Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
ஐஸ்கிரீம் கனவுகள் - cover

ஐஸ்கிரீம் கனவுகள்

தேவிபாலா

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

ஸ்கூட்டரை கல்லூரி வளாகத்தில் நிறுத்தி பூட்டி விட்டு, மரத்தடியில் வந்து நின்றான். 
 
கடந்து போன சக மாணவர்கள் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுப் போனார்கள். 
 
விஜய் மனதில் எதுவும் ஒட்டவில்லை! 
 
வாசலையே பார்த்தபடி இருந்தான். 
 
'ஏன் இன்னும் வரலை?' 
 
இனிமேல் வகுப்புக்குப் போகாமல் இங்கே நிற்பது சரியல்ல என்று தீர்மானித்து, நூலகத்துக்குள் நுழைந்தான். 
 
“விஜய்! க்ளாஸுக்கு வரலியா?” 
 
“கோட் நம்பர் கேட்டுட்டு, நான் வந்து அப்புறமா கம்ப்யூட்டர்ல போட்டுக்கறேன். எனக்குத் தெரியும்!”
 
அது கணிப்பொறி வகுப்பு! 
 
விஜய் கம்ப்யூட்டரில் கில்லாடி! மாஸ்டரே அசந்து போகுமளவுக்கு இயக்குவான். 
 
சுயமாக ப்ரோக்ராம் பிரமாதமாக அமைப்பான். 
 
ஓரிருவர் கேட்டுவிட்டுப் போய் விட்டார்கள். 
 
'இன்றைக்கு வரவில்லையா? என்ன பிரச்னை?’ 
 
புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டு, நிம்மதியில்லாமல் உட்கார்ந்திருந்தான். 
 
தோளில் மெல்லிய கை! 
 
திரும்பினான். 
 
மதுமிதா நின்று கொண்டிருந்தாள். 
 
“ஏன் இவ்ளோ நேரம்?” 
 
“வெளில வா! சொல்றேன். இங்கே வேண்டாம்!” 
 
இருவரும் வெளியே வந்தார்கள். விஜய் ஸ்கூட்டரைத் தள்ளிக்கொண்டு கேட்டைக் கடந்து விட்டான். மது சற்று இடைவெளி விட்டு வந்தாள். 
 
சாலைக்கு வந்ததும் ஸ்டார்ட் செய்தான். 
 
மது அவன் தோளில் படர்ந்து சுவாதீனமாக ஒட்டிக் கொள்ள வேகம் பிடித்தான். 
 
வழக்கமான அந்த ஐஸ்க்ரீம் பார்லருக்குள் இருவரும் உள்ளே நுழைந்தார்கள். 
 
“ஒரு பட்டர்ஸ்காட்ச்... ஒரு டீ!” பேரர் போய் விட, “சொல்லு மது!” 
 
“அக்கா பொண்ணு வயசுக்கு வந்துட்டா” 
 
“அய்! ஜாலிதான்!”
 
“உதைபடுவே விஜய் நீ!” 
 
“நீ ஏன் கோபப்படற? நாளைக்கு பரிசம் போடவா வர்றேன்னு சொன்னேன்? ஊர்ல தெரிஞ்ச பொண்ணுங்க வயசுக்கு வந்தா, நமக்கொரு சந்தோஷம்!” 
 
“கொழுப்பைப் பாரு!” 
 
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் வந்தது. மது ஆர்வத்துடன் சாப்பிடத் தொடங்கினாள். 
 
அவளும் அவனுடன் அதே எம்.சி.ஏ. வகுப்பில் படிப்பவள். 
 
அவனை விட மூன்று மாதங்களுக்கு இளையவள்! 
 
ஒரே இடத்தில் படித்தாலும், கடந்த ஏழெட்டு மாதங்களாகத்தான் நெருக்கம்! 
 
அது இப்போது காதலாக மலர்ந்து விட்டது. 
 
மது ஐஸ்க்ரீம் பைத்தியம்! 
 
விஜய்யின் பாக்கெட் மணி மொத்தமும் மதுவுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தந்தே தீர்ந்து போனது. 
 
சாப்பிட்டு முடித்தாள். 
 
“க்ளாஸுக்குப் போறியா விஜய்?” 
 
“நீ என்ன சொல்ற?” 
 
“ரிவிஷன்தான்! புதுசா எதுவும் இல்லை! படத்துக்குப் போகலாமா?”
 
“ஜாக்கிசான் படம் வந்திருக்கு மது!” 
 
“எனக்குப் பிடிக்கலை தமிழ்ப் படம் போகலாம். புதுசா ஒரு லவ் சப்ஜெக்ட் ஹிட் ஆகியிருக்காம்!” 
 
“உல்டா பண்ணியிருப்பான். லவ்வுல் புதுசா என்ன இருக்கு? எல்லாம் பழைய லவ்வுதான்!” 
 
“ஏன் விஜய் இப்படி இருக்கே?”
 
“சினிமால போய் நேரத்தை வீணடிச்சுகிட்டு? ரெண்டு பேரும் லவ்பண்றம். பிராக்டிகலா ஏதாவது செஞ்சாலும்...” 
 
“உன்னை...”: 
 
“அடப்போம்மா! நான் எதையோ சொன்னா, நீ வேற எதையோ நெனச்சுக்கறியா?” 
 
“யூ டர்ட்டிஃபெலோ” 
 
அவன் மார்பில் குத்தினாள். 
 
“பீச்சுக்குப் போகலாம் வா! கொஞ்ச நேரம் பேசலாம். உங்கக்கா பொண்ணு வயசுக்கு வந்த...” 
 
அவள் முறைக்க,  எழுந்து ஓடினான். 
Disponible depuis: 03/02/2024.
Longueur d'impression: 58 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Voir livre
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Voir livre
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Voir livre