Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
கண்துடைப்பு - cover

கண்துடைப்பு

தேவிபாலா

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

அஞ்சலி கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தாள்.செக்ஷன் ஆபீசர் வந்தார். பார்த்தார்.“அஞ்சலி! இன்னிக்கு அதிக நேரம் இருந்து பண்ணிடுங்க! நாளைக்குக் காலைல ஏழு மணிக்கே வந்துடுங்க! நாளைக்கும் முழு நாள் வேலை செஞ்சாத்தான் இது முடியும்! நாளைக்கு டெஸ்பாட்ச் பண்ணியாகணும்!”“சரிங்க சார்!”போன் அடித்தது! அஞ்சலி எடுத்தாள்! முருகன்தான்!“உன் ‘கால்’ பார்த்தேன். கூப்பிட்டியா அஞ்சலி!”“ஆமாங்க! ஒன்பது மணிவரைக்கும் ஆபீஸ்ல வேலை இருக்கு!”“நான் வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன்! கவலைப்படாதே! ஏதாவது சாப்பிடும்மா! ஒடம்பு கெட்ரப் போகுது!”“சரிங்க!”வைத்து விட்டு வேலையைத் தொடர,“அம்மா!”அஞ்சலி நிமிர்ந்தாள். அப்பா வீட்டு பழைய டிரைவர்!“அடடா! வாங்க சின்னசாமி! என்ன இவ்ளோ தூரம்?”“வெளில கார்ல பெரியம்மா இருக்காங்க! உங்களைப் பாக்க வந்திருக்காங்க!”“அம்மாவா? என்னைப் பாக்கவா?”அஞ்சலிக்கு குபீரென முகம் மலர்ந்தது.தற்காலிகமாக கம்ப்யூட்டரை நிறுத்தி விட்டு, வேகமாக வெளியே வந்தாள். கார் கம்பெனிக்குள் நின்றது!அஞ்சலி ஓடி வந்தாள்!அம்மா பின்கதவைத் திறந்தாள்!“அம்மா!”“உள்ளே வந்துடு அஞ்சலி!”அஞ்சலி காருக்குள் நுழைந்தாள்!“என்னம்மா?”“நீ எப்படீடா இருக்கே? இளைச்சு, கறுத்துப் போயிட்டியேம்மா?”“இல்லைம்மா! நான் நல்லாத்தான் இருக்கேன். நம்ம வீட்ல இருந்த மாதிரிதான் இருக்கேன். பணக்கார ரத்னவேலு மனைவிதான் இளைச்சிருக்கே!”அம்மா பேசவில்லை.“சொல்லும்மா! நாளை மறுநாள் உன் வீட்ல நடக்கப் போற உன் மகள் ஸ்நேகா நிச்சயதார்த்தத்துக்கு எல்லாரும் வந்து சேர்ந்தாச்சா?”“அஞ்சலி?”“என்னம்மா... ஊருக்கே தெரிஞ்சிருக்கு! மீடியா கவரேஜ் கூட இருக்கு! எனக்கு மட்டும் தெரியாதா?”அம்மா அஞ்சலியை ஆழமாகப் பார்த்தாள்!“அஞ்சலி! உன் தங்கச்சி நிச்சயத்துக்கு நீயும் வரணும்மா! உன்னை அழைக்கத்தான் வந்தேன்.”“அப்பா - ஸாரி - உன் புருஷனுக்கு சொல்லிட்டு வந்தியா? இல்லை, சொல்லாம திருட்டத்தனமா வந்தியா?”“அவர் சம்மதத்தோடதான் வந்தேன்மா!”“வீட்டுக்கு வந்து கூப்பிட்டா, என் புருஷனையும் கூப்பிடணும். அதை நீங்க யாரும் விரும்பலை. அதனால இங்கே வந்துட்டியாக்கும்?”“அஞ்சலி!”“ஸாரிம்மா! நான் வரப்போறதில்லை! முதலாவதா, ஆபீஸ்ல எனக்கு லீவு இல்லை. அடுத்தபடியா, அவர் வேண்டாம் - நான் மட்டும் போதும்னு நினைக்கறவங்க வீட்டுக்கு நான் வர விரும்பலை! ஸ்நேகாவுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடும்மா!”“ஏம்மா எங்கிட்ட கோவப்படற? நீ எப்பவும் வேணும்னு நினைக்கற இந்தம்மாவை நீயும் புண்படுத்தினா எப்படி அஞ்சலி?”கல்யாணி அழுதாள்!“உன்னை நான் புண்படுத்தலைமா! நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை அவமானப்படுத்தறது உனக்குப் புரியலையா?”“அஞ்சலி! என்னைப் பேச விடு! முருகனைக் கூப்பிட எனக்கு விருப்பம்தான். எப்ப உன் புருஷன் ஆயாச்சோ, அப்பவே முருகனை என் மாப்ளையா நான் அங்கீகரிச்சிட்டேன். ஆனா நான் கூப்பிட்டு, அந்த வீட்டு விழாவுக்கு முருகன் வந்தா என்ன நடக்கும்னு உனக்குத் தெரியாதா அஞ்சலி?”“தெரியும்! அவரை உன் புருஷன் உட்பட எல்லாரும் அவமானப்படுத்துவாங்க!”“அது உன் கண் முன்னால நடக்கணுமா?”“அம்மா! அவமானம் அவருக்கு மட்டுமில்லை! நான் தனியா வந்தாலும், எனக்கும் அது நிகழும்! என்னையும் கேவலப்படுத்தாம விடுவாங்களா! சொல்லு!”கல்யாணி பேசவில்லை
Verfügbar seit: 13.01.2024.
Drucklänge: 79 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Zum Buch
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Zum Buch
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Zum Buch