Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
இன்று பாதி! நாளை மீதி! - cover

இன்று பாதி! நாளை மீதி!

தேவிபாலா

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

வெள்ளிக்கிழமை விடிந்து விட்டது.எட்டு மணிக்கெல்லாம் தயாராகி விட்டாள் கீர்த்தனா. ரெக்ஸோனா பச்சையில் சூடிதார் அணிந்து, கூந்தலை ஷாம்புவில் கழுவி, முதுகில் பரப்பியிருந்தாள்.நல்ல உயரம்...!வாளிப்பான உடம்பு...!பார்த்தவர்களை அதிரடிக்கும் பர்ஸனாலிட்டி!“போலாமா கீர்த்தனா?”“நான் ரெடி அங்கிள்.”“உன் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர், ஒரிஜினல் சர்டிபிகேட்ஸ் எல்லாம் எடுத்து வச்சிருக்கியா?”கைப்பையைக் காட்டினாள் கீர்த்தனா.“நானும், அப்பாவும் இண்ட்டர்வியூ வந்தப்ப ரெண்டு நாள் ஓட்டல்ல தங்கினம், ஆறுமாசம் முன்னால். அப்பவே நீங்க இருக்கறது தெரிஞ்சிருந்தா, ஆன்ட்டியை பார்த்திருக்கலாம்.!”“ஜாக்ரதைடீ! போற இடத்துல சளசளன்னு பேசாதே! பத்தரைக்கு ராகுகாலம் தொடக்கம். அதுக்குள்ள கையெழுத்து போட்டுடு!”“சரிம்மா!”பைக்கில் பரவி உதைத்தான் பானு. நாசூக்காக அவன் பின்னால் அமர்ந்தாள் கீர்த்தனா. அது தேய்ந்ததும், சாவித்ரி உள்ளே வந்தாள். வந்த இரண்டு நாட்களில் யாரையும் பழகிக் கொள்ளவில்லை. அந்த இடத்தில் எட்டு ஃபிளாட்கள் இருந்தன. யாரும் ஸ்நேக பாவம் காட்டவில்லைஆனாலும் நாம் அப்படி இருக்கக்கூடாது. நாமாகச் சென்று பழகிக் கொள்ள வேண்டும்.’ஆறுமணிக்கு கீர்த்தனாவை அழைத்து வர பானு போய்விட்டான். ஏழு மணிக்குள் குதிரை போல கீர்த்தனா வந்து இறங்கினாள்.“அம்மா! பசிக்குது எனக்கு!”“ஓட்டலுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு வழில சொன்னேன் இல்லை உனக்கு?”“வேண்டாம் அங்கிள். எனக்கு ஓட்டல் உணவே சேர்றதில்லை!”“எப்பவும் அம்மா இருந்தா, தெம்பா பேசலாம்! என்னை மாதிரி ஆட்கள் பேச முடியுமா?”“இனிமே நீங்களும் பேசலாம்!”“எப்படி இருந்தது ஆபீஸ்?”“வொண்டர்புல். நான் பேசற இங்கிலீஷ் பார்த்து ஜோனல் மானேஜர் பொளந்த வாயை இன்னும் மூடலை!”“உயிரோடதான் இருக்காரா? புண்ணியவதி, நீ போய் மோட்சம் தந்துட்டியா அவருக்கு!”“முன்னேற கம்பெனியில் நிறைய வழி இருக்கு. பரீட்சைகள் பாஸ் பண்ணனும். அதிகாரியாயிட்டா அடிக்கடி அமெரிக்கா போயிட்டு வரலாம்.!”“இங்கே மெட்ராஸ் வரதுக்கே உங்கப்பா உசிரை விடறார். அமெரிக்காவாம் அமெரிக்கா...!”“எங்கம்மா அறுக்கத் தொடங்கிட்டா தாங்காது அங்கிள். அப்பா தேவலை!”“நாளைலேர்ந்து பஸ்ல போ கீர்த்தி!”“ஏன்கா? நான் கொண்டு போய் விடறேனே!”“அது கஷ்டம் பானு. ஒரு நாளைப் போல முடியுமா? அவ ஆபீசும், உன் ஆபீசும் பக்கத்துலேயா?”“இல்லை!”“பின்ன? பெட்ரோல் சும்மா கிடைக்குதா உனக்குஅப்படியெல்லாம் பார்த்தா ஆகுமாக்கா?”“ஆமாம் அங்கிள். பஸ்ல கூட்டத்துல பிதுங்கிட்டு என்னால போக முடியாது!”மறுநாள் அலுவலகத்தில் அந்தக்கடிதம் வந்தது அவனுக்கு. ஐஸ்வர்யாதான் எழுதியிருந்தாள்.“உங்கள் கடிதம் கிடைத்தது. நான் இங்கு நலமாக இருக்கிறேன். நீங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவும். பிரசவம் ஒரு வாரம் முன்பாகவே ஆகலாம் என்று டாக்டர் சொன்னார். நம் வீட்டில் யாரையும் தங்க வைக்க வேண்டாம். காலம் கெட்டுக் கிடக்கிறது. நண்பர் குடும்பமாக இருந்தாலும், நாலு நாள் தங்கிவிட்டு, அனுப்பி விடுங்கள். மற்றவை அடுத்த கடிதத்தில் - ஐஸ்வர்யா.பானுசந்தருக்கு நெற்றி நரம்புகள் கலைந்து ஆவேசம் புறப்பட்டது ‘...ச்சே என்ன மனுஷி இவள்? உனக்கு மனிதர்களே இல்லாத தீவில் வாழப்பிடிக்கும். அதற்காக நானுமா? கீர்த்தனாவும், அக்காவும் இதை அறிந்தால் நொந்து போக மாட்டார்கள்?’‘கடிதம் வந்ததா என்று கேட்டால், என்ன பதில் சொல்லுவேன் நான்?’‘நிச்சயமாக இதைக் காண்பிக்க முடியாது!’‘ஐஸ்வர்யா வீட்டு விலாசத்துக்கு எழுதுவதில்லை.’‘அவன் கையெழுத்து இவர்களுக்குத் தெரியுமா என்ன? இதை வேறு விதமாகத் தான் சமாளிக்கவேண்டும்!’ட்ரா திறந்து ஒரு இன்லண்ட் எடுத்தான்.பேனாவை விரல் இடுக்குகளின் ஓரத்தில் பிடித்து தன் கையெழுத்தை மாற்றி, கிறுக்கலாக எழுதத் தொடங்கினான்.‘அன்பான உங்களுக்கு! கடிதம் கிடைத்தது. உங்கள் நண்பர் குடும்பம். நம் வீட்டுக்கு வந்ததில் அளவில்லாத மகிழ்ச்சி எனக்கு. நம் வீடும் கலகலவென்று இருக்கும். சுத்தமாக இருக்கும். இனி சாப்பாட்டுக்கு கவலையில்லை உங்களுக்கு. அவர்கள் இருவரைப் பற்றியும் விளக்கமாக நீங்கள் எழுதவில்லை. எழுதுங்கள். அக்காவுக்கு அடுத்த முறை நானே கடிதம் எழுதுகிறேன் - ஐஸ்வர்யா
Disponible depuis: 13/01/2024.
Longueur d'impression: 116 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Voir livre
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Voir livre
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Voir livre
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Voir livre
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre