Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
உன்னைக் கரம் பிடித்தே - cover

உன்னைக் கரம் பிடித்தே

தோழர் கா.கருமலையப்பன்

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

கலைந்த தலையோடு சுவரோரமாய் அமர்ந்திருந்த தாயை நெருங்கினாள் மான்விழி. சாப்பாட்டுக் கூடையை ஓரமாய் வைத்துவிட்டு அன்னையின் கூந்தலை ஒதுக்கி விட்டாள். 
 
திடுக்கிட்டு நிமிர்ந்த பார்வதி மகளைக் கண்டு ஒதுங்கினாள். கைகளைத் தட்டிவிட்டு கோபமாய் எழுந்து கட்டிலில் அமர்ந்தாள். வேதனை படிந்த முகத்தோடு தாயை நெருங்கி அவளது கூந்தலை ஒதுக்கிப் பின்னலிட்ட மான்விழியின் கண்களில் நீர் சுரந்தது. 
 
கருகருவென இடைவரை நீண்டு அடர்த்தியாய் இருந்த அன்னையின் சுருள் கேசம் இப்போது நிறையக் கொட்டியிருந்தது. பாதிக்கு மேல் வெளுத்திருந்தது. 
 
எப்போதும் படிய வாரி தலையில் பூவோடு காட்சியளித்த கூந்தல் கலைந்து காற்றிலாடி சிக்கல் பிடித்துப் போயிருந்தது. மெதுவாய் வலிக்காமல் விரல்களால் கோதிப் பின்னலிட்டு முடித்தாள். 
 
“அம்மா! சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். சாப்பிடுறியாம்மா?” தாயின் முகத்தைப் பற்றியவாறே கேட்டாள் மான்விழி. கோபமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பார்வதி. 
 
“ஏம்மா! எம்மேல என்ன கோபம்?” 
 
“முதல்ல வெளியே போ. இங்க எதுக்காக வந்தே?” - முகத்தைக் கடுப்பாய் வைத்துக் கொண்டாள் பார்வதி. 
 
“அம்மா! நான் உம் பொண்ணும்மா!”
 
“இல்ல. எனக்கு யாரும் கிடையாது. நீ போ!”
 
“அம்மா! ஏம்மா இப்படிப் பேசுற? சாப்பிடும்மா.” 
 
“அதான் வேண்டாம்னு சொல்றேனில்ல. எம்மேல உனக்கு என்ன அக்கறை? நீ யாரு?” 
 
“நான் மானும்மா. உன் பொண்ணம்மா” - கண்ணீரோடு சொன்ன மகளை உற்றுப் பார்த்துவிட்டு, எதையோ சிந்தித்தாள். பிறகு மறுப்பாய் தலையை அசைத்தாள். 
 
“இல்ல. நீ எனக்கு ஊசி போடத்தான் வந்திருக்க. நான் கையைத் தரமாட்டேன். போ.” 
 
“இல்லம்மா... நான்...” 
 
“போடி வெளியே. ஏன் என்னை எல்லோருமா சேர்ந்து சித்திரவதை பண்றீங்க? போ. போயிடு. என்னைத் தனியா இருக்க விடு. போ.” - வெறி வந்தாற்போல் மகளைப் பிடித்துத் தள்ளினாள் பார்வதி. 
 
தடுமாறி விழப்போனவளை அப்போதுதான் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்த மருத்துவர் பிடித்துக் கொள்ள, கூடவே வந்த நர்ஸ் அதட்டினாள். 
 
“பார்வதிம்மா! என்ன பண்றீங்க? இவங்க உங்க பொண்ணு.” 
 
கோபமாய் நிமிர்ந்த பார்வதி வரிசையாய் ஆண் மருத்துவர்கள் வருவதைக் கண்டதும் புடவைத் தலைப்பால்  போர்த்திக் கொண்டு அமைதியாய் தரையில் அமர்ந்து கொண்டாள். 
 
“மிஸ் மான்விழி. ஆர் யூ ஓ.கே.” - கேட்ட மருத்துவரிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். 
 
“எனக்கு ஒண்ணும் இல்ல டாக்டர். அம்மா இன்னிக்கு ஏன் இவ்வளவு கோபமா இருக்காங்க டாக்டர்?” 
 
“காரணம் புரியல்ல. பட்! இன்னிக்கு மார்னிங் டாக்டர் ஷ்யாம் வந்தபிறகு செக்-அப் ரூமுக்கு கூட்டிட்டுப் போனோம். அப்போ இருந்தே இப்படித்தான் இருக்காங்க.” 
 
“புது டாக்டரா டாக்டர்?” 
 
“யா... மீட் மிஸ்டர் ஷ்யாம் ராகவ். நேற்று சொன்னேனே...” - என அருகே வந்து நின்ற இளம் மருத்துவரை அறிமுகப்படுத்தினார் டாக்டர் சுரேஷ். 
 
“வணக்கம் டாக்டர்.” 
 
“வணக்கம். நீங்கதான் இந்த அம்மாவோட பொண்ணா?” 
 
“ஆமா டாக்டர்.”
 
“கூட யாரும் வரவில்லையா?” 
 
“டாக்டர்...”
 
“வீட்ல பெரியவங்க யாரும் இல்லியா?” 
 
“இல்ல டாக்டர். அப்பா இல்ல. அண்ணன் மட்டும்  தான்.” 
 
see “அவரையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே!” 
 
“போன் பண்ணிட்டேன் டாக்டர். இப்ப வந்திடுவார். என்ன பாக்டர், எதுவும் பிரச்சனையா? அம்மாவை செக்-அப் பண்ணிட்டீங்களா?” 
 
“ம்... எல்லா டெஸ்ட்டும் பண்ணியாச்சு.” 
 
“டாக்டர்... அம்மாவுக்கு குணமாகிடுமில்ல?” - தயக்கமாய் ஆவலாய்க் கேட்ட பெண்ணைப் பார்த்துப் புன்னகைத்தான் ஷ்யாம். 
 
“உங்க அம்மாவுக்கு எந்த நோயும் இல்ல.”
 
“டாக்டர்?” 
 
“யெஸ்! மனசளவில் பாதிக்கப்பட்டிருக்காங்க. அவங்க மனசு விட்டுப் பேசிட்டாலே போதும். எல்லாம் சரியாகிடும்.” 
 
“டாக்டர்!” 
 
“நான் கேட்கிற கேள்விக்கு நீங்க முதல்ல பதில் சொல்லுங்க.” 
 
“கேளுங்க டாக்டர்!” 
 
“மார்னிங் நான் உங்க அம்மாவைப் பார்க்கும் போது ரொம்ப அமைதியா இருந்தாங்க. நல்லாப் பதில் சொன்னாங்க. செக்-அப் ரூம்ல உள்ள காலண்டரைப் பார்த்த பிறகுதான் அவங்க பார்வை, பேச்சு எல்லாமே மாறிப்போச்சு.” 
 
புருவம் சுருக்கினாள் மான்விழி
Verfügbar seit: 03.02.2024.
Drucklänge: 269 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Zum Buch
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Zum Buch
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Zum Buch
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Zum Buch
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Zum Buch
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Zum Buch