Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
'மை' விழி வாசலிலே! - cover

'மை' விழி வாசலிலே!

தேவிபாலா

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

ராஜா சங்கீதாவின் கழுத்தில் தாலி கட்டி விட்டான்.அவர்களது உபச்சாரத்தைத் தாங்க முடியவில்லை. அளவுக்கு அதிகமான பணிவும், செயற்கைத்தனமும் ராஜா வீட்டில் யாருக்குமே பிடிக்கவில்லை.முதல்நாள் ராத்திரியிலிருந்தே தொடர்ந்து வாண வேடிக்கை நடத்திக்கொண்டிருந்தார் சொக்கலிங்கம்.பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தார்.ராஜாவுக்கு ஒரு வகை உபச்சாரம்...அப்பா, அம்மாவுக்கு வேறு வகை என்று ஏகவாரியாக பிரித்து இருந்தார்கள்.எல்லாம் முடிந்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.சொக்கலிங்கம் வீடு அலங்கரிக்கப் பட்டிருந்தது.ராஜா கல்யாணம் முடிந்த களைப்பில் ‘அக்கடா’ என்று சாய்ந்திருந்தான்.சகாயம், ஜெர்வின் அருகில் வந்தார்கள்.“ராஜா! இன்னும் கொஞ்ச நேரத்துல சாந்தி முகூர்த்தம். நீ குழந்தை இல்லை. எல்லாம் தெரியும் உனக்கு. ஆனாலும் சொல்றோம். கிராமத்துப் பொண்ணு! அதிகம் தைரியம் இருக்காது. அவ மிரண்டு போற மாதிரி செயல்படாதே!”“அண்ணா! நீங்க கவலையே பட வேண்டாம். எனக்கு களைப்பா இருக்கு. இன்னிக்கு எதுவும் நடக்காது!”“அப்படியில்லைடா!”சொக்கலிங்கம் வந்தார்“மாப்ளை ரெடியா?”“தோ... வந்துட்டே இருக்கான்.”அவர் போய்விட்டார். பட்டுவேட்டி, சட்டை சகிதம் தனியறைக்குள் நுழைந்தான் ராஜா.சற்று நேரத்தில் சங்கீதா உள்ளே வர, கதவு தாளிடப்பட்டது வெளியே.பால் செம்புடன் குனிந்த தலை நிமிராமல் வந்த சங்கீதா, அதை வைத்துவிட்டு, நமஸ்கரித்தாள்.“எழுந்திரு! தமிழ் சினிமால்லாம் வேண்டாம். இயல்பா இருப்பம். நிறையப் பேசுவோம்! இப்படி வந்து உட்காரு!”சங்கீதா கூச்சத்துடன் உட்கார்ந்தாள்.“என்னைப்பாரு! எத்தனை நேரம் நிலத்தையே பார்த்துட்டு இருப்பே?”“எனக்கு வெக்கமா இருக்கு!”“அப்ப படுத்துத் தூங்கலாமா?”“உங்க இஷ்டம்!”அருகில் நெருங்கி, அவள் முகவாயைத் தொட்டு மெல்ல நிமிர்த்தினான்.அவள் முகத்தை நேருக்கு நேர் நெருக்கத்தில் பார்த்தான்.புருவத்துக்கு மேல் புள்ளிக் கோலமெல்லாம் போட்டு, அழகான முகத்தை அசிங்கப்படுத்தி இருந்தார்கள்.‘சொல்லலாமா?’‘இதுமாதிரி நகை மூட்டையாக நாளை முதல் இருக்காதே என்று சொல்லி விடலாமா?’“அவ கிராமத்துப் பொண்ணு! எடுத்த எடுப்புல உன் அறிவு ஜீவித்தனத்தைக் காட்டி அவளை மிரள வைக்காதே!”ஜெர்வின் சொல்லியிருந்தாள்
Verfügbar seit: 03.02.2024.
Drucklänge: 50 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • ரங்கோன் ராதா - cover

