Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
பனித்திரை - cover

பனித்திரை

தேவிபாலா

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

சந்திரா சீக்கிரமே எழுந்து குளித்து தயாராகிவிட்டாள்.“சீக்கிரம் போகணுமாடி?”“ஆமாம்மா! நிறைய வேலை இருக்கு. போற வழியில கோவில்ல சாமி கும்பிட்டுட்டு, அப்படியே ‘ஆபீசு’க்குப் போயிடுவேன்.”சந்திராவுக்கு பக்தி அதிகம்.அந்தக் குடும்பத்தில் எல்லாருக்குமே இறை நம்பிக்கை உண்டு. காண்டீபன், சாவித்திரி இரண்டு பேருக்கும் வழிபாட்டு ஆர்வம் அதிகம். அதனால்தான் பெண்களுக்கும்...ரத்தத்தில் ஊறிய சங்கதி.“சாப்பிட்டு போடி.”“இல்லேம்மா... நேரமில்ல. ‘ஆபீஸ் கேன்டீன்’ல பார்த்துக்கிறேன்.”சந்திரா ‘டூ வீலரில்’ தான் போவாள்.“சந்திரா! நானும் புறப்பட்டாச்சு. ‘கம்பெனி கார்’ வரும். உன்னை ‘டிராப் பண்ணிடட்டா?” - அப்பா கேட்க,“இல்லப்பா! உங்க கம்பெனி வண்டியெல்லாம் எனக்கு சரிப்படாது. நான் என்னை மட்டுமே நம்புறவ. புரியதா...?”“ஆம்பளை மாதிரி பேசுவா.”“அம்மா! உனக்கு பையன் இல்லாத குறையைத் தீர்க்க வந்தவ நான்தான்.”“சந்திரா... எங்க ‘கம்பெனி’யில ஒரு நல்ல வேலை வருது. நீ ‘அப்ளை’ பண்ணுறியா? நல்ல சம்பளம்.“இல்லேப்பா.”“ஏன்ம்மா! முதலாளியை வந்து பாரேன்.”“உங்க முதலாளியை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. ஒரே இடத்துல அப்பா- மகள் வேலை பார்த்தா, பல பிரச்சினைகள் வரும்ப்பா. வேணாம்.”“என்னடீ பிரச்சினை... உனக்கு பாதுகாப்புதானே?”“ஏன்... இப்ப எனக்கு பாதுகாப்பு இல்லையா என்ன? அது வேண்டாம்மா.”பானு குறுக்கிட்டாள்.“அப்பா! இந்த ஏப்ரல்ல என் ‘டிகிரி படிப்பு முடிஞ்சிடும். எனக்கு உங்க கம்பெனியில வேலை வாங்கிக் குடுங்க.”அதற்குள் சந்திரா புறப்பட்டாள்.இருபது நிமிடங்களில் கோவிலை அடைந்துவிட்டாள்.பழக்கப்பட்ட கோவில்தான்.அர்ச்சனைக் கூடையைக் கொண்டு வந்து சந்திரா தர,பேர், நட்சத்திரம் கேட்டு குருக்கள் ஆரம்பிக்க,வாசலில் கார் வந்து நிற்க,ஒரு பெரிய மனிதன் தன் பரிவாரங்களுடன் இறங்க,குருக்கள் இவளை விட்டுவிட்டு அங்கே ஓடினார்.கூழைக் கும்பிடு போட்டு, அவர்கள் கொண்டு வந்த அர்ச்சனைப் பொருட்கள்- மாலைகளை வாங்கிக்கொண்டு, மந்திரம் சொன்னபடி உள்ளே போக... அந்தப் பெரிய மனிதரும் ‘ஸ்டைலாக நடந்து வர,அவருடன் ஓர் இளைஞன் வர“குருக்களே... நிறுத்துங்க.” சந்திரா கூச்சலிட,‘படக்’கென அனைவரும் திரும்ப,“முதல்ல வந்தவ நான். என் அர்ச்சனையைத் தொடங்கிட்டு, அதைப் பாதியில் நிறுத்திட்டு ஓடினா என்ன அர்த்தம்?”குருக்கள் அருகில் வந்தார்.“மெதுவா பேசும்மா! அவர் பெரிய மனிதர். ‘பிசி’யா இருப்பார். அவரை முதல்ல அனுப்பிட்டு உங்கிட்ட வர்றேன்.”“இது தப்பு! ஆண்டவன் சந்நதியில் பெரியவங்க- சின்னவங்கன்னு பாகுபாடெல்லாம் கிடையாது. இங்கே எல்லாருமே ‘பிசி’தான். நான் மட்டும் சும்மாவா இருக்கேன்?”கூட்டம் கூடிவிட்டது
Verfügbar seit: 16.01.2024.
Drucklänge: 79 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Zum Buch
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Zum Buch
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Zum Buch
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Zum Buch