Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
ஆசை ஆசை ஆசை - cover

ஆசை ஆசை ஆசை

ரமணிசந்திரன்

Maison d'édition: Publishdrive

  • 0
  • 0
  • 0

Synopsis

இனிமையான நாதஸ்வர இசை! கம்பீரமும் குழைவுமாகக் கேட்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது!ஆனாலும் ஒரு குறை! ஓடிக் கொண்டிருந்தது, டேப்! பெரிய வித்வானின் வாசிப்புதான் என்றாலும், அந்தப் பெரிய திருமண மண்டபத்துக்கும், அதில் நடக்க இருக்கும் விழாவுக்கும், டேப்ரிகார்டருக்கும் சற்றும் ஒத்து வராதது போல, மதிவதனிக்குத் தோன்றியது!அதுவும் கொஞ்சம் விலை மலிவான ப்ளேயர்! அத்தை வீட்டில் விலை உயர்ந்ததும் இருக்கத்தான் செய்கிறது! ஆனால், மண்டபத்துக்கு அதைக் கொணர்ந்து திருட்டுப் போய்விட்டால்?அந்த ஒரு காரணத்துக்காகவே கொண்டு வரப்பட்டது, இது! அதற்காக, இது திருட்டுப் போனால் பரவாயில்லை என்பதல்ல!“அதன் மேல் ஒரு கண் வைத்துக்கொள், வதனிக் கண்ணு! திருமணமும் அதுவுமாக உருப்படியான ஒரு பொருள் தொலைந்து போனால் நல்லதில்லை! அதனால் தான் பார்த்துக்கொள் என்று உன்னைச் சொல்லுகிறேன்! உனக்குத் துணையாகத்தான், உன் சித்தி, மாமா, பெரியம்மா, அவர்கள் பிள்ளைகள் என்று பெரிய கூட்டமே வந்திருக்கிறார்களே! ஒரு கண் வைத்துக் கொள்ளும்படி, எல்லாரிடமும் சொல்லி வைத்துவிடு!” என்று சொல்லி விட்டுத்தான் அத்தை நகர்ந்தாள்.“எங்கள் அண்ணி கூப்பிட்டிருக்கிறார்கள். வராவிட்டால் தப்பாகி விடும். அதனால், குடும்பத்தோடு எல்லோருமே வந்துவிடுங்கள்” என்று மதியுடைய அன்னை சொல்லித்தான், அவள் வழி உறவினர் எல்லோரும், இந்த மாப்பிள்ளை அழைப்பும் பட்டுக் கட்டுவதுமான முந்தைய நாள் விழாவுக்கே வந்ததே!இப்போது, அதையுமே மட்டம் தட்டுவது போலப் பேசுவதா என்று, மதிவதனிக்குச் சற்றுக் கோபம்தான்! அத்தையின் பேச்சு எப்போதுமே, இப்படித்தான்! தரம் சற்றுக் குறைவுதான்இந்த டேப் ரிக்கார்டரைப் போல!கொஞ்சம் இரண்டாவது நிலையில் உள்ள நாயனம் என்றாலும், ஒத்தும், தவிலும், தாளமுமாக, அந்தக் கம்பீரத் தோற்றமே, திருமணத்தை அழுத்தத்துடன் முன் மொழிவது போல இருக்குமே!அதை விட்டு, இருந்திருந்து, இதில் போய்ப் பெரிதாகச் சிக்கனம் பிடிக்கிறார்களே, இந்த அத்தை! இதில் மட்டுமல்ல! அவர்களால் முடிந்த எல்லாவற்றிலும்!மதிவதனியுடைய தந்தைகூட, அவருடைய தங்கையும், மணப் பெண்ணான மோனி என்கிற மோகனாவுடைய தாயுமான சுந்தரியிடம் சொல்லிப் பார்த்தார்!“போங்கண்ணா! நானே பெரிய இடத்தில் பெண்ணைக் கொடுக்கிறோமே என்று, தங்கமும் வெள்ளியுமாகப் பெரும் செலவில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன்! இந்த மண்டபத்துக்கே எவ்வளவு பணம்! உங்களிடம் பணம் இருந்தால், நல்லதாக ஒரு நாதசுர செட்டை நீங்களே ஏற்பாடு பண்ணுங்கள்! என்னால் ஆனது இவ்வளவுதான்!” என்று முடித்துவிட்டு, “எனக்கு எவ்வளவு வேலை கிடக்கிறது? உதவிக்கு ஒரு நாதி இல்லாமல் நான் பாடாய்ப் பட்டுக் கொண்டிருக்கிறேன்! என்னை நிறுத்தி வைத்துப் பேசுகிறீர்களே!” என்று குறைப்பட்டவாறே, அங்கிருந்து போய் விட்டாள்.உதவிக்கு ஒரு நாதி இல்லாமலா?வேர்த்து வடிய, இங்குமங்கும் ஓடி, மண்டபத்துக்கு முன்னதாக வந்துவிட்ட உறவினர்களை வரவேற்பதும், உணவு பானம் அளித்து உபசரிப்பதும், இடையிடையே சுந்தரியின் அழைப்புகளுக்கு ஓடுவதுமாகப் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்த மனைவியைப் பார்க்கையில், சுதர்சனத்துக்கே பாவமாக இருந்தது!அதே போல, மகள் மதிவதனியும், மண்டபத்துக்கு வந்ததில் இருந்து வேலைதான் செய்து கொண்டிருக்கிறாள்!அவள் மட்டுமல்ல! அவளுடைய தாய்வழி உறவுப் பெண்களும், அவளோடு வந்து, மாப்பிள்ளை அழைப்புக்கான ஆரத்தித் தட்டுகளை விதம் விதமாக அலங்கரித்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள்!
Disponible depuis: 03/04/2025.
Longueur d'impression: 185 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Thukappa Mastara - cover