    ரங்கோன் ராதா

    சி.என்.அண்ணாதுரை

    • 0
    • 0
    • 0
    அண்ணா 1947ல் எழுதிய புதினம் ரங்கோன் ராதா. திராவிட இலக்கியத்தின் இலக்கணம் முழுக்க‌ inclusive என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கிவிடும். 40களில் அதற்கு முந்தைய சில நூறு ஆண்டுகளில் தமிழ்ச் சமுதாயம் எப்படிச் சிதைவுற்று இருந்தது என்பதைக் காண்பிப்பதே அண்ணா தொடங்கி சில தசாங்கங்களில் திராவிட இலக்கியத்தின் முனைப்பாக இருந்தது. திராவிடம் என்றாலே ஆரிய எதிர்ப்பு என்ற அனுமானம் பொய் அல்லது பேருண்மையின் ஒரு சிறு துளியே என்பதே அண்ணா மற்றும் கலைஞர் இலக்கிய ஆக்கங்களில் இருந்து வெளிப்படும் உண்மையாகும். சமகாலத்திய சமுதாயச் சீரழிவுகள், பிறழ்வுகள் ஆகிய போக்குகளை உள்ளவாறு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவையே இவ்விருவர் இலக்கியங்கள். தவிரவும் அரசியல், மாநில‌ உரிமைகள், மொழியுணர்வு, இன உணர்வு, பொதுப் பொருளாதாரம், இலக்கிய மேன்மை போன்றவை பற்றிப் பேசுவதற்கென்றே திராவிட எழுத்துப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. படைப்பிலக்கியத் துறையில் அண்ணா மற்றும் கலைஞரின் பங்களிப்பே பிரதானமாக இருந்தது. சித்தாந்தவியலும் படைப்பிலக்கியமும் கைகோர்த்து அன்றைய திராவிட எழுத்துப் பணியைப் பீடு நடை போடச் செய்தன. 
    ரங்கோன் ராதா என்ற கவர்ச்சிகரமான தலைப்பில் மூட நம்பிக்கை, ஆணாதிக்கம், பேராசை, திருமண உறவின் பிறழ்வுகள், வெள்ளந்தியானவர்களுக்கு சமூகத்தில் இழைக்கப்படும் அநீதி, பக்தி துறவு மந்திரம் மாந்திரிகம் என்ற போலி வேடங்களுக்குப் பின் மறைந்திருக்கும் கபடம், துணையற்ற பெண்கள் சீரழிவு, துணிந்து தலை நிமிரும் பெண்களின் வலிமை, சம காலத்திய இளைய தலைமுறையினரின் லட்சிய வேகமும் தீர்மானமும் என்ற இன்னோரன்ன இழைகளைக் கோர்த்து அண்ணா எழுதிய புதினமே ரங்கோன் ராதா. கலைஞரின் திரைக்கதை வசனத்தில் வெளிவந்த திரைப்படம் அண்ணாவின் முழு எழுத்து வீச்சை வெளிக்கொணரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். திரைப்படவியலுக்கே உரித்தான வரையறைககுள் பரந்த திரைச்சீலை உள்ள புதினத்தை அடக்க முடியாது என்பதற்கு சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், பானுமதி, ராஜசுலோசனா, எம்.என்.ராஜம், என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் குலதெய்வம் ராஜகோபால், பி. எஸ். ஞானம் என்ற பெரும்படையே அந்தப் படத்தில் இருக்கின்றனர். என்றாலும் விரிந்த திரையை வெள்ளித்திரையில் சுருக்கும் போது சில பல நட்டங்கள் தவிர்க்க முடியாது போய்விட்டன. 
    Zum Buch
  • Oru Siraiparavayin Pugaippadam - cover

    Oru Siraiparavayin Pugaippadam

    Vaikom Mohammed Bashir

    • 0
    • 0
    • 0
    முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். 'ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்' (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.
    Zum Buch
  • Kalaignar Early Poems - cover

    Kalaignar Early Poems

    Kalaignar Karunanithi

    • 0
    • 0
    • 0
    நிலவைப்பற்றிப் பல நூறு கவிதைகள். எவராவது நிலவை ஒரு கைதியாகப் பார்த்திருப்பார்களா? கலைஞர் பார்த்தார். கவிதை படைத்தார். கலைஞரின் படிமக் கட்டமைப்பில் முயற்சியின் தாக்கம் சிறிதுமின்றி இயல்பாக வெகு இயல்பாக சமவெளியில் ஆழ்ந்த படுகையில் நகரும் நதியின் ஓட்டத்தைப் பார்க்கிறோம். ஆரவாரமில்லை; ஆர்ப்பாட்டமில்லை. "அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று" என்றார் சாத்தனார் சிலப்பதிகாரத்தின் பாயிரத்தில். அறமல்ல கண்ணகியின் மறச்சீற்றமே மன்னனுக்கு கூற்றானது. பிரெஞ்சுப் புரட்சியும் ரஷ்யப் புரட்சியும் மக்கள் மன்னருக்குக் கூற்றாவதைக் கூறும் சரித்திர நிகழ்வுகள். கரைகளுக்குள் ஓடும் நதி ஆர்ப்பரித்து ஓடினாலும் நிலைகெட்டு ஓடாத வரை அணை போட்டுத் தடுப்பாரில்லை. அரசு தறிகெட்டு ஓடாதவரை மக்கள் வெகுண்டெழுவதில்லை. தறி கெட்டு, நிலை கெட்டு, நெறி கெட்டு நியாயம் கெட்டு ஒழுக்கம் கெட்டு வெட்கம் கெட்டு அரசு இயங்குமானால் என்ன நடக்கும்? மக்களாட்சி ஒரு checks and balances mechanism என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் கலைஞர்! தனிமை என்ற கவிதையில் என்னடா இது என்று ஏறக்குறைய கவிதை முடிவு வரைக்கும் போகும்போது கவிதையில் பேசும் காதலி ஒரு பெண்ணல்ல; ஓர் உணர்வு; ஒரு மெய்ப்பாடு; ஓர் இருத்தல் நிலைமை என்று உணரும்போது அடாடா என்றிருக்கும். கேட்டுப் பாருங்கள். கோலரிட்ஜ் “willing suspension of disbelief for the moment which constitutes dramatic faith” என்பார். கலைஞரும் அதைப் பற்றி ஒரு கவிதையில் பேசுகிறார் கேளுங்கள். பிரியத்துக்குகந்தவரை எத்தனை செல்லப் பெயர்கள் வைத்து அழைத்தாலும் அவருடைய சொந்தப் பெயரை வைத்து அழைப்பதுதான் நாவுக்கின்பம், செவிக்கின்பம், மனதுக்கின்பம். தமிழுக்குச் சிறப்புப் பெயர்கள் பல. எனினும் தமிழைத் தமிழே என்றழைப்பதன் சுகமே சுகம். கலைஞர் சொல்கிறார். மு
    Zum Buch
  • திருப்புகழ் - Volume 17 - cover

