Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
புதிராக ஒரு பூ! - cover
LER

புதிராக ஒரு பூ!

ஆர்.சுமதி

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

யுவராணியின் கையிலிருந்த தொலைபேசி கிடுகிடு வென ஆடியது.மெல்ல நழுவியது.அவள் உடலும் மெல்ல சோபாவில் அமர்ந்தது.‘சாந்தகுமார் கொலை செய்யப்பட்டானா? கடவுளே...’ கொஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.இன்னும் காதில் அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன அந்த வாசகங்களே திரும்பத் திரும்ப ஒலித்தன.கைகால்கள் நடுநடுங்க என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறினாள்.நம்ப முடியாத அந்தச் செய்தி அவளைத் தலைகீழாகப் புரட்டிப்போட, சாந்தகுமாரின் முகத்தை உடனே பார்த்து விடத் துடித்தது இதயம்.அவசரமாக வாசலுக்கு ஓடினாள்.போர்டிகோவில் நின்றிருந்த காரை எடுத்துக் கொண்டு அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்திற்கு விரைந்தாள். கடற்கரையை ஒட்டிய ஆள் நடமாட்டமில்லாத பகுதி அது. சவுக்குக் காட்டின் தொடக்கத்தில் அந்த விடிந்தும் விடியாத பொழுதிலும் சிறு கூட்டம் இருந்தது. போலீஸ் ஜீப் தெரிந்தது.சாலையை ஓட்டிப் பிரிந்த மணற் பாதையில் தெரிந்தது சாந்தகுமாரின் கார்.தன் காரை நிறுத்தி இறங்கிய யுவராணியை நோக்கி வந்தார் இன்ஸ்பெக்டர் சத்யம்.எதையோ பேச வாயெடுத்தவர், எதுவுமே பேசாமல் சாந்தகுமாரின் காரைக் காட்டினார்.யுவராணி காருக்கருகே ஓடினாள்.பின் இருக்கையில் பிணமாகக் கிடந்தான் சாந்தகுமார்பார்த்ததுமே அலறினாள் யுவராணி. வாலிலேயே அடித்துக் கொண்டு அழுதாள்.கூட்டம் வேடிக்கை பார்த்தது.ஃபோட்டோகிராபரும் கைரேகை நிபுணரும் அவர்களுடைய பணியைத் தொடங்க, இன்ஸ்பெக்டர் சத்யம் போஸ்ட்மார்ட்டத்திற்கு பாடியைக் கொண்டு போக உத்தரவிட்டார்.அழுது கொண்டிருந்த யுவராணியை நெருங்கினார்.‘மேடம்... உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கணும். நீங்க உங்களைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டா...”“கேளுங்க சார்!” கண்ணீரை துடைத்துக் கொண்டு அவரை ஏறிட்டாள்.“உங்க கணவரைக் கயிறால கழுத்தை நெரிச்சுக் கொலை செய்து அவரோட கார்லயே கொண்டு வந்து இங்க போட்டுட்டுப் போயிருக்காங்க. கொலை செய்தவனோ... இல்லை, அவனோட ஆளோதான் காரை ஒட்டிக்கிட்டு வந்திருக்கானுங்க. உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா?”யுவராணி உதடு பிதுக்கினாள்.“தெரியலை சார். யார் இப்படிப் பண்ணினாங்கன்னு எனக்குத் தெரியலை.”“உங்க கணவர் ஒரு தொழிலதிபர். தொழில் முறையில போட்டியாளர்கள் இருக்க வாய்ப்பிருக்கு. அப்படி யாராவது...”“தெரியலை சார். நான் அவரோட கம்பெனி விஷயத்துல எதிலேயும் ஈடுபடறதில்லை. கம்பெனி விவகாரங்களையும் அவர் இதுவரை வீட்ல பேசினதில்லை. அவர் பேசாதத்துக்குக் காரணம் நான் எப்பவுமே கம்பெனி விஷயங்களை இன்ட்ரஸ்ட்டா கேட்கறதில்லை. அதனால எனக்கு அவரோட தொழில் ரீதியான எந்தப் பிரச்னையும் தெரியாது.”“ஐ...ஸீ... நேத்து அவர் எப்போ வீட்டைவிட்டுக் கிளம் பினார்?”“வழக்கம் போல ஒன்பது மணிக்கு.”“கம்பெனிக்குத்தானே போனார்.”“ஆமா!”“வேற எங்காவது போறதா சொன்னாரா?”“வந்து... ஆமா சார். மதியம் வீட்டுக்குச் சாப்பிட வர மாட்டேன்னு சொன்னார். யாரோ சாப்பிடக் கூப்பிட்டிருக்கறதா சொன்னார். யாருன்னு கேட்டப்ப அவரும் ஒரு தொழிலதிபர் தான்னு சொன்னார்.”“பேர் சொன்னாரா?”“நான் கேட்டிருந்தா சொல்லியிருப்பார். நான் கேட்கலை.”“அதுக்குப் பிறகு அவர் வீட்டுக்கு வரவே இல்லையா?”“ வரலை. ஒரு போன் கூட அவர்கிட்டேயிருந்து வரலை கம்பெனி விஷயமா சில நாள் ராத்திரி வர மாட்டார். அது மாதிரி வரலைன்னு நினைச்சேன். கடைசியில... இப்படி...” அழத் தொடங்கினாள்.போட்டோகிராபர், கைரேகை நிபுணர்களின் வேலை முடிந்ததும், போஸ்ட்மார்ட்டத்திற்குத் தயாரானான் சாந்தகுமார்
Disponível desde: 14/02/2024.
Comprimento de impressão: 58 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver livro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Ver livro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver livro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver livro