Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
போவோமா பொன்னுலகம்! - cover
LER

போவோமா பொன்னுலகம்!

ஆர்.சுமதி

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

கண்ணாடியும் தாயும் ஒன்று.அழகைத் தந்தவள் தாய். அதையே திருப்பி தருகிறது கண்ணாடி.கண்ணாடி எதிரே நின்று சேலை உடுத்திக் கொண்டிருந்தாள் தேன்மொழி.இளமஞ்சள் நிற சேலை. மெல்லிய நூல்வேலை. எளிமையும் அழகையும் கூட்டிக்காட்டியது.வளைந்த இரு புருவங்களுக்கிடையில் திலகத்தை தீட்டியவாறே “அம்மா...” என குரல் கொடுத்தாள்.“சொல்லு...” பதிலுக்கு சமையலறையிலிருந்து குரல் வந்தது.“டிபன் ஆச்சா?”“எடுத்து வச்சுட்டேன்” என்று கையில் டிபன் பாக்ஸுடன் சமையலறையிலிருந்து வெளியே வந்த கோதை நாயகி ஐம்பது வயதில் அதிகமாகத் தளர்ந்திருந்தாள். முகத்தில் சோர்வும், களைப்பும் தெரிந்தது. சுகரும், பி.பி யும் நாங்கள்தான் காரணம் என்றது.அதே சமயம் அறையிலிருந்து வெளிப்பட்டாள் தேன் மொழி. மகளை ஒருகணம் பார்த்து திருப்தியாக சிரித்துக் கொண்டாள்.“உன்னைப் பார்த்தா யாரும் லெக்சரர்னு சொல்ல மாட்டாங்க. ஸ்டூண்ட்டுன்னுதான் சொல்லுவாங்க.”“நீ மட்டும் என்னவாம்? அன்னைக்கு கோவில்ல ஒருத்தர் கேட்டாங்க. இது யாரு உன் அக்காவான்னு?”“போடி! இவ ஒருத்தி. சும்மா எதையாவது சொல்லிக்கிட்டு, நானே எழுபத்திரண்டு வியாதியை வச்சுக்கிட்டு அல்லாடறேன். ஒரு நாள் போறது ஒரு வருஷம் போறமாதிரியிருக்கு. இப்பத்தான் இளமை ஊஞ்சல் ஆடறமாதிரி பேசறா. உடம்புல கொஞ்சம் நல்ல சத்து இருக்கும் போதே உனக்கு கல்யாணம் பண்ணிப் பார்த்துட்டா அது போதும் எனக்கு. உங்கப்பாவுக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லாமல் போய்ட்டு.” அனிச்சையாகஅவளுடைய கண்கள் சுவரில் மாலையோடு சிரித்த கணவரைப் பார்த்தன. பார்த்த நிமிடத்திலேயே கலங்கின. “அம்மா இப்பத்தானே என்னைப் பார்த்தா ஸ்டூடண்ட் மாதிரியிருக்குன்னு சொன்னே. ஸ்டூடண்ட்டுக்கு யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா? அப்புறம் கம்பி எண்ண வேண்டிய வரும். தேன்மொழியின் இந்த வார்த்தைகளுக்கு அம்மா சிரித்துவிட்டாள்.“நல்ல மாப்பிள்ளை வந்தா நீயே கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிடுவே! இந்த வீட்டு மருமகன் எங்கே பிறந்திருக்கானோ?”அம்மா சொல்லவும் தேன்மொழியின் மனதில் ஒரு கணம் பாலா தோன்றினான். கண்ணடித்து காதல் உணர்வுகளைத் தூண்டிவிட்டு மறைந்தான்.வெட்கத்தை மறைக்க முந்தானையை எடுத்து முகத்தை துடைப்பதைப் போல் பாவனை செய்துக் கொண்டாள்.அம்மாவிடமிருந்து டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்ட தேன்மொழி அவசரமாக வெளியே வந்தாள். வாசலில் நின்றிருந்த தன் வாகனத்தை நோக்கிச் சென்றாள்.வாசல் வரை வந்த அம்மா “ஜாக்ரதையாப் போம்மா வரும்போது காய்கறி வாங்கிட்டு வா” என்று சொன்னபடியே டா டா” காட்டினாள்.அம்மாவிற்கு கையசைத்து விட்டு வாகனத்தைக் கிளப்பினாள். அடுத்த அரைமணி நேரத்தில் அவளுடைய வாகனம் அந்தக் கல்லூரிக்குள் நுழைந்தது.மாணவ மாணவிகள் ஆங்கங்கே நிற்பதும் நடப்பதும் பேசுவதும் சிரிப்பதுமாகயிருந்தனர்.சிரித்துப் பேசிக் கொண்டிருந்த சில மாணவ மாணவிகள் அவளுக்கு வணக்கம் சொல்லியபடி நாசுக்காக விலகி நடந்தனர்.புரிந்ததைப் போல் சிரித்தாள் தேன்மொழி.மறுபடியும் பாலா மனதில் தோன்றி சிரித்தான். கண்ணடித்தான்
Disponível desde: 14/02/2024.
Comprimento de impressão: 103 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver livro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver livro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver livro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Ver livro