Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
உன்னைக் கரம் பிடித்தே - cover

உன்னைக் கரம் பிடித்தே

தோழர் கா.கருமலையப்பன்

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

கலைந்த தலையோடு சுவரோரமாய் அமர்ந்திருந்த தாயை நெருங்கினாள் மான்விழி. சாப்பாட்டுக் கூடையை ஓரமாய் வைத்துவிட்டு அன்னையின் கூந்தலை ஒதுக்கி விட்டாள். 
 
திடுக்கிட்டு நிமிர்ந்த பார்வதி மகளைக் கண்டு ஒதுங்கினாள். கைகளைத் தட்டிவிட்டு கோபமாய் எழுந்து கட்டிலில் அமர்ந்தாள். வேதனை படிந்த முகத்தோடு தாயை நெருங்கி அவளது கூந்தலை ஒதுக்கிப் பின்னலிட்ட மான்விழியின் கண்களில் நீர் சுரந்தது. 
 
கருகருவென இடைவரை நீண்டு அடர்த்தியாய் இருந்த அன்னையின் சுருள் கேசம் இப்போது நிறையக் கொட்டியிருந்தது. பாதிக்கு மேல் வெளுத்திருந்தது. 
 
எப்போதும் படிய வாரி தலையில் பூவோடு காட்சியளித்த கூந்தல் கலைந்து காற்றிலாடி சிக்கல் பிடித்துப் போயிருந்தது. மெதுவாய் வலிக்காமல் விரல்களால் கோதிப் பின்னலிட்டு முடித்தாள். 
 
“அம்மா! சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். சாப்பிடுறியாம்மா?” தாயின் முகத்தைப் பற்றியவாறே கேட்டாள் மான்விழி. கோபமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பார்வதி. 
 
“ஏம்மா! எம்மேல என்ன கோபம்?” 
 
“முதல்ல வெளியே போ. இங்க எதுக்காக வந்தே?” - முகத்தைக் கடுப்பாய் வைத்துக் கொண்டாள் பார்வதி. 
 
“அம்மா! நான் உம் பொண்ணும்மா!”
 
“இல்ல. எனக்கு யாரும் கிடையாது. நீ போ!”
 
“அம்மா! ஏம்மா இப்படிப் பேசுற? சாப்பிடும்மா.” 
 
“அதான் வேண்டாம்னு சொல்றேனில்ல. எம்மேல உனக்கு என்ன அக்கறை? நீ யாரு?” 
 
“நான் மானும்மா. உன் பொண்ணம்மா” - கண்ணீரோடு சொன்ன மகளை உற்றுப் பார்த்துவிட்டு, எதையோ சிந்தித்தாள். பிறகு மறுப்பாய் தலையை அசைத்தாள். 
 
“இல்ல. நீ எனக்கு ஊசி போடத்தான் வந்திருக்க. நான் கையைத் தரமாட்டேன். போ.” 
 
“இல்லம்மா... நான்...” 
 
“போடி வெளியே. ஏன் என்னை எல்லோருமா சேர்ந்து சித்திரவதை பண்றீங்க? போ. போயிடு. என்னைத் தனியா இருக்க விடு. போ.” - வெறி வந்தாற்போல் மகளைப் பிடித்துத் தள்ளினாள் பார்வதி. 
 
தடுமாறி விழப்போனவளை அப்போதுதான் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்த மருத்துவர் பிடித்துக் கொள்ள, கூடவே வந்த நர்ஸ் அதட்டினாள். 
 
“பார்வதிம்மா! என்ன பண்றீங்க? இவங்க உங்க பொண்ணு.” 
 
கோபமாய் நிமிர்ந்த பார்வதி வரிசையாய் ஆண் மருத்துவர்கள் வருவதைக் கண்டதும் புடவைத் தலைப்பால்  போர்த்திக் கொண்டு அமைதியாய் தரையில் அமர்ந்து கொண்டாள். 
 
“மிஸ் மான்விழி. ஆர் யூ ஓ.கே.” - கேட்ட மருத்துவரிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். 
 
“எனக்கு ஒண்ணும் இல்ல டாக்டர். அம்மா இன்னிக்கு ஏன் இவ்வளவு கோபமா இருக்காங்க டாக்டர்?” 
 
“காரணம் புரியல்ல. பட்! இன்னிக்கு மார்னிங் டாக்டர் ஷ்யாம் வந்தபிறகு செக்-அப் ரூமுக்கு கூட்டிட்டுப் போனோம். அப்போ இருந்தே இப்படித்தான் இருக்காங்க.” 
 
“புது டாக்டரா டாக்டர்?” 
 
“யா... மீட் மிஸ்டர் ஷ்யாம் ராகவ். நேற்று சொன்னேனே...” - என அருகே வந்து நின்ற இளம் மருத்துவரை அறிமுகப்படுத்தினார் டாக்டர் சுரேஷ். 
 
“வணக்கம் டாக்டர்.” 
 
“வணக்கம். நீங்கதான் இந்த அம்மாவோட பொண்ணா?” 
 
“ஆமா டாக்டர்.”
 
“கூட யாரும் வரவில்லையா?” 
 
“டாக்டர்...”
 
“வீட்ல பெரியவங்க யாரும் இல்லியா?” 
 
“இல்ல டாக்டர். அப்பா இல்ல. அண்ணன் மட்டும்  தான்.” 
 
see “அவரையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே!” 
 
“போன் பண்ணிட்டேன் டாக்டர். இப்ப வந்திடுவார். என்ன பாக்டர், எதுவும் பிரச்சனையா? அம்மாவை செக்-அப் பண்ணிட்டீங்களா?” 
 
“ம்... எல்லா டெஸ்ட்டும் பண்ணியாச்சு.” 
 
“டாக்டர்... அம்மாவுக்கு குணமாகிடுமில்ல?” - தயக்கமாய் ஆவலாய்க் கேட்ட பெண்ணைப் பார்த்துப் புன்னகைத்தான் ஷ்யாம். 
 
“உங்க அம்மாவுக்கு எந்த நோயும் இல்ல.”
 
“டாக்டர்?” 
 
“யெஸ்! மனசளவில் பாதிக்கப்பட்டிருக்காங்க. அவங்க மனசு விட்டுப் பேசிட்டாலே போதும். எல்லாம் சரியாகிடும்.” 
 
“டாக்டர்!” 
 
“நான் கேட்கிற கேள்விக்கு நீங்க முதல்ல பதில் சொல்லுங்க.” 
 
“கேளுங்க டாக்டர்!” 
 
“மார்னிங் நான் உங்க அம்மாவைப் பார்க்கும் போது ரொம்ப அமைதியா இருந்தாங்க. நல்லாப் பதில் சொன்னாங்க. செக்-அப் ரூம்ல உள்ள காலண்டரைப் பார்த்த பிறகுதான் அவங்க பார்வை, பேச்சு எல்லாமே மாறிப்போச்சு.” 
 
புருவம் சுருக்கினாள் மான்விழி
Verfügbar seit: 03.02.2024.
Drucklänge: 269 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Zum Buch
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Zum Buch
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Zum Buch
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Zum Buch
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Zum Buch