Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
விரியும் மலர் நானுனக்கு - cover

விரியும் மலர் நானுனக்கு

தோழர் கா.கருமலையப்பன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

குடும்பத்தில் ஆடவர்கள் வேலைக்குச் சென்றால் அங்கே சண்டையோ சச்சரவோ வருவதில்லை. காலையில் எழுந்து வேலைக்குச் செல்லும் ஆண் பணி முடிந்து களைத்து வருகையில் பதமாய்க் கவனித்து உணவு பரிமாறி உண்டு உறங்கி, மறுநாள் மீண்டும் வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும் நேரம் சண்டை போடவோ குற்றம் குறை காணவோ பொழுதும் இருக்காது. அவசியமும் இருக்காது. பொருளாதாரச் சிக்கலும் வராது. ஆனால் இதுவே ஒரு குடும்பத் தலைவன் வேலைக்குச் செல்லாமல் இருந்துவிட்டால் அனைத்தும் தலைகீழாகி விடும். பிரச்சனைகளின் ஆணிவேர் பொருளாதாரம். அதாவது வருமானம் இல்லாமை. இந்த இல்லாமை எல்லாச் சங்கடத்தையும் வரவழைக்கும். 
 
பெரியசாமியும் இந்த ரகம்தான். உடல் உழைப்பில் அதிக நாட்டமும் ஆர்வமும் இல்லாதவர். வசதியாக இருந்தவரை உழைக்காமலேயே இருந்து பழகியதால் உடலும் வளைய மறுத்தது. குந்தித் தின்றால் குன்றும் குறையுமே. அப்படித்தான் பெரியசாமியின் சொத்துக்கள் விற்பனையாயின. சொத்துக்கள் போனபின் மனைவியின் நகைகள் காணாமல் போயின. இதில் லட்சுமியின் சம்மதமோ அபிப்பிராயமோ கேட்கப்படுவதில்லை. பிள்ளைகள் வளரும் வரை அவரைக் கேள்வி கேட்க ஆளில்லை. ஆனால் பிள்ளைகள் வளரும் போது, துணிமணி வாங்க அது இதென்று தேவை வரும்போது, பணப் பற்றாக்குறை பல சண்டைகளை விளைவித்தது. பெரியசாமி தொடங்கும் சண்டையை அவர்தான் முடித்தும் வைப்பார். ஒரே ஒரு வார்த்தை கேட்டு அனைவரின் வாயையும் அடைத்துவிடுவார். அதோடு அன்றைய போர் முடிவிற்கு வந்துவிடும் இன்றும் அதே முறையைக் கையில் எடுத்தார். 
 
“அப்போ உன் மாமனை நினைச்சுக்கிட்டுத்தான் கல்யாணம் வேண்டாம்னு தள்ளிப்போடுறியா? அவனைக் கட்டிக்கிட்டு என்ன செய்யப்போற நீ? எப்பவும் வயல்காடு, கரும்புத் தோட்டம்னு காடு கரையிலேயே பழியாக் கிடப்பவனை, ஒரு படிப்பறிவு இல்லாத முட்டாப்பயலைக் கட்டிக்கொண்டு கிணற்றடியிலும் மாட்டுத்தொழுவத்திலும் உன் காலத்தைக் கடத்தப் போகிறாயா? இதுக்கு நான் ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன். நான் பார்த்த மாப்பிள்ளையைக் கட்டிக்கொண்டால் அவர்களை வைத்தே மற்ற இரு பெண்களைக் கடத்தி விடுவேன். என் கனவில் மண்ணையள்ளிப் போட்டுவிடாதே. இந்தத் திருமணம் மட்டும் நடக்கவில்லையென்றால் நான் இதே உத்திரத்தில் கயிற்றில் தொங்கி விடுவேன். அப்புறம் தாயும் மகள்களுமாய் எவனைக் கட்டிக்கொண்டாலும் சரி!” - உச்ச ஸ்தாயியில் பெரியசாமி கத்த, “ஐயோ” - என வாயை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் லட்சுமி. 
 
பாரதி கண்களை இறுக மூடிக்கொண்டாள். அப்பா தனது பிரம்ம அஸ்திரத்தை எய்துவிட்டார். கயிற்றில் தொங்கிவிடுவேன் என்ற ஒற்றைச் சொல் போதும். அம்மாவும் இனிக் கெஞ்சி அழுவாள். பாவம், அம்மா! நம்மால் அழ வேண்டாம். இந்த அப்பாவும்தான் என்னென்ன பேசுகிறார். போயும் போயும் மாமா உடனா தன்னை இணைத்துப் பேச வேண்டும். அவர் எனக்கு இன்னொரு தகப்பன் ஆயிற்றே. எப்படிப் பார்த்தாலும் மாமாவிற்கு முப்பத்து ஐந்து வயதிற்கும் மேல் இருக்கும். அவரைப் போய்ச் சந்தேகப்படலாமா? தன் படிப்பிற்காகச் செலவு செய்வதும் புதிது புதிதாய் ஆடைகள் வாங்கித் தருவதும் தவிர தவறான பேச்சோ பார்வையோ இல்லாத மாமாவை எப்படி அப்பா இப்படிப் பேசலாம். இதுவரை ஒரு துணி எடுத்துத் தந்திருப்பாரா? ஒரு நோட்டு... புத்தகம்? ஏன் அம்மாவிற்கு ஒரு முழம் பூ கூட வாங்கித் தந்ததில்லையே. மாப்பிள்ளை மட்டும் யார் கேட்டது இவரிடம்? இதில் மிரட்டல் வேறு. வெறுப்பால் முகத்தைச் சுழித்தாள்
Available since: 02/03/2024.
Print length: 344 pages.

Other books that might interest you

  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Show book
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Show book