Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
நீதான் என் காதலி - cover

நீதான் என் காதலி

தேவிபாலா

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

தந்தி வந்திருந்தது. 
 
வட இந்தியாவில் இருக்கும் அக்காவிடமிருந்து. 
 
உடனே புறப்பட்டு வரும்படி. அவளுக்கு ஃபிராக்சர் ஆகிவிட்டதால், உதவி தேவை என்று தந்தி. 
 
அப்பா, அம்மா பதறிவிட்டார்கள். 
 
இருவரும் அவசரமாகப் போய் லீவு போட்டார்கள். 
 
பணம் எடுத்து வந்தார்கள். 
 
பரபரப்பாக பேக் செய்தார்கள். 
 
“அம்மா! நீ வீட்டை பார்த்துக்கோ. செலவுக்கு இந்தா ஆயிரம் ரூபாயை வச்சுகோ. போபால் போகணும். குழந்தை எந்த நிலைமைல இருக்காளோ... நாங்க ரெண்டு பேரும் போய்த் திரும்ப பத்து நாளாகும் நிச்சயமா!” 
 
“சரிப்பா” 
 
“கேஸ் வரும். பால் கார்ட் வாங்கலை! ஞாபகம் வச்சுக்கோ. காய்கறி வாங்கிக்கோ.”
 
“அதான் வினய் இருக்கானே!” 
 
“கிழிச்சான்! நாங்களும் இல்லை. இன்னும் நல்லா அவுத்து விட்ட கழுதையா ஊரைச்சுத்துவான். நீ கொஞ்சம் கண்டிச்சு வைம்மா. காசைக் கண்ல காட்டாதே! புரியுதா?” 
 
அம்மாவுக்கே பிடிக்கலை. 
 
“சரி புறப்படுங்க நேரமாச்சு!” 
 
“அம்மா! நான் ஸ்டேஷன் வரைக்கும் வரட்டுமா?” 
 
“எதுக்கு! எங்களுக்குப் போகத் தெரியாதா? வாயை மூடிட்டு வீட்ல இரு!”
 
இருவரும் பாட்டியிடம் சொல்லிக்கொண்டு போய் விட்டார்கள். 
 
வினய் கூடத்தில் படுத்து விட்டான். 
 
வெறுப்பாக இருந்தது. 
 
'பணத்தைக் கண்ணில் காட்ட மாட்டார்கள்!’
 
நண்பர்கள் மத்தியில் வினய் அவமானப்படாத நாள் இல்லை!' 
 
மற்றவர்கள் வாங்கி தரும் டீ, டிபன் ஏற்றுக் கொள்ள பிடிக்காது. மறுக்கவம் முடியாது!' 
 
பதிலுக்கு ஒரு நாள்கூடச் செய்ய முடியாது. 
 
“பீஸை இவனிடம் தரமாட்டார்கள். அப்பா வந்து கட்டுவார். பஸ் பாஸ்! சகலத்துக்கும் வசதி! ஆனால் சில்லறை மட்டும் தேறாது. 
 
“பாட்டி! நான் சாயங்காலம் வெளியே போகணும்!” 
 
“எங்கப்பா?” 
 
“விக்ரம் அக்காவோட கல்யாண ரிசப்ஷன்!” 
 
“என்ன வாங்கிட்டு போக போறே!”
 
“எதுவுமில்லை!” 
 
“வெறும் கையோடவா ரிசப்ஷன் போறே!” 
 
“ஆமாம் பாட்டி. எங்கிட்டப் பணம் இல்லையே! என்னை அப்பா, அம்மா நம்பறதில்லையே! அக்கானா பதறி ஓடறாங்க. என்னை மட்டும் ஏன் பாட்டி வெறுக்கறாங்க? நான் என்ன பாவம் செஞ்சேன்?”
 
பாட்டிக்கு வேதனையாக இருந்தது. 
 
“நீ ஒரு பாவமும் செய்யலை கண்ணா! உன் மேல அவங்க ரெண்டு பேருக்கும் பாசமில்லைனு நினைச்சியா? உனக்குப் புரிஞ்சுகற பக்குவம் வரலை! நீ பெரிய மனுஷனா வரணும்னு அவங்க ஆசைப்படறாங்க ராஜா!” 
 
“ஆரம்ப ஆசைகளைப் பொசுக்கிட்டு, அப்புறம் அணைச்சுக்கறதால யாருக்கும் லாபம் பாட்டி?” 
 
“இந்தா! ஒரு கவர்ல இந்த அம்பது ரூபாயை போட்டு கல்யாணத்துல குடு!  உன் செலவுக்கு இந்த அம்பதை வச்சுக்கோ!” 
 
“பாட்டீ!” 
 
“நான் கணக்கு சொல்லிக்கறேன். போ கண்ணா!” 
 
“பாட்டி! நீ மட்டும் இல்லைன்னா, இந்த வீட்டுக்கு வரவே எனக்கு புடிக்காது பாட்டி!” 
 
“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது!” 
 
மாலை ஐந்தரை மணிக்குக் குளித்தான். 
 
“பாட்டி எனக்கு தலை துவட்டி விடேன்!”
 
“இரு வர்றேன்!” 
 
பாட்டி உள்ளே வந்தாள். 
 
“ச்சீ படவா! உடம்புல ஒட்டுத் துணி இல்லாமலா நிக்கறே?” 
 
“நீதானே பாட்டி! தப்பென்ன?” 
 
“பாட்டியானாலும் நான் பொம்பளை! உனக்குப் பதினேழு வயசு முடிஞ்சாச்சு! நீ குழந்தையில்லை!” 
 
“உனக்கு நான் குழந்தைதான் பாட்டி!” 
 
“சரி ஒக்காரு பனைமரம் மாதிரி வளர்ந்தாச்சு. இப்பவும் பாட்டிகிட்ட கொஞ்சிறியா?”
 
பத்தே நிமிடங்களில் ட்ரஸ் மாற்றிக் கொண்டான்.
 
தலைவாரி பவுடர் போட்டு வெளியே வந்தான். 
 
“பாட்டி! நான் சரியா இருக்கேனா?” 
 
“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. ஜாக்கிரதையா போயிட்டு வா! ஊரைச்சுத்தாதே! சீக்கிரம் வந்து சேரு!” 
 
“சரி பாட்டி!” 
 
வெளியே வந்து பஸ் பிடித்தான். கூட்டம் அவ்வளவாக இல்லை.
 
அரைமணி நேரப் பயணம். 
 
நகரின் மையத்தில் இருந்தது அந்த மண்டபம். எதிரே பஸ் இறங்கினான்.
 
போக்குவரத்து உச்சத்தில் இருந்து
Disponible depuis: 03/02/2024.
Longueur d'impression: 46 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Voir livre
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Voir livre
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Voir livre