Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
கண் வரைந்த ஓவியமே! - cover
LER

கண் வரைந்த ஓவியமே!

ஆர்.சுமதி

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

எமகாதகனாக இருப்பான் போலிருக்கிறது. எதுவும் தெரியக்கூடாது என்று தானே அப்படிப் பொய் சொன்னேன். ஆனாலும் எப்படியோ கண்டு பிடித்து விட்டானே?’வீட்டிற்குத் திரும்பும் போது இதையே யோசித்துக் கொண்டிருந்தாள் மங்களா.“ச்சே... எங்கெங்கெல்லாம் வேலைக்கு முயன்றேன். எதுவும் கிடைக்கவில்லை. கடைசியில் இந்தக் கம்பெனிக்கு வரவேண்டியதாகிப் போனதே! உண்மையை மறைத்தும் எல்லாம் தெரிந்து விட்டது. இவனுடையபேச்சில் நாகரீகம் தெரிகிறது. கடைசி வரை இதை கடைப்பிடிப்பானா? இல்லை மெல்ல மெல்ல ராஜி கம்பெனி பற்றிய விவரங்களைக் கிளறத் தொடங்குவானா? இவன் எப்படிப் பட்டவன்? அடுத்தவனைக் குப்புறத் தள்ளி விட்டு தான் முன்னேற வேண்டும் என நினைப்பது தானே உலகம்? அப்படி ஏதாவது கிளற நினைத்தால் வேலையை விட்டுவிட வேண்டியதுதான்.’இப்படி நினைத்தபோது உள்ளுக்குள் மனதின் மூலை யின் ஒரு குரல் சிரித்தது.‘பைத்தியம்! பழைய கம்பெனியிலிருந்து விலகிய பின் வேலை தேடி எவ்வளவு சிரமப்பட்டாய்! ஒரு வருடம் சரியாக ஒரு வருடம் வேலை இல்லாமல் அலைந்ததை மறந்து விட்டாயா? ஒவ்வொரு மாதத்தையும் ஓட்ட எவ்வளவு சிரமப்பட்டாய்? புதிதாக ஒரு வேலை கிடைத்ததும் பழைய அலைச்சலும், கஷ்டங்களும் மறந்து விட்டதா? வெகு எளிதாக வேலையைத் தூக்கி எறிவேன் என நினைக்கிறாயே? பைத்தியம். பணம்! பணம்தான் வாழ்க்கை. பணம் இல்லாவிட்டால் எதுவும் செய்ய முடியாது.அந்தப் பணத்திற்காகத்தானே அக்கா அருந்ததி அடிக்கடி வந்து நிற்கிறாள். அந்தப் பணத்திற்காகத் தானே நான் அந்தக் கோசலை மைந்தனிடம் போய் நிற்க வேண்டியிருந்தது.’‘பணம். பணம் என்னடா பணம் பணம்? குணம் தானடா நிரந்தரம்?‘கவிஞர் எப்படி இந்த வரிகளை எழுதியிருப்பார்? அவரே எவ்வளவோ தடவை பணத்திற்காக பரிதவித்த பின்னும் இப்படி எழுத எப்படி மனம் வந்தது?’குணம் நிரந்தரமென்றால் அக்கா அருந்ததியை அத்தான் கொண்டாடியிருக்க மாட்டாரா? கொண்டு வாடி என ஏன் அடிக்கடி துரத்தியடிக்கிறார்?வியாபாரத்திற்கு ஐம்பதாயிரம் பணம் வேண்டும் வாங்கி வா என புருஷன் அனுப்பியதாக வந்து நின்ற அருந்ததி திரும்பிப் போக வேண்டுமென்றால் கண்டிப்பாக ஐம்பதாயிரம் கொடுத்தே ஆக வேண்டும்.இல்லாவிட்டால் அவளை வீட்டோடு வைத்துக் கொள்ள வேண்டியதுதான். எல்லாப் பொறுப்புகளையும் உதறிவிட்டு இறைவனைத் தேடி இமயமலைக்குச் செல்லும் துறவிகளைப் போல் அப்பா காவி கட்டாமலேயே கைலாசத்திற்குப் போய் விட்டார். இருப்பதைப் போட்டு அக்காவை கட்டிக் கொடுத்துவிட்டு அவர் போய்விட்டாலும், இன்னும் என்ன இருக்கு எடுத்து வா என அக்கா புருஷன் அனுப்பிக் கொண்டேயிருக்க அவளுடைய தேவைகளைத் தீர்க்கும் தேவதையானாள் மங்களா.அந்தத் தேவையைத் தீர்க்க இந்தத் தேவதை போய் நின்றது கோசலை மைந்தனிடம்!அவர் தன் தேவையைத் தீர்த்துக் கொள்ள நினைத்தார்.‘இந்தப் பணம் தானே கோசலை மைந்தனை என்னைத் தவறாக எடை போட வைத்தது!’நெஞ்சு கொதித்தது நிமிடத்தில்! மறக்க முடியுமா அந்த மனவேதனையை?மோதி மிதித்து விட்டாள். முகத்தில் உமிழ்ந்து விட்டாள். விலகி வந்து விட்டாள். விவேகத்துடன் மன்னித்து விட்டாள்.ஆனால்? ஆனால்..?உள்ளுக்குள் கூனி குறுகிப் போய் விட்டாளே!கடனாகப் பணம் கேட்டதற்கு அவன் சம்பளத்தில் கழித்துக் கொள்ளாமல் சல்லாபத்தில் கழித்துக் கொள்ள நினைத்தது எதனால்?பெண்! பெண் என்ற ஒரே காரணத்தில் தானே?பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்கிறார்கள். அது முற்றிலும் சரியான வார்த்தையே!அந்தக் கோசலை மைந்தனிடம் வலியச் சென்று விழும் பெண்களால் தானே அவன் என்னையும் அதே கோணத்தில் பார்த்தான். ஆபாசம் கூடாது என மேடை போட்டு பெண்கள் பேசுகிறார்கள். போஸ்டரைக் கிழிக்கிறார்கள். சினிமா எடுத்த இயக்குனர்களை சாடுகிறார்கள். ஆண்கள் காமப்பேய்கள் என்கிறார்கள். அரைகுறை ஆடையில் பெண்கள் ஆடமுடியாது. நடக்க முடியாது என்று சொன்னால் அவரைகளைக் கட்டி வைத்து அடித்தா நடிக்க வைக்கிறார்கள்? அரைகுறை ஆடையில் நடிக்க நாங்கள் தயார் எனச் சொல்லும் நடிகைகள் பெண்கள் தானே? அவர்கள் தானே முதல் எதிரிகள்?பெண் கொடுமைகள் மட்டுமல்ல சமுதாயத்தில் பெண்களின் கேவலமான நிலைக்கும் பெண்களே காரணம்.
Disponível desde: 14/02/2024.
Comprimento de impressão: 139 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver livro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver livro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver livro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver livro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver livro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro