Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
தான் - தன் சுகம் - cover

தான் - தன் சுகம்

தேவிபாலா

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

அஞ்சலி பி.காம் முடித்ததும் தெரிந்த கம்பெனியில் சொல்லி சித்தப்பா வெங்கட்தான் வேலை வாங்கித் தந்தார்!எடுத்த எடுப்பில் பதினைந்தாயிரம் சம்பளம்! பத்துமணி முதல் ஆறு மணி வரை!அஞ்சலி குஷியாகி விட்டாள்.இங்கே அம்மா மல்லிகா வாயைப் பிளந்து விட்டாள்!“இதப்பாருடி! சாரதி சம்பளத்தை எடுத்து குடும்பச் செலவை நடத்திட்டு, உன் சம்பளத்துல சீட்டு கட்டி, நகை - துணி எல்லாம் வாங்கிடலாம்! புரியுதா?”அஞ்சலி பதிலே சொல்லவில்லை!முதல் மாச சம்பளம் வந்ததுமே பத்தாயிரம் ரூபாய்க்கு அவளுக்கு ட்ரஸ், மேக்கப் சாதனங்கள் - செருப்புகள் என வாங்கிக் குவித்தாள்.இரண்டு பெரிய பைகளோடு வந்தாள்.“என்னடீ இது அக்ரமம்? ஏண்டீ இப்பிடி செலவழிச்சே?”“படிக்கற காலம் வரைக்கும் யூனிஃபார்ம் தவிர, ரெண்டே ரெண்டு செட் ட்ரஸ்! அதுவும் மகா மட்டம். விதம்விதமா மத்தவங்க உடுத்தறதைப் பார்த்து நான் பட்ட அவமானம் எனக்குத்தான் தெரியும். உன் புருஷன் என்ன கிழிச்சார்?”“ஏண்டீ இப்பிடி பேசற? அவர் உனக்கு அப்பா!”“ஆமாம்! ஒரு பொம்பளையை கர்ப்பமாக்கிட்டா, அந்த ஆளுக்குப் பேரு அப்பாவா? அதுக்கு தனி சாமர்த்தியம் வேணுமா?”“அறைஞ்சேன்னா பாரு! ஒரு அம்மாகிட்ட பேசற பேச்சாடீ இது?”“நீ ஒரு நல்ல அம்மாவா எப்ப நடந்திருக்கே? வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டிருக்கியா? பொங்கி வச்சிடுவே, கடமைக்கு! அதை நாங்களும் தின்னு தொலைக்கணும்!”“ஏண்டீ இப்பிடி பேசற? நான் என்னடீ செய்வேன்? உங்கப்பா தர்றதை வச்சுத்தானே நான் குடும்பம் நடத்த முடியும்?”“நீ கேட்டு வாங்கணும்! ரெண்டு புள்ளைகளை ஆளாக்கணும்னு சொல்லி, அந்த ஆள் சட்டையை புடிச்சிருக்கணும். போராடி குடித்தனம் செஞ்சிருக்கணும். உனக்கு ரெண்டு வேளை சோறு கிடைச்சா போதும்னு கம்முனு இருந்துட்டே!”“இது நியாயமாடீ?”“இதப்பாரு! நீயோ, உன் புருஷனோ எங்களை ஆளாக்கலை! அப்புறம் கேள்வி கேக்க மட்டும் யோக்யதை இருக்கா! கம்முனு இரு!”“சர்டீ! பத்தாயிரம் ரூபாய்க்கு உனக்கு வாங்கிட்டே! மீதி அஞ்சாயிரம் எங்கே?”“எனக்கு கைச் செலவுக்கு வேண்டாமா! சாரதி சம்பாதிக்கறானில்லை? கேட்டு வாங்கு!”“உங்கப்பனும் ஒழுங்கா குடும்பம் நடத்தலை! நீங்க ரெண்டு பேரும் ஆளானதும் ஆனந்தப்பட்டேன். இப்ப உங்ககிட்ட பிச்சை எடுக்க வேண்டியிருக்கு. என் தலையெழுத்து!”சாரதி உள்ளே வந்தான்!“என்ன சொல்றானு கேட்டியாடா?”“இதப்பாரம்மா! இந்த வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிப் போட்டு, வீட்டு நிர்வாகத்துக்கும் நான் பணம் குடுத்துர்றேன்!”“எங்கே தர்ற! மளிகை, பால், காய் எல்லாத்துக்கும் கணக்குப் போட்டுத் தர்றே! என் கைல சல்லிக்காசு இல்லையே?எதுக்கு? குடும்பம் நடக்குதா இல்லையா?”“உங்கப்பா தர்றது கொஞ்சமா இருந்தாலும் அதை என் கைல தந்துட்டுப் போவார்!”“அவர் டூர்ல இருக்கார்! வேற வழியில்லை! நான் உள்ளூர்லதானே இருக்கேன்! இதப்பாரு! தேவைகள் நிறைவேறுதா இல்லையா? உன் கைக்கு எதுக்குக் காசு? தாறுமாறா செலவழிக்க நான் விடமாட்டேன்!”சாரதியின் ஸ்டைல் இது!மளிகை சாமான்கள், பால், காய்கறிகள் போன்ற பொருட்களுக்கு கணக்குக் கேட்டு எண்ணி எண்ணித்தான் தருவான்!பத்துரூபாய் குறையுமே ஒழிய கூடாது!மல்லிகா நொந்து போனாள்!சாரதிக்கு இந்த ரெண்டு வருடங்களில் சம்பளம் கூடி விட்டது! அடிக்கடி வெளிநாட்டுக்குப் போவது.. உள்ளூர் ப்ரொஜக்ட் என நன்றாக உழைத்ததால, சம்பளம் அறுபதாயிரத்தைத் கடந்து விட்டது! ஆனால் அதை வீட்டில் சொல்லவில்லை!“ஏண்டா! உன் கூடப்படிச்சவங்க சம்பளம் நிறைய உயரும் போது உனக்கு மட்டும் அதே சம்பளமா?”மல்லிகா விடவில்லை! கிளறினாள்.“என் தகுதிக்கு இதுதான் கிடைக்கும்!”வாயடைத்து விடுவான்!ஆனால் வீட்டுக்குத் தரும் பணம் போக, சேமிக்கத் தொடங்கி விட்டான்.மூன்று வருடங்கள் ஓடி விட, சேமிப்பில் பன்னண்டு லட்சம் சேர்ந்து விட்டது!அஞ்சலிக்கு வரன் பார்க்க வேண்டும் என்று மல்லிகா ஆரம்பித்து விட்டாள்
Verfügbar seit: 16.01.2024.
Drucklänge: 77 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Zum Buch
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Zum Buch
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Zum Buch
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Zum Buch
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Zum Buch