¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
கண்ணன் வரும் நேரமிது - cover

கண்ணன் வரும் நேரமிது

ஆர்.சுமதி

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

புருஷன் இருக்கறவரைதான் நமக்கு மதிப்பு மரியாதை. அப்பறம் ஒண்ணும் கிடையாது.’சுசீலாவைப் பார்த்தபடியே லட்டு பிடிக்கத்துவங்கிய பிரபாவதிக்கு சற்று முன் செண்பகம் சொன்ன இந்த வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.‘புருஷன் இருக்கறவரைதான் மதிப்பும், மரியாதையும் கிடைக்குமாம். புருஷன் இருந்து இவளுக்கென்ன கிடைத்தது? கடைசியில் ஹோமில் இருக்க வேண்டிய நிலமை.’‘அதுக்கென்ன பண்றது? இவளை யாரு ஹோம்ல இருக்கச் சொன்னா? புருஷனும் பொண்ணுங்களும் பேரும் புகழுமாயிருக்காங்க. பணத்துலயே புரள்றாங்க. இவ நினைச்சா மகாராணி மாதிரி வாழலாம். திமிர் வேற என்ன? வரட்டு கௌரவம். தானே தன்னை வருத்திக்கறா. இவளுக்கென்ன ஹோம்ல வந்து கெடக்கணும்னு தலையெழுத்தா? காசுதான் வாழ்க்கை என நினைப்பவர்கள் அவளைப்பற்றி பேசும் பேச்சு இது.’‘வாழ்க்கைன்னா விட்டுக் கொடுத்துத்தான் போகணும்!வாழ்க்கையைப் பற்றிய தத்துவங்களை பேசுவதற்காகவே அவதாரம் எடுத்த அரிஸ்டாட்டில்கள் அவளுக்கு தரும் அறிவுரை இது!’இத்தனைக்கும் வயது சுசீலாவிற்கு ஐம்பதுதான். அதற்குள்ளேயே வாழ்க்கையை வெறுத்துவிட்டாள்.‘யாருக்காக ஓடி ஓடி உழைக்கணும்? உழைச்சு உழைச்சு என்னாகப் போகுது? நம்ம உழைப்பு மத்தவங்களோட முன்னேற்றத்துக்கு உதவுறவரைதான் நம்ம உழைப்புக்கு மதிப்பு. அதுக்கு பிறகு நம்ம உழைப்பு அவங்களுக்கு கால் தூசு!’இதுதான் சுசீலா தன் வாழ்க்கையிலிருந்து கத்துக்கிட்ட பாசம்தன் உழைப்பு பிறருக்கு கால்தூசியான போது அவள் உழைப்பதை நிறுத்தி விட்டாள்.வேலையை ராஜினாமா செய்துவிட்டாள். எடுத்துக்கொண்டிருந்த டியூஷனையெல்லாம் மூடினாள். கையிலிருக்கும் பணமே காலம் முழுவதும் என் ஒருத்திக்கு போதும் என இந்த ஹோமில் வந்து சேர்ந்து விட்டாள்.முதியோர் இல்லத்தில் வந்து சேருமளவிற்கு அவள் ஒன்றும் வயதானவளில்லை.ஐம்பதை நெருங்குகிறாள். அவ்வளவுதான். தனியாக வாழப் பிடிக்கவில்லை. இங்கு வந்துவிட்டாள்.இங்கு வந்துவிட்டாலே தவிர யாருடனும் நெருங்கிப் பழகமாட்டாள். மனவேதனையை யாரிடமும் பகிரமாட்டாள்.மனம் விட்டு சிரிக்கமாட்டாள்.அவள் கதையை அவள் பகிர வேண்டிய அவசியமே இல்லை. ஊரே அறிந்த ஒன்று.சுவாரசியமாக பேசும் ஒன்று.‘சுசீலா இந்த நீயூஸை படியேன். உன் புருஷனுக்கும் புதுசா நடிக்க வந்த கேரள நடிகைக்கும் கிசுகிசுன்னு போட்டிருக்கு. இந்த நடிகைகளுக்கு விவஸ்தையே இல்லையா? அழகாயிருக்காளுங்க வயசும் திறமையும் இருக்கு. அப்பன் வயசுலயிருக்கற நடிகர்களை எதுக்கு சுத்தறாளுங்க...’அந்த இல்லத்தில் அடிக்கடி சுவாரசியத்தோடு பேசப்படும் விஷயம், கவர்ச்சிகரமான விஷயம்.‘அடடா... உன் பொண்ணு நிக்கற கோலத்தைப்பாரு.உவ்வே. அது டிரஸ்ஸும் மேக்கப்பும்!’அட்டைப்படத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி நிற்கும் அவளுடைய பெண்ணின் புகைப்படம் வந்திருக்கும் பத்திரிகையை அனைவரும் முகச் சுளிப்புடன் பார்க்கும் போது எதுவுமே தன்னை பாதிக்காததைப் போல் மாத நாவலில் மூழ்கியிருப்பாள் சுசீலா
Disponible desde: 14/02/2024.
Longitud de impresión: 93 páginas.

Otros libros que te pueden interesar

  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Ver libro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Ver libro