Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
அந்தி மழை - cover

அந்தி மழை

தேவிபாலா

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

கிருஷ்ணா காலையில் முனகியபடி படுத்திருக்க, யமுனா பதறி விட்டாள்.“என்னம்மா?”“வழக்கமான இடுப்பு வலி! வெளில சாப்ட்டுக்கோ யமுனா! நீ புறப்படு!”“நீ பட்டினி கிடப்பியா?”“நான் கொஞ்சம் மெதுவா எழுந்து செஞ்சுபேன்! இதுக்கெல்லாம் உன் லீவை வீணாக்காதேம்மா! வலி அதிகமிருந்தா நான் போன் பண்றேன்!”“சரிம்மா!” யமுனா அரை மனதுடன் புறப்பட்டாள்!ஆபீஸ் வந்து அரைமணியில் சேர்மன் அழைத்து விட்டார். உள்ளே வந்து வணங்கினாள்!“ஒக்காரு யமுனா! சிகாகோலேருந்து இப்பத்தான் தகவல் வந்தது! ஒரு புது ப்ராஜெக்ட் தொடங்க உத்தரவு குடுத்திருக்காங்க! பெரிய ப்ராஜெக்ட்! பெரிய தொகை ஒதுக்கியிருக்காங்க! எடுத்துச் செய்ய திறமையான அதிகாரிகள் வேணும்!”“சரிங்க சார்!”“உன்னையும் சென்னைல உள்ள ரமணியையும் அலாட் பண்ணியிருக்காங்க!”“ரெண்டு பேரும் சிகாகோ போகணுமா?”“இல்லைம்மா! சென்னைலதான் இதுக்கான சூழ்நிலை, ராமெட்டீரியல் இன்னம் பல சங்கதிகள் சரியா வரும். ரமணி அங்கியே இருக்கார். நீதான் சென்னைக்குப் போகணும் யமுனா!”“எத்தனை நாள்?”“நாளெல்லாம் இல்லை! ப்ராஜெக்ட் முடிய குறைஞ்சபட்சம் மூணு வருஷங்கள் ஆகும்! அதனால சென்னைக்கு உனக்கு மாற்றல் தரவேண்டியிருக்கும்!”யமுனா முகம் மாறியது!“என்னம்மா?”“அதில்லை! போய்த்தான் ஆகணுமா?”“உங்கம்மாவோட போய்டு! உனக்கு கம்பெனி வீடு, கார் எல்லாம் தரும்! இப்பவே உன் சம்பளம் உயர்ந்தாச்சு! தவிர, இன்சென்டிவ், அதுஇதுன்னு லட்சரூபாய் தாண்டுவே! ப்ராஜெக்ட் பிரமாதமா கம்ப்ளீட் ஆயிட்டா, உன்னைப் பிடிக்க முடியாது!”அவள் பேசவில்லை!“நீ படிச்சு, வேலைக்கு வந்த வரைக்கும் ஆளானது இந்த மும்பைலதான்! ஆனாலும் அடிப்படைல நீ தமிழ்நாட்டுப் பெண்தானேமா!”“ஆமாம் சார்!”“இதை நீ வீட்ல சொன்னா, உங்கம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க! தமிழ் நாட்டு வாழ்க்கையை அந்த பூமில பிறந்தவங்க வேண்டாம்னு சொல்லுவாங்களா?”“இல்லை சார்!”“அடுத்த வாரமே நீ புறப்பட வேண்டி வரும்! இங்கே எல்லாம் தயாராயிடும்! அங்கே போனதும், கம்பெனி வீட்டுக்கே உன்னைக் கூட்டிட்டுப் போயிடுவாங்க! எந்தக் கஷ்டமும் இல்லை!”“சரிங்க சார்!”யமுனா வெளியே வந்தாள்!‘இந்த மாற்றம் நல்லதா? கெட்டதா?’‘அம்மா இதை எப்படி எடுத்துக் கொள்வாள்?நிறையக் கேள்விகள் வந்தது!அவசரமாக ஒதுக்கி விட்டு, மற்ற வேலைகளை கவனிக்கத் தொடங்கி விட்டாள்!புறப்படவே இரவு ஏழரை ஆகி விட்டது!அம்மா வழக்கம் போல போன்!“வந்துட்டே இருக்கேன்மா!”அரைமணி நேரத்தில் வீடு திரும்பி ஒரு குளியலை போட்டு, நைட்டி அணிந்து யமுனா வர, அம்மா சூடான சப்பாத்தி, சப்ஜியை தயார் செய்திருந்தாள்!“சாப்பிடும்மா!”“நீயும் ஒக்காரும்மா!”“இருக்கட்டும்! உனக்கு சூடா போட்டுத் தர்றேன்! பசிக்கும்! இன்னிக்கு வேலை அதிகமா? முகம் சோர்வா இருக்கே யமுனா?”யமுனா பதிலேதும் சொல்லவில்லை
Disponible depuis: 13/01/2024.
Longueur d'impression: 76 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Voir livre
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Voir livre
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre