Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
பூவும் பொட்டும்! - cover

பூவும் பொட்டும்!

தோழர் கா.கருமலையப்பன்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

கெட்டி மேளம் முழங்க, மணமகளின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான் மணமகன். ஊரும் உறவும் அட்சதை தூவி வாழ்த்த, முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிவசங்கரியும் மனோகரும் தங்கள் கையில் இருந்த  அட்சதைகளைத் தூவினர்.
 
“கடவுளே! மணமக்கள் கடைசிவரை சந்தோஷமா வாழணும்.”
 
மனதிற்குள் வேண்டிக்கொண்டே, எழுந்து நின்றாள் சிவசங்கரி.
 
“மனோ! போலாமா?” 
 
“கிப்ட் கொடுக்கணுமே. வாக்கா, கொடுத்திட்டு வந்திடலாம்” - என்றவாறே மனோகரும் எழுந்து கொண்டான். 
 
“நானுமா? வேண்டாம், மனோ. நான் வெளியே வெயிட் பண்றேன். நீ போய்க் கொடுத்திட்டு வந்திடு.” 
 
“ஏங்க்கா?”
 
“ம்ப்ச்! வேண்டாம்னா விடு.” 
 
“சரி வா. பொண்ணோட அப்பா கையிலே கொடுத்துட்டுப் போகலாம்.” கையிலிருந்த பரிசுப் பொட்டலத்தோடு மனோகர் நகர, தனது பட்டுப் புடவையை நீவிவிட்டுக் கொண்டவாறே தம்பியைப் பின் தொடர்ந்தாள் சிவசங்கரி.
 
அக்காள் தம்பி இருவரும் மருத்துவர்கள். சிவசங்கரி, பெண்கள் நலச் சிறப்பு மருத்துவர். மேலும் சர்க்கரை வியாதிக்கான ஆராய்ச்சிப் படிப்பைப் படித்துக் கொண்டிருப்பவள்.
 
மனோகர் குழந்தைகள் நல மருத்துவர். இளம் வயதிலேயே கைராசியான மருத்துவர் என்ற பட்டம் பெற்றவன். புன்னகையும் கனிவான பேச்சும் இவனது ப்ளஸ் பாயிண்ட்.  சிவசங்கரி, தனது மயில் கழுத்து நிறப் பட்டுப் புடவையைக் குனிந்து சரி செய்துகொண்டே வர, எதிரே வந்தவன் மீது மோதி நின்றாள். 
 
“ஐயாம் ஸோ ஸாரி.” - பதட்டமாய்க் கேட்டவாறே நிமிர்ந்தவளின் முகம் கருத்தது. எதிரே புன்னகையோடு நின்றிருந்தான் டாக்டர் பிரபாகர்.
 
“இவனா? இங்கேயா? ச்சே! இவன் முகத்தில் விழிக்கும்படி ஆயிற்றே!” - கடுப்பாய் விலகி நடக்க முயன்றவளைப் பிரபாகரின் குரல் தடுத்து நிறுத்தியது.
 
“ஹாய் சங்கரி! எப்படி இருக்கே?” - கேட்டவனை ஆத்திரமாய் முறைத்துவிட்டு விலகிச் சென்றாள். 
 
“இடியட்! எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேசுகிறான். நான்சென்ஸ்!” - முனகியவாறே வந்த சகோதரியைத் திரும்பிப் பார்த்தான் தம்பி. 
 
“அக்கா! என்னாச்சு?”
 
“ஒன்னுமில்ல...”
 
“இல்ல... ஏதோ இருக்கு. இப்ப யாரைத் திட்டினே?”
 
“ம்... அந்த இடியட்டைத்தான்.” - கடுப்பாய்ச் சொன்னாள். 
 
“எந்த இடியட்டை?”
 
“அதான்... அந்தப் பிரபாகர்.”
 
“அட! பிரபாகர்கூட மேரேஜுக்கு வந்திருக்காரா? நான் பார்க்கலியே!”
 
“நீ வேற கடுப்பேத்தாதே.” 
 
“நீ ஏங்க்கா டென்ஷனாகுறே. இது நம்ம சக டாக்டர் வீட்டுக் கல்யாணம். பிரபாகர் அவர் வீட்டுக்கு வர்றதுல உனக்கு என்ன கோபம்?”
 
“கல்யாணத்துக்கு வந்தவன் எங்கிட்ட ஏன் பேசணும்?”
 
“என்னக்கா நீ? உன்னோட க்ரூப் ஸ்டூடண்ட். ஒரே ஹாஸ்பிடல்ல வேலை செய்திருக்கீங்க. அந்தப் பழக்கத்தில பேசியிருக்கலாம்.” 
 
“புரியாமப் பேசாதடா. அவனைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல்ல.” - சிவசங்கரியின் குரலில் தொனித்த வெறுப்பு, அவனை மேலே பேசவிடாமல் தடுத்தது.
 
அமைதியாகச் சென்றவன், மணப் பெண்ணின் தகப்பனாரைக் கண்டதும் நின்றான். முகமலர்ச்சியோடு  அவர்களை நெருங்கினார் பத்ரிநாத். 
 
“வாங்க. சாப்பிட்டீங்களா?”
 
“இல்ல. ஹாஸ்பிடல்ல கொஞ்சம் வேலை இருக்கு. கிளம்பறோம்.”
 
“என்ன மனோ நீங்க? நமக்கு என்னிக்குத்தான் வேலை இல்ல. இன்னிக்குக் கண்டிப்பாச் சாப்பிட்டுட்டுத்தான் போகணும். வாங்க என்கூட.” - கைப்பற்றி அழைத்தவரிடம் நாசூக்காக மறுத்தாள் சிவசங்கரி.
Disponible depuis: 03/02/2024.
Longueur d'impression: 228 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Voir livre
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Voir livre