    Thukappa Mastara

    Chandrakant Kusunur

    • 0
    • 0
    • 0
    Short story by Chandrakant Kusunur
    Voir livre
  • ரங்கோன் ராதா - cover

    ரங்கோன் ராதா

    சி.என்.அண்ணாதுரை

    • 0
    • 0
    • 0
    அண்ணா 1947ல் எழுதிய புதினம் ரங்கோன் ராதா. திராவிட இலக்கியத்தின் இலக்கணம் முழுக்க‌ inclusive என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கிவிடும். 40களில் அதற்கு முந்தைய சில நூறு ஆண்டுகளில் தமிழ்ச் சமுதாயம் எப்படிச் சிதைவுற்று இருந்தது என்பதைக் காண்பிப்பதே அண்ணா தொடங்கி சில தசாங்கங்களில் திராவிட இலக்கியத்தின் முனைப்பாக இருந்தது. திராவிடம் என்றாலே ஆரிய எதிர்ப்பு என்ற அனுமானம் பொய் அல்லது பேருண்மையின் ஒரு சிறு துளியே என்பதே அண்ணா மற்றும் கலைஞர் இலக்கிய ஆக்கங்களில் இருந்து வெளிப்படும் உண்மையாகும். சமகாலத்திய சமுதாயச் சீரழிவுகள், பிறழ்வுகள் ஆகிய போக்குகளை உள்ளவாறு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவையே இவ்விருவர் இலக்கியங்கள். தவிரவும் அரசியல், மாநில‌ உரிமைகள், மொழியுணர்வு, இன உணர்வு, பொதுப் பொருளாதாரம், இலக்கிய மேன்மை போன்றவை பற்றிப் பேசுவதற்கென்றே திராவிட எழுத்துப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. படைப்பிலக்கியத் துறையில் அண்ணா மற்றும் கலைஞரின் பங்களிப்பே பிரதானமாக இருந்தது. சித்தாந்தவியலும் படைப்பிலக்கியமும் கைகோர்த்து அன்றைய திராவிட எழுத்துப் பணியைப் பீடு நடை போடச் செய்தன. 
    ரங்கோன் ராதா என்ற கவர்ச்சிகரமான தலைப்பில் மூட நம்பிக்கை, ஆணாதிக்கம், பேராசை, திருமண உறவின் பிறழ்வுகள், வெள்ளந்தியானவர்களுக்கு சமூகத்தில் இழைக்கப்படும் அநீதி, பக்தி துறவு மந்திரம் மாந்திரிகம் என்ற போலி வேடங்களுக்குப் பின் மறைந்திருக்கும் கபடம், துணையற்ற பெண்கள் சீரழிவு, துணிந்து தலை நிமிரும் பெண்களின் வலிமை, சம காலத்திய இளைய தலைமுறையினரின் லட்சிய வேகமும் தீர்மானமும் என்ற இன்னோரன்ன இழைகளைக் கோர்த்து அண்ணா எழுதிய புதினமே ரங்கோன் ராதா. கலைஞரின் திரைக்கதை வசனத்தில் வெளிவந்த திரைப்படம் அண்ணாவின் முழு எழுத்து வீச்சை வெளிக்கொணரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். திரைப்படவியலுக்கே உரித்தான வரையறைககுள் பரந்த திரைச்சீலை உள்ள புதினத்தை அடக்க முடியாது என்பதற்கு சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், பானுமதி, ராஜசுலோசனா, எம்.என்.ராஜம், என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் குலதெய்வம் ராஜகோபால், பி. எஸ். ஞானம் என்ற பெரும்படையே அந்தப் படத்தில் இருக்கின்றனர். என்றாலும் விரிந்த திரையை வெள்ளித்திரையில் சுருக்கும் போது சில பல நட்டங்கள் தவிர்க்க முடியாது போய்விட்டன. 
    Voir livre
  • Avaru caru matu nage - cover

