Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
சாகசக் கலை - cover

சாகசக் கலை

தேவிபாலா

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

பாக்டரியிலிருந்து ரிசப்ஷனுக்கு வந்தான் கார்த்தி.
 
“என்ன பாரதி? ஆபீசுக்கு லீவா?”
 
“ம்! உங்களைப் பார்த்தே தீர வேண்டிய கட்டாயம்! பர்மிஷனோ, லீவோ போட முடியுமா?”
 
“பிளாண்ட்ல வேலை நிறைய இருக்கு! கஷ்டம்தான்!”
 
“சரி! இங்கேயே அரை மணி நேரம் ஒதுக்கலாமா?”
 
“இரு! சீஃப் என்ஜினியர்கிட்ட சொல்லிட்டு வந்திர்றேன்!”
 
கார்த்திகேயன் வந்தான்.
 
சற்றே ஒதுக்குப்புறமான இடமாக உட்கார்ந்தார்கள்.
 
“சொல்லு பாரதி!”
 
பாரதி எல்லாம் சொன்னாள்.
 
கார்த்திகேயன் மௌனமாக இருந்தான்.
 
“என்ன பேசலை?”
 
“நான் என்ன பேசறது? எங்க வீட்ல எங்கம்மா என் பேச்சைத் தாண்ட மாட்டாங்க நல்ல மருமகளா இருக்கணும்! உங்கப்பா பிடிவாதத்தை எப்படி உடைக்கப்போறே?”
 
“ஒரு நொடில கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கலாம். ஆனா முகமுழி இல்லாம செஞ்சுகணுமானு பாக்கறேன்! பெத்து வளர்த்தவங்க. உறவை முறிச்சுக்கவும் மனசு கேட்கலை! உங்களைத் தவிர்த்து இன்னொருத்தர் கூட வாழவும் பிடிக்கலை!”
 
“சரி என்ன யோசனை?”
 
“அப்பா பிடிவாதம் ஜாதகம் பொருந்தணும்! இதுக்காக ஒரு பொய் சொன்னா என்ன கார்த்தி?”
 
“என்ன பொய்?”
 
“நல்ல ஜோசியரைப் புடிச்சு, காசைக் கொடுத்து, என் ஜாதகத்துக்குப் பொருந்துற மாதிரி உங்களுக்கு ஒரு ஜாதகம் எழுதச் சொல்லக் கூடாதா? அதுல உங்க வயசு, மற்ற விவரங்கள் பொருந்தற மாதிரி செட்டப் பண்ணிக்கலாம்.”
 
“பாரதி! கல்யாணம் அவசியம்தான்! அதுக்காக இத்தனை பெரிய பொய்யைச் செல்லணுமா?”
 
“கார்த்தி! என்னை நீங்க புரிஞ்சுகலை”
 
“புரியாம என்ன? என் மேல உள்ள காதலால இதை நீ சொல்ற? நான் பொய் சொல்லலாம்! என்னோட சேர்ந்து எங்கம்மாவும் பொய் சொல்லணும்!”
 
“எதுக்கு?'“
 
“நீ என்ன பேசற பாரதி? பொய்யா ஒரு ஜாதகத்தை உருவாக்கினா, நட்சத்திரம், ராசி லக்னம் எல்லாம் மாறும்!”
 
“மாறட்டும் கார்த்தி! ஆனா மாப்பிள்ளை மாறாம, ஜாதகம் மட்டும் மாறினா என்ன தப்பு? உங்க மனசு போல இருக்கறவங்க உங்கம்மானு சொன்னீங்க! உங்களுக்காக, உங்க சந்தோஷத்துக்காக இதைச் செய்ய மாட்டாங்களா?”
 
“நான் பேசிப்பாக்கறேன்!”
 
“ஏன் கார்த்தி? உங்களுக்கே இஷ்டமில்லையா?”
 
“எனக்கு ஜாதகத்துல நம்பிக்கையே இல்லைமா! சரி! அப்படியே இருந்தா, எந்த ஜோசியன் லஞ்சத்துக்கு மசிவான்?”
 
“ஆளைப் பிடிக்கலாம்! ஜோசியனை நாம பொய் சொல்லச் சொல்லலியே! ஜாதகம் தயாரிக்கணும், அவ்ளோதானே!”
 
“நான் எங்கம்மாகிட்டப் பேசறேன்! நாளைக்கு எனக்கு நீ போன் பண்ணு!”
 
பாரதி புறப்பட்டு நேராக மீனா வீட்டுக்கு வந்தாள்.
 
மீனா அவளுடன் வேலை பார்ப்பவள்! நெருங்கிய தோழி! கல்யாணம் ஆனவள் அபார்ஷன் ஆகி லீவில் இருப்பவள்!
 
மீனா மட்டும்தான் இருந்தாள்.
 
பாரதி எல்லாம் சொன்னாள்.
 
மீனா யோசிக்கத் தொடங்கினாள்.
Disponibile da: 03/02/2024.
Lunghezza di stampa: 86 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Mostra libro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Mostra libro
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Mostra libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Mostra libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Mostra libro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Mostra libro