Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
ஐஸ்கிரீம் கனவுகள் - cover

ஐஸ்கிரீம் கனவுகள்

தேவிபாலா

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

ஸ்கூட்டரை கல்லூரி வளாகத்தில் நிறுத்தி பூட்டி விட்டு, மரத்தடியில் வந்து நின்றான். 
 
கடந்து போன சக மாணவர்கள் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுப் போனார்கள். 
 
விஜய் மனதில் எதுவும் ஒட்டவில்லை! 
 
வாசலையே பார்த்தபடி இருந்தான். 
 
'ஏன் இன்னும் வரலை?' 
 
இனிமேல் வகுப்புக்குப் போகாமல் இங்கே நிற்பது சரியல்ல என்று தீர்மானித்து, நூலகத்துக்குள் நுழைந்தான். 
 
“விஜய்! க்ளாஸுக்கு வரலியா?” 
 
“கோட் நம்பர் கேட்டுட்டு, நான் வந்து அப்புறமா கம்ப்யூட்டர்ல போட்டுக்கறேன். எனக்குத் தெரியும்!”
 
அது கணிப்பொறி வகுப்பு! 
 
விஜய் கம்ப்யூட்டரில் கில்லாடி! மாஸ்டரே அசந்து போகுமளவுக்கு இயக்குவான். 
 
சுயமாக ப்ரோக்ராம் பிரமாதமாக அமைப்பான். 
 
ஓரிருவர் கேட்டுவிட்டுப் போய் விட்டார்கள். 
 
'இன்றைக்கு வரவில்லையா? என்ன பிரச்னை?’ 
 
புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டு, நிம்மதியில்லாமல் உட்கார்ந்திருந்தான். 
 
தோளில் மெல்லிய கை! 
 
திரும்பினான். 
 
மதுமிதா நின்று கொண்டிருந்தாள். 
 
“ஏன் இவ்ளோ நேரம்?” 
 
“வெளில வா! சொல்றேன். இங்கே வேண்டாம்!” 
 
இருவரும் வெளியே வந்தார்கள். விஜய் ஸ்கூட்டரைத் தள்ளிக்கொண்டு கேட்டைக் கடந்து விட்டான். மது சற்று இடைவெளி விட்டு வந்தாள். 
 
சாலைக்கு வந்ததும் ஸ்டார்ட் செய்தான். 
 
மது அவன் தோளில் படர்ந்து சுவாதீனமாக ஒட்டிக் கொள்ள வேகம் பிடித்தான். 
 
வழக்கமான அந்த ஐஸ்க்ரீம் பார்லருக்குள் இருவரும் உள்ளே நுழைந்தார்கள். 
 
“ஒரு பட்டர்ஸ்காட்ச்... ஒரு டீ!” பேரர் போய் விட, “சொல்லு மது!” 
 
“அக்கா பொண்ணு வயசுக்கு வந்துட்டா” 
 
“அய்! ஜாலிதான்!”
 
“உதைபடுவே விஜய் நீ!” 
 
“நீ ஏன் கோபப்படற? நாளைக்கு பரிசம் போடவா வர்றேன்னு சொன்னேன்? ஊர்ல தெரிஞ்ச பொண்ணுங்க வயசுக்கு வந்தா, நமக்கொரு சந்தோஷம்!” 
 
“கொழுப்பைப் பாரு!” 
 
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் வந்தது. மது ஆர்வத்துடன் சாப்பிடத் தொடங்கினாள். 
 
அவளும் அவனுடன் அதே எம்.சி.ஏ. வகுப்பில் படிப்பவள். 
 
அவனை விட மூன்று மாதங்களுக்கு இளையவள்! 
 
ஒரே இடத்தில் படித்தாலும், கடந்த ஏழெட்டு மாதங்களாகத்தான் நெருக்கம்! 
 
அது இப்போது காதலாக மலர்ந்து விட்டது. 
 
மது ஐஸ்க்ரீம் பைத்தியம்! 
 
விஜய்யின் பாக்கெட் மணி மொத்தமும் மதுவுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தந்தே தீர்ந்து போனது. 
 
சாப்பிட்டு முடித்தாள். 
 
“க்ளாஸுக்குப் போறியா விஜய்?” 
 
“நீ என்ன சொல்ற?” 
 
“ரிவிஷன்தான்! புதுசா எதுவும் இல்லை! படத்துக்குப் போகலாமா?”
 
“ஜாக்கிசான் படம் வந்திருக்கு மது!” 
 
“எனக்குப் பிடிக்கலை தமிழ்ப் படம் போகலாம். புதுசா ஒரு லவ் சப்ஜெக்ட் ஹிட் ஆகியிருக்காம்!” 
 
“உல்டா பண்ணியிருப்பான். லவ்வுல் புதுசா என்ன இருக்கு? எல்லாம் பழைய லவ்வுதான்!” 
 
“ஏன் விஜய் இப்படி இருக்கே?”
 
“சினிமால போய் நேரத்தை வீணடிச்சுகிட்டு? ரெண்டு பேரும் லவ்பண்றம். பிராக்டிகலா ஏதாவது செஞ்சாலும்...” 
 
“உன்னை...”: 
 
“அடப்போம்மா! நான் எதையோ சொன்னா, நீ வேற எதையோ நெனச்சுக்கறியா?” 
 
“யூ டர்ட்டிஃபெலோ” 
 
அவன் மார்பில் குத்தினாள். 
 
“பீச்சுக்குப் போகலாம் வா! கொஞ்ச நேரம் பேசலாம். உங்கக்கா பொண்ணு வயசுக்கு வந்த...” 
 
அவள் முறைக்க,  எழுந்து ஓடினான். 
Verfügbar seit: 03.02.2024.
Drucklänge: 58 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Zum Buch
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Zum Buch
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Zum Buch
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Zum Buch
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Zum Buch
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Zum Buch