Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
பொட்டு வச்ச வட்ட நிலா - cover

பொட்டு வச்ச வட்ட நிலா

தேவிபாலா

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

சந்திரன் இன்னமும் மயக்க நிலையில்தான் இருந்தான். உயிர் வாயுக்கருவி, இன்னும் பிற மருத்துவக் கருவிகள் உடலின் சகல பாகங்களையும் சொந்தம் கொண்டாட, தலைக்கு மேல் இதயத் துடிப்பை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கும் கணிப்பொறி.ஆண்டாள் அவன் கால் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.நேற்று இங்கு வந்தது முதல் அவனைவிட்டு அவள் அசையக்கூட இல்லை.அவனுக்குத்தான் இன்னமும் விழிப்பே வரவில்லை.“உங்கள் மனைவி வந்திருக்கிறேன். உங்கள் மரணத் தேதி தெரிந்தும் இன்னமும் உயிருடன் உங்கள் எதிரில் உட்கார்ந்திருக்கிறேன்! என்னைப் பார்க்க மாட்டீர்களா ஒரு முறை?”ஊகூம்! விழிக்கவில்லை சந்திரன்.விடிந்து வெகுநேரமாகிவிட்டது. முதல் நாளே சந்திரனின் அப்பா தந்தி கொடுத்தபடியால் அவனுடைய அக்கா, தங்கை இருவரும் அலறியடித்துக் கொண்டு அதிகாலையிலேயே வந்துவிட்டார்கள், தங்கள் கணவன்மாருடன்.பெரிய மாப்பிள்ளை மாமனாரை நெருங்கினான்.“மாமா! நான் கேக்கறேன்னு தப்பா நினைக்கக்கூடாது. சொத்து விவகாரங்கள் முடிவு பண்ணியாச்சா?”“என்னங்க நீங்க? எந்த நேரத்துல எதைப் பேசறதுன்னு இல்லையா? தம்பியைவிட பெரிய சொத்து எங்க குடும்பத்துல என்ன உண்டு?”“நான் அதுக்குச் சொல்லலை. எப்படியும் உன் தம்பியின் உயிர் நிலைக்கப் போறதில்லை. அப்புறம் மற்ற விஷயங்களைப் பற்றி இப்பவே முடிவு செய்யறது நல்லது இல்லையா?“அப்பாவுக்கு அவன் ஒரே ஆண் பிள்ளை. எல்லா சொத்துக்களும் அண்ணனைத்தானே சேரணும்!” தங்கையின் குரலில் கொஞ்சம் ஆதங்கம் ஒளிந்திருந்தது.அவள் கணவன் முன்னால் வந்தான்.“அதெப்படி? லாரி தொழிலை நடத்திட்டு இருந்தது உங்கள் அப்பா தானே! அவரால முடியாம போனபிறகு உங்கண்ணன் நடத்தறார். அப்பா சம்பாதிச்ச சொத்துல பொண்ணுகளுக்கும் உரிமை உண்டு.”“அட, இருங்க சகலை! ஏன் மாமா ...இப்போது சொத்துக்கள் யார் பேர்ல இருக்கு?”“நாலு லாரி ஓடிட்டு இருக்கு. ரெண்டு லாரியை சந்திரன் பேருக்கு மாத்தி போன ஆண்டுதான் எழுதி வைச்சேன். மீதி இரண்டு என் பேர்ல இருக்கு”“உங்க வீடு?”“அதுவும் சந்திரன் பேர்லதான்!”“ஏன் அவசரப்பட்டு எழுதினீங்க?”“என்ன மாப்பிள்ளே நீங்க? சந்திரன் என்னோட பிள்ளைனே உங்களுக்கு மறந்து போச்சா?” அவர் குரலில் கோபம் எட்டிப் பார்த்து விட்டது.“மறக்கலை... இப்ப நிலைமை தலைகீழாக மாறிப் போச்சு இல்லையா?”“புரியலை!”“திடீர்னு புற்றுநோய் வந்து உங்கள் பிள்ளைக்கு மரணத் தேதி குறிச்சாச்சு. அவர் மூச்சு நிக்கிற நேரம் வந்தாச்சு. ரெண்டு லாரியோட மதிப்பு கிட்டத்தட்ட மூணு இலட்ச ரூபாய்க்கு மேல. இந்த வீட்டோட மதிப்பு அஞ்சு இலட்ச ரூபாய். வங்கில என்ன இருக்கு?”“ரெண்டு இலட்சத்துக்கு மேல!”“யார் பேர்ல?”“சந்திரன் பேர்லதான்!”ஏறத்தாழ பத்து இலட்ச சொத்து மதிப்பு, அப்படியே அந்த ஆண்டாள் தட்டிட்டுப் போகப் போறா! அவசியம்தானா இது?”மாமியார் குறுக்கிட்டார்.“அதுதானே நியாயம் மாப்பிள்ளை. ஆண்டாள் அவன் மனைவி. அவனோட எல்லாமே அவளைத்தானே சேரணும். சட்டம் கூட அதைத் தானே பேசும்?”“சட்டம் ஆயிரம் பேசும். மூணு வருடத்துல முத்து மழை. அந்தப் பொண்ணுக்கு மச்சம். முப்பது வருடமா சந்திரனைப் பராமரிச்ச பெத்தவங்களுக்கோ, அவனோட வளர்ந்த சகோதரிக்களுக்கோ ஒண்ணுமில்லையா?”“நீங்க என்ன சொல்றீங்க?”“இதோ பாருங்க மாமா! நமக்கு சந்திரன் முக்கியம். மறுக்கலை. அவனே இல்லைனு ஆனபின்னால யாரந்த ஆண்டாள்?”“என்னங்க!”“நீ சும்மார்றி! மாமா... பிள்ளையை வைச்சுத்தான் மருமகள் உறவு. உங்க வம்சம் விளங்க ஒரு பிள்ளையைக்கூட ஆண்டாள் இதுவரைக்கும் தரலை... உண்மை தானே?”“ம்...!”“அப்புறம் எல்லாத்தையும் அவள் தட்டிட்டுப் போறதுல என்ன நியாயம்?”“மாப்பிள்ளை?”“சொத்துக்கள் இத்தனையித்தனை... இன்னார் பேர்ல-இந்த விவரங்களெல்லாம் ஆண்டாளுக்குத் தெரியுமா?”“எதுவும் தெரியாது. வீட்டு நிர்வாகத்துல எப்பவுமே அவ தலையிட்டதில்லை. சந்திரன் எங்களைக் கேட்டுத்தான் செய்வான்.“நல்லது! இதுதான் உங்களுக்கு சாதகமான ஒண்ணு! உபயோகப்படுத்துங்க.”
Verfügbar seit: 16.01.2024.
Drucklänge: 88 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Zum Buch
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Zum Buch
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Zum Buch
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Zum Buch