவை பார்த்தாள்.ஆட்டோவிலிருந்து மாலதி வயிற்றை பிடித்துக் கொண்டு முகம் சுருக்கியபடி இறங்கினாள். ஆட்டோ ஒரு வட்டம் போட்டு திரும்பியது.அம்பிகா அருகில் வந்தாள்.“என்ன மாலதி? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”“வயிறு வலிக்குது ஆன்ட்டி!”“அப்படியா?” என்றபடி ஆச்சர்யமாய் பார்த்தவள் விபரம் புரிந்து முகம் மலர்ந்தாள்,“வீட்டுக்குள்ளே போய் ஒரு ஓரமா உக்காரு! உங்கம்மாவுக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்திடறேன்” என்று பக்கத்தில் இருந்த மளிகை கடையை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.சிரத்தையுடன் வேலையில் மூழ்கி இருந்தாள் சரஸ்வதி. அவள் கையில் ஃபைல் இருந்தது. டேபிள் மீதிருந்த காபி ஆறிப்போய் ஆடைக் கட்டி இருந்தது.சரஸ்வதி கார்ப்பரேஷன் ரெவின்யூ ஆபிஸில் சீனியர் அக்கவுண்டன்டாக பணிபுரிகிறாள்.டேபிள் மீதிருந்த போன் அலறுகிறது.சரஸ்வதி எடுத்தாள்.“ஹலோ... சரஸ்வதி ஸ்பீக்கிங்!”“ஹலோ... நான்தான் அம்பிகா பேசறேன்”“என்ன, ஆச்சர்யமாயிருக்கு? நீங்களா பேசுவது?” வியப்பாய் கேட்டாள்
Available since: 01/13/2024.
Print length: 54 pages.

Other books that might interest you

  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book