Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
பாப விமோசனம் - cover

பாப விமோசனம்

தேவிபாலா

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

பேருந்தை விட்டு இறங்கினாள் வாணி! சாலையைக் கடந்தாள்.சற்றே அமைதியான சூழலில் இருக்கும் ஊட்டியிலிருந்து ஆரவாரமாக மாறுபட்டிருந்தது சென்னை!அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் முன் நின்றாள்இவள் வர விரும்பிய ஆபீஸ் ஐந்தாவது மாடியில்!லிஃப்ட்டுக்குள் நுழைந்து, ஐந்தாவது மாடியில் வெளிப்பட்டடள்.அது இசைத்துட்டு விற்கும் நிறுவனம் சமீப காலத்தில் காஸெட், ஸீடீ என தன் தொழிலுக்கு நாகரீக மெருகு சேர்த்துக் கொண்டுவிட்டது! உலக அரங்கில் நிற்குமளவுக்கு சர்வதேச சந்தையில் இடம் பிடித்த நிறுவனம்.அந்தரங்கச் செயலாளர் பதவி…! சம்பளம் ஆரம்பத்தில் ஏழாயிரம்! ஒரு வருட பயிற்சி காலம். வேலை ஊர்ஜிதமானால் பத்து ரூபாய்க்குமேல சம்பளம்.! மற்ற வசதிகளும் உண்டு.நேர்முகத்துக்கு அழைப்பு வரும் என்று வாணி நினைக்கவே இல்லை!விஸ்தாரமான, ஏஸி செய்யப்பட்ட ஹாலில், ஏராளமான அலங்காரத்துடன் ஏழெட்டு பெண்கள்!இவளை ஒரு மாதிரி ‘நல்ல தங்காளைப்’ பார்ப்பதைப்போல பார்த்தார்கள்.புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்தியிருந்தாள் வாணி! பத்தரை மணிக்குள் அந்த ஹாலில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டம்!“எத்தனை வேகன்ஸி?” ஒருத்தி ப்யூனைக் கேட்டாள்.“ஒரு இடம்தான்மா!”அந்தப் பெண் நம்பிக்கை இழந்தாள்.பதினொரு மணிக்கு எம்.டி. வந்து விட்டதாக ஒரு பரபரப்பு தென்பட்டது!ஒவ்வொருத்தியாக அழைக்கப்பட்டனர்.ஐந்தாவதாக,“வாணி!”வாணி எழுந்தாள். மெல்ல நடந்தாள்.“மணிமேகலை போறா பாரு!” பின்னாலிருந்து குரல் துரத்தியது!கதவைத் தள்ளித் திறந்தாள்.“யெஸ் கம் இன்!”நிமிர்ந்தாள். தூக்கி வாரிப் போட்டது!‘ரயிலில் பார்த்த அவன்!’‘பால் கொண்டு வந்த அவன்!’‘பரிவோடு பேச நினைத்து, முகம் வாடி, சொல்லாமல் போன அவன்!’அவனும் இவளை எதிர்பார்க்கவில்லை என்பதை அதிர்ந்த முகம் சொன்னது!“ஒக்காருங்க!”லேசான நடுக்கத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள் வாணி!‘கண்டிப்பாக எனக்கு இந்த வேலை கிடைக்காது!’‘இவனை நான் அலட்சியப் படுத்தியிருக்கிறேன். மறக்க மாட்டான் நிச்சயமாக’குனிந்த தலையோடு அமர்ந்திருக்கும் அவளையே ஓரிரு நொடி பார்த்தான்.சட்டென எழுந்தான்
Disponible depuis: 03/02/2024.
Longueur d'impression: 68 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Second Hand - cover

    Second Hand

    Vaikom Mohammed Bashir

    • 0
    • 0
    • 0
    முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். 'ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்' (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.
    Voir livre
  • Kadhai Kadhayam Karanamam - Vol 1 - கதை கதையாம் காரணமாம் - Stories for Children - cover

    Kadhai Kadhayam Karanamam - Vol...

    Pavala Sankari

    • 0
    • 0
    • 0
    Vol 1. Childrens stories including moral value. குழந்தைகளுக்கான சிறுகதைத் தொகுப்பு 
    Voir livre
  • திருப்பாடற்றிரட்டு - cover

    திருப்பாடற்றிரட்டு

    Kunankuti Masthan

    • 0
    • 0
    • 0
    குணங்குடி மஸ்தான் சாகிபுவின் காலம் கிபி 1788 – 1835 க்கு இடைப்பட்டது. அரபியிலும் தமிழிலும் புலமை பெற்றவர். இஸ்லாமிய மார்க்கப்பிரிவுகளில் ஒன்றான காதிரிய்யா தரீகாவின் செயக்ப்துல் காதிரிலெப்பை ஆலிமிடம் மார்க்க கல்வி பெற்றார். திரிசிரபுரத்து ஆலிம் மௌலவி ஷாம் சாகிபுவிடம் தீட்சைபெற்றுக் கொண்டு தொண்டியில் நான்கு மாதங்கள் கல்வத்து இருந்தார். தொண்டி மரைக்காயர் தோப்பில் யோக நிஷ்டையிலும் ஆழ்ந்தார். சிக்கந்தர் மலைக்குகையில் தலை கீழ் கால் மேலான சிரசாசனம் இருந்தார். பல ஊர்களுக்கு நாடோடியாக அலைந்தார். இறுதிக்கால 12 ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தார். தொண்டியூர்க்காரரான இவர் வாழ்ந்த இடம்தான் தொண்டியார் பேட்டை. இதுவே பிற்காலத்தில் தண்டையார் பேட்டையானது. இராயபுரத்தில் இவரது அடக்கவிடம் உள்ளது. தமிழகத்தில் பிறந்து வாழ்ந்த காதிரிய்யா தரீகா ஞானப்பாட்டையாளர் முஹியத்தீன் அப்துல்காதிர் ஜீலானியை தனது ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார்.குணங்குடியார் இசுலாமிய சூபி ஞானியாக அறியப்படுகிறார். குணங்குடி மஸ்தான் சாகிபு எழுதிய தற்போது கிடைக்கும் எழுத்துக்கள் 24 கீர்த்தனைகள் உட்பட 1057 பாடல்களாகும். 
    இவ்வொலி நூலில் கீர்த்தனைகள் தவிர அவருடைய பிற பாடல்கள் விருத்தவோசையில் இடம் பெறுகின்றன. யாப்போசை மற்றும் விருத்தவோசை மீட்டெடுப்பில் முனைவர் ரமணியின் படைப்பில் இன்னுமொரு நேர்த்தியான படைப்பு இந்த ஒலிநூல். 
    குரு வணக்கம் பகுதி முஹியத்தீன் அப்துல்காதிர் ஜீலானியை முன்னிறுத்தி பத்து பாடல் பகுதிகளைக் கொண்டது. முகியத்தீன் சதகம் 100 பாடல்களைக் கொண்டது.  முன்னிலை குருவான முகியத்தீன் ஆண்டகையிடம் குறையிரந்து உரையாடும் பாடல்களாக இவை அமைந்துள்ளன. அகத்தீசன் சதகமும் 100 பாடல்களாலானது.  மகமூது நபியாண்டவரை சுகானுபவமுறதுதித்தல், தவமே பெறவேண்டுமெனல், குறையிரங்கி உரைத்தல் வானருள் பெற்றோர் மனநிலை உரைத்தல், ஆனந்தகளிப்பு பாடல்பகுதிகளும் உண்டு. இதைதவிர இரண்டிரண்டு அடிகளாலான கண்ணிவகைப்பாடல்களும், பல்வித மனநிலைகளையும், உணர்வுச்சூழல்களையும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன. நிராமயக்கண்ணி, பராபரக்கண்ணி, றகுமான்கண்ணி, எக்காலக்கண்ணி, கண்மணிமாலைக் கண்ணி, மனோன்மணிகண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி எனப் பல வகையினங்களாக இக்கண்ணிகள் அமைந்துள்ளன.
    Voir livre
  • Maaya Peru Nadhi - மாயப் பெரு நதி - cover

    Maaya Peru Nadhi - மாயப் பெரு நதி

    Haran Prasanna

    • 0
    • 0
    • 0
    Maaya peru nadhi - A proud Aurality tamil audio book production ebook by Thadam Publications.  
    Download FREE Aurality app now on play store and or iphone ios store இரண்டு காலகட்டங்களுக்குள் விரியும் நாவல். ஒன்று இன்றைய காலகட்டம். இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கும் முன்பான ஒரு காலகட்டம். பழங்காலத்தில் மாத்வ பிரமாணர்களின் அன்றைய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் நாவல், இன்றைய காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் விரிகிறது. இரண்டையும் பிணைக்கும் ஒரு சரடென எப்போதும் கூடவே ஓடிவரும் ஒரு மாயப் பெரு நதி. திருநெல்வேலியில் பிறந்து இளமையைக் கழித்த எந்த ஒருவனுக்கும் தாமிரபரணியே மாயப் பெரு நதி. எங்கே எதன் நிமித்தமாக எப்படி வாழ்ந்தாலும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கனவு நதி. ஹரன் பிரசன்னா 2001ம் ஆண்டில் இருந்து கவிதைகளும் கதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார். நிழல்கள் (கவிதைத் தொகுப்பு), சாதேவி (சிறுகதைத் தொகுப்பு), புகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு), மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்) ஆகியவை இதுவரை வெளியாகியுள்ளன. நான்கு வருடங்களாக வெளி வந்துகொண்டிருக்கும் ‘வலம்’ என்ற தமிழ்ப் பத்திரிகையின் எடிட்டர்களுள் ஒருவராக இருக்கிறார். ஹரன் பிரசன்னாவின் முதல் நாவல் இது. அவரது தீவிரமான மொழி இந்நாவலுக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எப்போதும் கனவுலகத்துக்குள்ளே சுழன்றபடி இருக்கும் இந்நாவல் ஒரு கனவைப் போலவே நமக்குள் நிகழ்கிறது. எழுத்தாளர் ஹரன் பிரசன்னா எழுதி தடம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் Audiobook by Aurality.
    Voir livre
  • கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் | பாகம் 3 | Kalki Krishnamurthi in Ponniyin Selvan | Pagam 3 | Tamil Audio Book - cover

    கல்கி கிருஷ்ணமூர்த்தியின்...

    Kalki Krishnamurthi

    • 0
    • 0
    • 0
    பொன்னியின் செல்வன் என்பது கல்கி என்று அழைக்கப்படும் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்ட சிறந்த காவிய கதை. சோழர் காலத்தில் அருள்மொழி வர்மன், குந்தவை, வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், நந்தினி ஆகியோரின் வாழ்க்கை, அரசியல், துரோகம், காதல், போராட்டங்கள் என பல ரகசியங்களை வெளிப்படுத்தும் ஒரு பிரமாண்டக் கதை இது. இது மொத்தம் 5 பாகங்கள் கொண்டது. இது மூன்றாம் பாகம்.
    Voir livre
  • Chorara kathe - cover

    Chorara kathe

    Krishnamurthy Hunoor

    • 0
    • 0
    • 0
    Short story by Krishnamurthy Hunoor
    Voir livre