Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
மனசுக்கு மட்டும்! - cover

மனசுக்கு மட்டும்!

தேவிபாலா

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

“என்னடீது? நீயும் வந்திட்டியே! அவன்கூட யார் இருக்காங்க?” 
 
“பொறுப்பானவங்களை உட்கார வச்சிட்டுத்தான் வந்திருக்கேன். நீ கவலைப்படாதே! எனக்கு தலைவலியா இருக்கு. காபி குடு! அக்கா எங்கே?” 
 
“மாடில இருக்கா!” 
 
“நீ வா! உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்!” 
 
“இரு! வர்றேன்!” அம்மா காபியுடன் வந்து எதிரே உட்கார்ந்து கொண்டாள்.
 
“ஏன்மா? டாக்டர் ஏதாச்சும் சொன்னாரா? பிரச்னை எதுவும் இல்லையே?”
 
“உன்பிள்ளை பூரணமான ஆரோக்யத்தோட இருக்கான்!” 
 
“வேற என்ன? பணப் பிரச்சனையா?” 
 
வந்தனா அம்மாவை ஆழமாகப் பார்த்தாள். 
 
“அது இனிமேலதான் வரப்போகுது நமக்கு!” 
 
“புரியும்படியா பேசுடி!” 
 
“அம்மா நீ அதிர்ச்சி அடையாதே! பொறுமையாக் கேட்டுக்கோ! நேரடியா நான் விஷயத்துக்கு வர்றேன்!” 
 
அம்மா முகத்தில கலவரம். 
 
'என்ன சொல்லப் போகிறோள் இவள்?’ 
 
வந்தனா டாக்டர் சொன்னது - அந்த நீரஜாவின் அப்பா பேசியது... நீரஜாவின் விளக்கம் எல்லாம் சொன்னாள். 
 
அண்ணனின் எதிர்பார்ப்பையும் சொல்லிவிட்டாள். 
 
“உனக்கு வெக்கமால்ல?” 
 
“இதுல நான் வெக்கப்பட என்னம்மா இருக்கு?” 
 
“எங்க குடும்பத்துல மூத்தவன் அவன். எங்களை விட்டுட்டு அவனுக்காக ஒரு வாழ்க்கை அமைச்சுக்க முடியாதுனு அந்த பெரிய மனுஷன்கிட்ட படக்குனு நீ சொல்ல வேண்டியதுதானே!” 
 
“அம்மா! அதைச் சொல்ல வேண்டியது நானில்லை! உன் பிள்ளை!” 
 
“சொல்லமுடியாம மனசு புழுங்கித்தாளே மயக்கம் வந்திருக்கு!” 
 
“அவர்கிட்ட சொல்ல முடியாம அண்ணனுக்கு மனசு புழுங்கலை நம்மகிட்ட சொல்ல முடியாம தவிக்கறான்!” 
 
“அப்படியா சொல்ற?” 
 
“ஏறத்தாழ உன் பிள்ளையே இதை அப்பட்டமா எங்கிட்ட சொல்லியாச்சும்மா!” அம்மாவின் கண்களில் அதிர்ச்சி எட்டிப்பார்த்தது. 
 
அருண் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டான். 
 
நீரஜாவின் அப்பா வந்து பில் கட்டிவிட்டார். வந்தனாதான் கூட இருந்தாள். அருணைப்பிடித்து வந்து நீரஜா காரில் ஏற்ற, வந்தனாவையும் ஏறிக்கொள்ளச் சொன்னார். 
 
கார் அருண்வீட்டு வாசலில் நின்றது. 
 
வந்தனா இறங்கினாள் 
 
“உள்ள வாங்க!” வரவேற்றாள். 
 
இருவரும் வர, “உட்காருங்க! அம்மா! காபி போடு!” 
 
அம்மா கடுப்புடன் உள்ளே வந்தாள். 
 
“அது ஒண்ணுதான் குறைச்சல்!” 
 
“ஷ்! சொன்னதைச் செய்மா!” 
 
“நீங்க போய் படுங்க அருண்! ஹெல்ப் பண்ணும்மா!” 
 
நீரஜா அவனுடன் வந்தாள். அவனைப் படுக்க வைத்துவிட்டு திரும்பிவர, அம்மா காபியுடன் வந்தாள். 
 
ட்ரேயை நீரஜாவிடம் நீட்ட, 
 
அவள் காபியை எடுப்பதற்குள், திடீரென குறுக்கே புகுந்த கீர்த்தனா, காபியை எடுத்துவிட்டாள். 
 
அவள் அதை எடுத்த வேகத்தில் கோப்பையில் காபி வேகமாகத் தளும்பி, நீரஜாவின் சுடிதாரில் கொட்டிவிட்டது. 
 
“இடியட்!” 
 
நீரஜா பளாரென கீர்த்தனாவை அறைந்தாள். 
Disponible depuis: 03/02/2024.
Longueur d'impression: 67 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Voir livre
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Voir livre
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Voir livre
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Voir livre
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre