Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
சாகசக் கலை - cover

சாகசக் கலை

தேவிபாலா

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

பாக்டரியிலிருந்து ரிசப்ஷனுக்கு வந்தான் கார்த்தி.
 
“என்ன பாரதி? ஆபீசுக்கு லீவா?”
 
“ம்! உங்களைப் பார்த்தே தீர வேண்டிய கட்டாயம்! பர்மிஷனோ, லீவோ போட முடியுமா?”
 
“பிளாண்ட்ல வேலை நிறைய இருக்கு! கஷ்டம்தான்!”
 
“சரி! இங்கேயே அரை மணி நேரம் ஒதுக்கலாமா?”
 
“இரு! சீஃப் என்ஜினியர்கிட்ட சொல்லிட்டு வந்திர்றேன்!”
 
கார்த்திகேயன் வந்தான்.
 
சற்றே ஒதுக்குப்புறமான இடமாக உட்கார்ந்தார்கள்.
 
“சொல்லு பாரதி!”
 
பாரதி எல்லாம் சொன்னாள்.
 
கார்த்திகேயன் மௌனமாக இருந்தான்.
 
“என்ன பேசலை?”
 
“நான் என்ன பேசறது? எங்க வீட்ல எங்கம்மா என் பேச்சைத் தாண்ட மாட்டாங்க நல்ல மருமகளா இருக்கணும்! உங்கப்பா பிடிவாதத்தை எப்படி உடைக்கப்போறே?”
 
“ஒரு நொடில கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கலாம். ஆனா முகமுழி இல்லாம செஞ்சுகணுமானு பாக்கறேன்! பெத்து வளர்த்தவங்க. உறவை முறிச்சுக்கவும் மனசு கேட்கலை! உங்களைத் தவிர்த்து இன்னொருத்தர் கூட வாழவும் பிடிக்கலை!”
 
“சரி என்ன யோசனை?”
 
“அப்பா பிடிவாதம் ஜாதகம் பொருந்தணும்! இதுக்காக ஒரு பொய் சொன்னா என்ன கார்த்தி?”
 
“என்ன பொய்?”
 
“நல்ல ஜோசியரைப் புடிச்சு, காசைக் கொடுத்து, என் ஜாதகத்துக்குப் பொருந்துற மாதிரி உங்களுக்கு ஒரு ஜாதகம் எழுதச் சொல்லக் கூடாதா? அதுல உங்க வயசு, மற்ற விவரங்கள் பொருந்தற மாதிரி செட்டப் பண்ணிக்கலாம்.”
 
“பாரதி! கல்யாணம் அவசியம்தான்! அதுக்காக இத்தனை பெரிய பொய்யைச் செல்லணுமா?”
 
“கார்த்தி! என்னை நீங்க புரிஞ்சுகலை”
 
“புரியாம என்ன? என் மேல உள்ள காதலால இதை நீ சொல்ற? நான் பொய் சொல்லலாம்! என்னோட சேர்ந்து எங்கம்மாவும் பொய் சொல்லணும்!”
 
“எதுக்கு?'“
 
“நீ என்ன பேசற பாரதி? பொய்யா ஒரு ஜாதகத்தை உருவாக்கினா, நட்சத்திரம், ராசி லக்னம் எல்லாம் மாறும்!”
 
“மாறட்டும் கார்த்தி! ஆனா மாப்பிள்ளை மாறாம, ஜாதகம் மட்டும் மாறினா என்ன தப்பு? உங்க மனசு போல இருக்கறவங்க உங்கம்மானு சொன்னீங்க! உங்களுக்காக, உங்க சந்தோஷத்துக்காக இதைச் செய்ய மாட்டாங்களா?”
 
“நான் பேசிப்பாக்கறேன்!”
 
“ஏன் கார்த்தி? உங்களுக்கே இஷ்டமில்லையா?”
 
“எனக்கு ஜாதகத்துல நம்பிக்கையே இல்லைமா! சரி! அப்படியே இருந்தா, எந்த ஜோசியன் லஞ்சத்துக்கு மசிவான்?”
 
“ஆளைப் பிடிக்கலாம்! ஜோசியனை நாம பொய் சொல்லச் சொல்லலியே! ஜாதகம் தயாரிக்கணும், அவ்ளோதானே!”
 
“நான் எங்கம்மாகிட்டப் பேசறேன்! நாளைக்கு எனக்கு நீ போன் பண்ணு!”
 
பாரதி புறப்பட்டு நேராக மீனா வீட்டுக்கு வந்தாள்.
 
மீனா அவளுடன் வேலை பார்ப்பவள்! நெருங்கிய தோழி! கல்யாணம் ஆனவள் அபார்ஷன் ஆகி லீவில் இருப்பவள்!
 
மீனா மட்டும்தான் இருந்தாள்.
 
பாரதி எல்லாம் சொன்னாள்.
 
மீனா யோசிக்கத் தொடங்கினாள்.
Verfügbar seit: 03.02.2024.
Drucklänge: 86 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Zum Buch
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Zum Buch
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Zum Buch