    Avaru caru matu nage

    Shanthinath Desai

    • 0
    • 0
    • 0
    ಶಾಂತಿನಾಥ ದೇಸಾಯಿ ಅವರು ಪ್ರಮುಖ ಆಧುನಿಕ ಕನ್ನಡ ಲೇಖಕರಾಗಿದ್ದಾರೆ ಮತ್ತು ಅವರ ಕಥೆಗಳು ಮಾನವ ಸಂಬಂಧಗಳ ವಿಷಯಗಳೊಂದಿಗೆ ವ್ಯವಹರಿಸುತ್ತದೆ ಮತ್ತು ಬದಲಾಗುತ್ತಿರುವ ಸಮಾಜದ ಸವಾಲುಗಳನ್ನು ಮತ್ತು ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಮೌಲ್ಯಗಳಿಂದ ಅದರ ದಿಕ್ಚ್ಯುತಿಯನ್ನು ಅನ್ವೇಷಿಸುತ್ತದೆ.
    Voir livre
  • Kaanal Neero Kanmaniye - கானல் நீரோ கண்மணியே - cover

    Kaanal Neero Kanmaniye - கானல்...

    Uma Nathan

    • 0
    • 0
    • 0
    நேசமான மனைவி, சொந்த தொழில், அன்பான தாய், நலமாய் வாழும் தங்கை, தோள் கொடுக்கும் தோழமை. அதோடு தன் காதல் வாழ்வின் சாட்சியாய் தங்களுக்கு வரப்போகும் குழந்தை என சந்தோஷ வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த வெற்றியை அடித்து கீழே தள்ளியது, பிரசவத்தில் மரணித்த தன் மனைவி தியாவின் முடிவு. அதற்கு மேல் மற்றொரு அதிர்ச்சி தியாவின் கடைசி ஆசையாய் அவள் தன் தமக்கையை மறுமணம் செய்யக் கூறியது. யாரை இனி தன் வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று எண்ணியிருந்தானோ அவளையே எப்படி மணந்து கொள்வான்? அதன் பின் அவன் வாழ்வில் சந்தோஷம் இருக்குமா? 
     Loving Wife, Succesful Business, Affectionate Mother, Happily settled sister, Understanding Friends. What more a person need? Vetri is blessed with a baby as a proof of his love with his wife. But all his happiness in cloud nine is doomed, when his wife died in child birth. More than that, his wofe’s last wish for him to marry her elder sister Natchathra. The same person, whom he never wanted to meet in life ever. What will happen in Vetri’s life? Will he see happiness in life again?
    Voir livre
  • Jeevan - cover

    Jeevan

    Ki Rajanarayanan

    • 0
    • 0
    • 0
    கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல். A collection of 14 selected short stories by well-knows writer Ki.Rajanarayanan. His charachters are as unique as his writing style. Writer Sundara Ramasamy describes the stories of Ki.Ra as a fruit garden of Tamil literary world. His aesthetics is unparalleled and he is considered a pioneer of literature from Karisal region in Tamil.
    Voir livre
  • Avvaiyar Moothurai - Tamil Audio Book - மூதுரை - ஔவையார் - பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Moothurai - Tamil Audio...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    மூதுரை – ஒளவையார்: தமிழ் இலக்கியத்தின் பொற்கால படைப்புகளில் ஒன்றான மூதுரை,  ஒளவையார் அவர்களால் இயற்றப்பட்டது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்வியல் நெறிகளை எளிமையான மற்றும் இனிமையான சொற்களில் போதிக்கும் இந்த நூல், ஒழுக்கம், நற்பண்புகள், கல்வி, மரியாதை போன்றவற்றை கற்றுத்தரும் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது. பள்ளிக் கல்வியில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மூதுரை, தமிழர் பாரம்பரியத்தை உணர்த்தும் சிறப்புமிக்க நூலாகும். மூதுரை தமிழ் கலாசாரத்தையும், நல்லொழுக்கப் பாதையையும் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் அரிய பொக்கிஷமாகும்.
    Voir livre