Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
சூரியன் சுடவில்லை! - cover

சூரியன் சுடவில்லை!

தேவிபாலா

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

ஒரு ரத்ததான முகாமில்தான் பாஸ்கரை சந்திக்கும் வாய்ப்பு ரம்யாவுக்குக் கிடைத்தது.குறிப்பிட்ட ஒருவகை ரத்தம் கிடைக்கவில்லை என்றதும் அந்த நோயாளியைப் பிழைக்க வைக்க, எப்படியாவது ரத்தம் சேகரித்துக் கொண்டு வர வேண்டும் என ரம்யா பாடுபட, அவளுக்கு பக்கபலமாக பாஸ்கர் நின்று, இருவரும் செயல்பட, எப்படியோ ஆட்களைப் பிடித்து ரத்தம் சேகரித்து விட்டார்கள்.அந்தப் பெண் உயிர் பிழைத்து விட்டாள்.அந்தக் குடும்பமே டாக்டருக்கு நன்றி சொல்ல, ‘இவங்க ரெண்டு பேருக்கும்தான் உங்க நன்றிகள் உரித்தாகணும்’ என டாக்டர் கைகாட்ட, அவர்கள் ரம்யா, பாஸ்கரின் காலில் விழுந்து விட்டார்கள்.ஒரு உணர்ச்சிபூர்வமான சூழ்நிலையில் ஒரு உயிரைக் காப்பாற்றிய நெருக்கடியில் அந்த நட்பு ஆரம்பமானது.இருவரும் டோனர்கள் - மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரத்தம் தரும் இயல்பு கொண்டவர்கள் - அடிக்கடி ரத்ததான முகாம்களை நடத்துபவர்கள் என பல ஒற்றுமைகள் இருப்பதால், சந்திப்புகள் வளர்ந்து, நட்பு இறுக்கமானது.குடும்பம் பற்றிப் பேசினார்கள். சொந்த சங்கதிகளை பரிமாறிக் கொண்டார்கள்.பார்க்காவிட்டால் முடியாது என்ற நிலை உருவானது.தினசரி தொலைபேசி மூலம் பேசுவது வழக்கமாயிற்று.ஒருநாள் தாள முடியாமல் கோயிலில் வைத்து பாஸ்கர் தன் மனதை உடைத்து விட்டான்.“ரம்யா! உன்னை நான் காதலிக்கறேன்னு தோணுது.”ரம்யா அதிர்ச்சியடையவில்லை.என்ன ரம்யா பேசலை?”“பேசத் தெரியலை பாஸ்கர். இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்குத் தெரியலை.”“ரம்யா! நீ எங்கிட்ட கோவப்பட்டாலும் சரி! என் மனசுல உள்ள உணர்ச்சிகளை நான் கொட்டித் தீர்த்துர்றேன். கேட்டுக்கோ!”“சொல்லுங்க பாஸ்கர்!”“கல்யாணியை ஒருநாள் பாக்கலைனா கஷ்டம் தெரியலை. உன்னைப் பாக்கலைனா முடியலை. எப்பவும் உன் ஞாபகமா இருக்கு. உன்னை நினைச்சாலே ஒடம்புல ஒரு புது கெமிஸ்ட்ரி உண்டாகுது. ரம்யா! ஒரு அழகான பெண்கிட்ட உண்டாகக் கூடிய பாலுணர்வு இது இல்லை. அந்த மாதிரி அல்பத்தனங்களைக் கடந்தவன் நான். அதுக்கும் மேல உங்கிட்ட என்னவோ இருக்கு. எனக்குப் புரியலை. ஐ யாம் ஸாரி ரம்யா!”அவள் பேசவில்லை.“நீ யோசி ரம்யா! இது தப்புனா, உடனே என்னைக் கண்டிச்சிடு. அந்த உரிமை உனக்கு உண்டு.”“நான் போறேன் பாஸ்கர்!”வீட்டுக்கு வந்து விட்டாள்.அன்று இரவு சுத்தமாக உறக்கமே வரவில்லை.அவனது வார்த்தைகள் கழன்றன.அதில் ஒன்று கூடத் தப்பாகத் தெரியவில்லை.ரம்யா கல்லூரியில் படிக்கும் நாளில் அவளிடம் ஜொள் விட்ட கூட்டம் ஏராளம். காதல் கடிதம் தந்து, கலாட்டா செய்து, கெஞ்சி அழுது, ரகவாரியாக அவள் பார்க்காத ஆண்கள் இல்லை. சகலமும் அவளுக்கு வேடிக்கை. அப்போதே மறந்து போவாள்.ஆனால், பாஸ்கர் விவகாரத்தில் இதை உதற முடியவில்லை.
Verfügbar seit: 13.01.2024.
Drucklänge: 69 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Zum Buch
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Zum Buch
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Zum Buch
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Zum Buch
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Zum Buch