    திருப்புகழ் - Volume 17

    நிலோபர் அன்பரசு

    • 0
    • 0
    • 0
    திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. 
    ரமணியின் ஒலி நூலாக்கத்தில் பதினேழாம் தொகுதியாக 313 பொதுப்பாடல்களில் 1201 முதல் 1305 வரையிலான 105 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன.
    Zum Buch
  • முத்துத்தாண்டவர் பதம் - cover

    முத்துத்தாண்டவர் பதம்

    Muthuththantavar

    • 0
    • 0
    • 0
    Muthu Thandavar (1525–1600) was composer of Carnatic music. He was an early architect of the present day Carnatic kriti (song) format, which consists of the pallavi (refrain), anupallavi and charanam. He lived in the town of Sirkazhi in Tamil Nadu. Muthu Thandavar, along with Arunachala Kavi (1712–1779) and Marimutthu Pillai (1717–1787) are known as the Tamil Trinity of Carnatic music. Muthu Thandavar also composed several padams, short songs mainly sung accompanying Bharatanatyam performances. Some of these padams are still popular such as Teruvil Varano in raga Khamas and Ittanai tulambaramo in raga Dhanyasi. Ramani has rendered 60 keerthanams in this audio book. 
    முத்துத் தாண்டவர் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர்(1525-1625) ஆவர். தமிழிசையில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து கிருதி வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தில் முத்துத்தாண்டவர் இருந்ததால், அனுபல்லவியை இணைத்து, பல்லவி-அநுபல்லவி-சரணம் என்கிற திரிதாது (திரி-மூன்று) முப்பிரிவு முறையை, தாளத்துக்கும் கதிக்கும் பொருத்தி முழுமைப்படுத்திக் கொடுத்தவர் முத்துத் தாண்டவரே ஆவார். பல்லவி-அனுபல்லவி-சரணம் என்னும் வடிவத்தில், ஜதி தாளக்கட்டுடன் இயற்றப்பட்ட பாடல்களை முத்துத்தாண்டவர் இயற்றிட அதுவே பிற்காலத்தில் வழக்காக மாறியது. இவரின் பாடல்கள் பல பதம் என்கிற வகையினைச் சாரும். இவை பெரிதும் நாட்டியத்திற்காக பயன்படுத்தப்படும் பாடல்கள் ஆகும். மேலோட்டமாக சிருங்கார ரசமும், ஆழமாகப் பார்த்தால் தெய்வீக பக்தியைத் தரும் பதங்கள் அந்தக் காலகட்டத்தில் பிரபலம். அவற்றை உள் வாங்கிக்கொண்டு தமிழிசையில் அழகாக தந்துள்ளார். ரமணியின் குரலில் இவருடைய 60 கீர்த்தனங்கள் இந்த ஒலி நூலில
    Zum Buch
  • கிராஜ நாராயணன் சிறுகதைகள் 1966 1970 - cover

    கிராஜ நாராயணன் சிறுகதைகள் 1966 1970

    K.Rajanarayanan

    • 0
    • 0
    • 0
    கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். 
    1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. 
    கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. 
    ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார். 
    இந்த ஒலி நூலில் 1966 முதல் 1970 வரையில் ராஜநாராயணன் எழுதிய 
    ஒரு காதல் கதை 
    பேதை 
    ஒரு சிறிய தவறு 
    கறிவேப்பிலைகள் 
    ஓர் இவள் 
    கனிவு 
    என்ற 6 கதைகள் இடம் பெறுகின்றன
    Zum Buch