Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
சொக்குதே மனம்! - cover

சொக்குதே மனம்!

தேவிபாலா

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

காலை நாலு மணிக்கு ராதாவின் அந்தத் தோழி வீட்டுக்கு வந்து அவளை அழைத்துக் கொண்டார்கள். கார் புறப்பட்டது! தோழி ராதாவை வாழ்த்தி அனுப்பினாள்!கார் திருவான்மியூர் கடந்ததும் பாலாவைத் திரும்பிப் பார்த்தாள் ராதா!“ஏன் உங்க முகத்துல சிரிப்பே இல்லை பாலா? பதட்டமா?”முன்னால் உட்கார்ந்திருந்த சரத் எல்லா விஷயங்களையும் ஒன்று விடாமல் சொன்னான்.“அய்யோ! மாட்டிப் போமே!”“நான் எதுக்கு இருக்கேன் ராதா? கவலைப்படாதீங்க! பாத்துக்கலாம்!”“சரத்! அவங்களும் முதல்ல பிள்ளையார் கோயிலுக்குத் தான் வருவாங்க.”“அவங்க எந்த நேரத்துல வந்து சேருவாங்கனு தெரியலை. தைரியமா இருங்க. எது நடந்தாலும் ஏத்துக்கத்தான் வேணும். புரியுதா?”பாண்டிச்சேரிக்கு ஆறரை மணிக்கெல்லாம் இவர்களது கார் போய் விட்டது. ஏற்பாடுகளை சரத் செய்து வைத்திருந்தான்.அங்குள்ள நண்பன் ஒருவனது அறைக்கு வந்து இருவரும் உடைகளை மாற்றி ஒப்பனை செய்து கொண்டு தயாராக இருந்தார்கள்.சரத் கோயிலுக்கு வந்து அய்யரைத் தயார் செய்து, ஏழரைக்குத் தொடங்கினால், எட்டுக்குள் முடித்து விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.ஏழரைக்கு சரியாக இருவரும் உள்ளே வந்து உட்கார்ந்தார்கள். கோயிலில் கூட்டம் இருந்ததுஇருவருக்கும் பதட்டத்தில் உட்காரக்கூட முடியவில்லை. சரத் தைரியம் சொன்னாலும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான்.சரியாக எட்டு மணிக்கு பாலா தாலியைக் கட்டி விட்டான்.இனி உண்மை தெரிந்தாலும் போராட்டம் தான். தாலி ஏறுவது தடுக்கப்படவில்லை.மளமளவென சாமியைக் கும்பிட்டு விட்டு இருவரும் வெளியே வந்து விட, சற்று தூரத்தில் கார் வந்து நின்றது. அப்பா - அம்மா இறங்குவதை சரத் பார்த்து விட்டான்.இவர்களைக் காருக்குள் அழைத்து உட்கார வைத்தான். தானும் உட்கார்ந்து கொண்டான்.அவர்கள் தியானத்தை சுருக்கமாக முடித்துக் கொண்டு காருக்கு வந்து விட்டார்கள்.அப்பா - அம்மா ஆசிரமத்துக்குள் நுழைவது தெரிந்தது.சரத் பெருமூச்சு விட்டான்.“தப்பிச்சிட்டோம். இனி பயமில்லை. நல்ல ஓட்டல்ல டிபனுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். போய் சாப்டுட்டு, நேரா பதிவு அலுவலகத்துக்கு போக வேண்டியதுதான்!”பாலா தலையசைத்தான்.மணவறையில் மாலை மாற்றுவது, தாலி கட்டுவது, பிள்ளையார் சன்னதியில் வணங்குவது என சகலத்துக்கும் சரத் புகைப்படம் எடுத்து வைத்திருந்தான். அப்பா - அம்மா ஆலயத்துக்குள் நுழைவதைக் கூட புகைப்பட மெடுத்து விட்டான்.மூவரும் வந்து சாப்பிட்டார்கள்.“இனி நீங்க பதட்டப்பட வேண்டாம். எல்லாமே சரியா நடக்கும். மத்யானம் ஒரு மணிக்குள்ளே சென்னைக்கு என் வீட்டுக்குப் போயிடலாம்.”காலை பத்தரை மணிக்கு பதிவு அலுவலகத்துக்கு மாலையோடு வந் தார்கள். ஏற்கெனவே ராதாவின் இன்னொரு தோழி தயாராக இருந்தாள்
Disponibile da: 13/01/2024.
Lunghezza di stampa: 68 pagine.

Altri libri che potrebbero interessarti

  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Mostra libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Mostra libro
  • Udhayabanu - Kaanmalar - cover

    Udhayabanu - Kaanmalar

    Gokul Seshadri

    • 0
    • 0
    • 0
    1001 CE. King Rājarāja Chōḷa has returned to the imperial capital of Thanjāvūr, but peace eludes him. A  brazen assasination attempt on his life has left his administration in disbelief. Fragments of evidence point directly towards Chēraman Perumal, the king of Kerala. Was Chēra monarch himself complicit in the plot, or was he merely a pawn in a much deeper conspiracy?
    
    A swift military response offers no easy answers. Mahōdayapura, the Chēra capital, stands fortified by land and sea alike - impenetrable, vigilant, and prepared. A surprise attack is impossible. One misstep could plunge the southern kingdoms into chaos. Cornered by uncertainty and constrained by strategy, King Rājarāja must choose his next move with great care.
    
    Even as the king weighs war and diplomacy, another game unfolds in the shadows. In Karuvur, Muvendan, Rājarāja's fiercely loyal personal bodyguard-pursues a dangerous trail. What began in the horse-trading grounds of Madurai, with a single fleeing assassin, now leads him into a web far darker than he imagined. Each step brings him closer to a revelation both sinister and explosive.
    
    As destinies converge, difficult questions multiply. What path lies before General Maḷapāḍiyar and his steadfast companion Ambalavanar, caught between duty and consequence? What piece of sacred history will Mathura and revered Saint Nambiyāṇdar Nambi discover in their sojourn to Tillai Chidambaram? What unforeseen dangers await Vijayaraja Acharya, as he plans a trip to Kerala with his drama troupe?
    
    Building on the momentum of the earlier volumes, Udhayabānu Kānmalar is a masterfully woven political thriller - rich with intrigue, betrayal, and revelation - where seemingly disparate lives and events collide to produce a stunning and unforgettable narrative.Come and immerse yourself in the world of Chōḷa history, where unseen threads from the past tighten around the present; where long forgotten secrets refuse to remain buried.
    
    காலம் பொது நூற்றாண்டு 1001. கடந்த ஐப்பசி சதயத்தன்று தன் மீது படுகொலைத் தாக்குதலை நிகழ்த்திய சேர நாட்டு சதிகாரர்களின் மீது ஏதேனும் ஒரு கடுமையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சோழப் பேரரசர் இராஜராஜ சோழர். ஆனால் அந்த நடவடிக்கை என்ன என்பதைப் பற்றிய கருத்தொற்றுமையில்லை. சேரமான் பெருமாளுக்குச் சதியில் நேரடியாகத் தொடர்பு உண்டா? இல்லையா? என்பது இன்னமும் உறுதியாகாத நிலையில் சேரர் தலைநகரான மகோதயபுரத்தைத் தாக்குவது அரசியல் ரீதியில் சரியான நடவடிக்கையாக இருக்குமா என்று யோசிக்கிறார் மன்னர். மேலும் கடலும் மலையும் சூழ்ந்துள்ள மகோதகையைத் தாக்குவதும் எளிதல்ல. மன்னர் யோசித்துச் செயல்படவேண்டிய நேரம் இது.
    Mostra libro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Mostra libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Mostra libro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Mostra libro