Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
பாப விமோசனம் - cover

பாப விமோசனம்

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

பேருந்தை விட்டு இறங்கினாள் வாணி! சாலையைக் கடந்தாள்.சற்றே அமைதியான சூழலில் இருக்கும் ஊட்டியிலிருந்து ஆரவாரமாக மாறுபட்டிருந்தது சென்னை!அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் முன் நின்றாள்இவள் வர விரும்பிய ஆபீஸ் ஐந்தாவது மாடியில்!லிஃப்ட்டுக்குள் நுழைந்து, ஐந்தாவது மாடியில் வெளிப்பட்டடள்.அது இசைத்துட்டு விற்கும் நிறுவனம் சமீப காலத்தில் காஸெட், ஸீடீ என தன் தொழிலுக்கு நாகரீக மெருகு சேர்த்துக் கொண்டுவிட்டது! உலக அரங்கில் நிற்குமளவுக்கு சர்வதேச சந்தையில் இடம் பிடித்த நிறுவனம்.அந்தரங்கச் செயலாளர் பதவி…! சம்பளம் ஆரம்பத்தில் ஏழாயிரம்! ஒரு வருட பயிற்சி காலம். வேலை ஊர்ஜிதமானால் பத்து ரூபாய்க்குமேல சம்பளம்.! மற்ற வசதிகளும் உண்டு.நேர்முகத்துக்கு அழைப்பு வரும் என்று வாணி நினைக்கவே இல்லை!விஸ்தாரமான, ஏஸி செய்யப்பட்ட ஹாலில், ஏராளமான அலங்காரத்துடன் ஏழெட்டு பெண்கள்!இவளை ஒரு மாதிரி ‘நல்ல தங்காளைப்’ பார்ப்பதைப்போல பார்த்தார்கள்.புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்தியிருந்தாள் வாணி! பத்தரை மணிக்குள் அந்த ஹாலில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டம்!“எத்தனை வேகன்ஸி?” ஒருத்தி ப்யூனைக் கேட்டாள்.“ஒரு இடம்தான்மா!”அந்தப் பெண் நம்பிக்கை இழந்தாள்.பதினொரு மணிக்கு எம்.டி. வந்து விட்டதாக ஒரு பரபரப்பு தென்பட்டது!ஒவ்வொருத்தியாக அழைக்கப்பட்டனர்.ஐந்தாவதாக,“வாணி!”வாணி எழுந்தாள். மெல்ல நடந்தாள்.“மணிமேகலை போறா பாரு!” பின்னாலிருந்து குரல் துரத்தியது!கதவைத் தள்ளித் திறந்தாள்.“யெஸ் கம் இன்!”நிமிர்ந்தாள். தூக்கி வாரிப் போட்டது!‘ரயிலில் பார்த்த அவன்!’‘பால் கொண்டு வந்த அவன்!’‘பரிவோடு பேச நினைத்து, முகம் வாடி, சொல்லாமல் போன அவன்!’அவனும் இவளை எதிர்பார்க்கவில்லை என்பதை அதிர்ந்த முகம் சொன்னது!“ஒக்காருங்க!”லேசான நடுக்கத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள் வாணி!‘கண்டிப்பாக எனக்கு இந்த வேலை கிடைக்காது!’‘இவனை நான் அலட்சியப் படுத்தியிருக்கிறேன். மறக்க மாட்டான் நிச்சயமாக’குனிந்த தலையோடு அமர்ந்திருக்கும் அவளையே ஓரிரு நொடி பார்த்தான்.சட்டென எழுந்தான்
Available since: 02/03/2024.
Print length: 68 pages.

Other books that might interest you

  • Ms - cover

    Ms

    Maalan

    • 0
    • 0
    • 0
    காதல், கல்யாணம், வியாபாரம், வேதாந்தம் என்று வாழ்க்கையின் சவால்களை தன துணிவால் வென்றெடுக்க  போராடும் ஒரு பெண்ணின் கதை. இது ஒரு தனி மனுஷியின் கதை அல்ல. ஒரு தலைமுறையின் கதை.
    
    This is the story of a woman who struggles to win the many challenges of Life - Love, Marriage, Business, Principles. This is the story of a generation of women not just one.
    Show book
  • தலைவன் - cover

    தலைவன்

    வெள்ளியங்காட்டான்

    • 0
    • 0
    • 0
    வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.  "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. 
    கையெழுத்துப் பிரதியிலேயே தங்கிப் போன வெள்ளியங்காட்டானின் வெண்பா இலக்கியம் தலைவன். பானைச் சோறு. பருக்கை…. 
    மட்டுமித மற்ற மலமகிழ்ச்சி மானமொடு 
    மட்டுமித மற்ற மனமறுக்கம் – மட்டுமித 
    மற்ற மனத்தளர்வு மன்னுமெனின் மட்டுமித 
    மற்று மடியும் மதம். 
    பேராசிரியர் ரமணியின் வாசிப்பில் முத்தான ஓர் ஒலி நூல்.
    Show book
  • Aalaravamatra Veedu - cover

    Aalaravamatra Veedu

    Vaikom Mohammed Bashir

    • 0
    • 0
    • 0
    முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். 'ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்' (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • Ambaraathooni - cover

    Ambaraathooni

    Kabilan Vairamuthu

    • 0
    • 0
    • 0
    AmbaraaThooni is not just a collection of fifteen stories. These are fifteen distinct emotions, each one finding its own rhythm and voice. Some rooted in the pages of history, others quietly unfolding in our present and a few gently nudging us toward the future. 
    Each story feels like an arrow that knows exactly where to land, stirring something deep, leaving behind a quiet ache or a sudden smile. Now you know why the name! 
    The stories named after characters aren't just characters. They are companions. They stay with you, walk beside you, and sometimes even look you in the eye and ask questions you didn’t know you were ready to answer. 
    Get ready to step into the world of Kabilan Vairamuthu’s AmbaraaThooni. Listen with all your heart. 
    அம்பறாத்தூணி பதினைந்து சிறுகதைகள் கொண்ட புத்தகம் என்று கூறுவதை விட அது பதினைந்து தனித்துவமான உணர்ச்சிகளின் தொகுப்பு என்று சொல்வதே சரி. ஒவ்வொரு கதையும் தனக்கேயுரிய ஒரு குரலில் நம்முடன் பேசுகிறது. சில, வரலாற்றின் மண்ணில் ஆழப் பதிந்தவை; சில, நம்முடைய இன்றைய நொடிகளில் மெல்லப் பூக்கின்றவை; சில, எதிர்காலத்தின் கதவுகளை மெல்லத் தட்டுபவை. 
    ஒவ்வொரு கதையும் ஒரு கூரிய அம்பு, தன் இலக்கை அடைய தேவையான விசையுடன் பாய்ந்து வரும் அம்பு. புத்தகத்தின் பெயர் காரணம் புரிந்ததல்லவா? 
    கதாபாத்திரங்களின் பெயரைக் கொண்ட இந்தக் கதைகள், வெறும் பாத்திரங்கள் அல்ல; அவை தனிமையை இனிமயாக்கும் உறவு போன்றவை. உங்களுடன் பயணித்து, உங்கள் தோளோடு தோள் உரசி, சில நேரங்களில் உங்கள் கண்களை நேருக்கு நேர் சந்தித்து, உங்களுக்குள் ஆழமான சில கேள்விகளை மெல்ல எழுப்பும் துணை. 
    செவியும் மனமும் திறந்து, கேளுங்கள் கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி.
    Show book
  • Havildhar Kuppulingam - cover

    Havildhar Kuppulingam

    K Aravind umar

    • 0
    • 0
    • 0
    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களுடனும் வாழும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றவர் அரவிந்த் குமார். இதன் பிரதிபலிப்பை இவர் சிறுகதைகளில் காணலாம். எங்கிருந்தாலும் மனிதர்களின் தேடலும் ஆர்வமும் என்னென்னவாய் இருக்கின்றனவென்பதை இவரின் கதைகள் பேசுகின்றன. ஒவ்வொரு வாழ்க்கை முயற்சியிலும் கண்டடைகின்ற உண்மைகளுக்கு விசுவாசமாய் இருக்க முனைகிற பாத்திரங்கள் இங்கே நிறைய! அன்பையும் உறவையும் மாத்திரமல்ல, வக்கிரங்களையும் கைமாற்றிக் கொடுக்கின்றவர்களோடும் நாம் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கிறோம்; அத்தகைய நிர்ப்பந்தங்களைக் கதைகளாக்கியிருக்கிறார் ஆசிரியர். மீற முயலாமலே மீறிச் செல்வதும் மீறிச் செல்ல முயன்றாலும் மடங்கி விழுவதுமென நம்மிடையே நிகழ்கிற ரசவாதங்களே அரவிந்தின்  கதைகள்.
    
    The author has spent his life in many parts of the state, with a wide variety of people. These stories talk about what people are curious about, what they search for, wherever they are. They are filled with characters who are loyal to the truths they find. Our relationships are never exclusively with those who share love, but they are often exchanges of vulgarities as well. Aravind has managed to capture the essence of such exchanges in his stories.
    Show book