Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
நினைக்காத நேரமில்லை! - cover

நினைக்காத நேரமில்லை!

தோழர் கா.கருமலையப்பன்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

“அக்கா!” - கொஞ்சலாய் அழைத்தாள் மீரா. பரிட்சை பேப்பர் திருத்திக் கொண்டிருந்த ராதா தலையை நிமிர்த்தாமலே “ம்...!” என்றாள். இரண்டு வருடம் முன்னே பின்னே என்று பிறந்திருந்தாலும் உருவ ஒற்றுமை அச்சு அசலாய் ஒரே போல் அமைந்திருந்தது. 
 
ராதாவிற்கு அலை அலையாய்ச் சுருள் கேசம். மீராவுக்குத் தளர்வாய்ப் பட்டுக் கூந்தல். “அம்மா திணறக்கூடாதுன்னுதான் அப்பாவோட சுருள் முடியை ராதா வாங்கிண்டு வந்திருக்கா!” தலைவாரி விடும் போதெல்லாம் 
 
அம்மா சொல்லும் வார்த்தை இது. “ஹும்... அதுதான். எனக்குப் பெரிய தலைவலியாய்ப் போச்சி... இல்லேன்னா நான் எது செய்தாலும் அக்காமேல பழியைப் போட்டுட்டு தப்பிச்சிக்கலாம். உங்களாலயும் கண்டுபிடிக்க முடியாது!” வருத்தமான குரலில் மீரா சொல்ல, அம்மா முதுகில் பட்டெனப் போடுவாள். 
 
“எத்தனை குழந்தைங்க ஒரே மாதிரி இருந்தாலும் தாய் தன் குழந்தைகளைச் சரியா கண்டுபிடிச்சிடுவா. அதுவும் உன்னைக் கண்டுபிடிக்க பெரிய திறமை எதுவும் வேணாம். இந்த ஓட்டை வாயே போதும். ஒரு நேரமாவது வாயை மூடிக்கொண்டு இருக்கிறாயா? உன்னோடு பிறந்தவள்தானே இவளும்... இவ பேசுறது வீட்டை விட்டு வெளியே கேக்குதா! நீ பேசினா தெருவில நின்னாலே கேக்குது.” 
 
“போங்கம்மா! வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும். ஊமையா இருந்தா தலையில மொளகா அரைச்சிடுவாங்க. ஏய் ராதா! நீ ஊமைக் கோட்டானா இருக்கிறதுக்கும் எனக்குத்தானேடி திட்டு விழுது. வாயைத் திறந்து பேசேன்!” ராதாவிடம் சீறுவாள் மீரா. 
 
“அடிக்கழுதை! அவளை ஏன்டி மிரட்டுற. ஒரு வாயாடி போதாதா...! அவளாவது அமைதியா அடக்கமா இருக்கட்டும். அப்போதான்டி புகுந்த வீட்ல போய் நல்லா குடும்பம் நடத்த முடியும். நீயும் வாயைக் குறைச்சு அமைதியாக வாழப் பழகிக்கோ. அப்பத்தான் வாழ்க்கை நல்லா அமையும்.” 
 
அம்மா சொன்னது போல் நடக்கவில்லையே... அமைதியாகவே இருந்த ராதா எதைச் சாதித்தாள்? எல்லாவற்றையும் இழக்கத்தானே செய்தாள். ஜன்னல் வழியாக வந்த தென்றல் ராதாவின் கூந்தலைக் கலைத்துச் சென்றது. தலை பின்னிக் கூந்தலோடு பூவும் சூடாமல் அக்கா இருந்ததே இல்லை எனலாம். படிக்கும்போதே கிளம்பிப் போகும் அவசரத்தில் ஒற்றை ரோஜாவைப் பறித்துக் காதோரமாய்ச் செருகிவிட்டுப் போவாள் மீரா. ராதா அப்படி அல்ல... காலையில் எழுந்து முற்றத்தில் படர விட்டிருக்கும் ஜாதியையும், முல்லையையும், மல்லிகை யையும் பறித்துப் பொறுமையாக அவற்றைக் கட்டிச் சாமி படங்களுக்குப் போட்டுவிட்டு அம்மா தலையில் துளி சூட்டிவிட்டு, தனது கூந்தலில் அம்சமாய் வைத்துக்கொண்டுதான் செல்வாள். 
 
“ராதா! இந்த யெல்லோ புடவைக்கு மேட்சாய் இந்த யெல்லோ ரோஸ் வெச்சிட்டுப் போயேன்!” எனும் மீராவிடம் புன்னகையாலே மறுத்துவிடுவாள். “வாசனை இல்லாத பூ எதுக்கு மீரா? அதெல்லாம் அழகுக்கு வளர்க்கலாம். ஆனா மல்லிகைப்பூ வெச்சாத்தான் தலையும் மணக்கும். அந்தப் பூவுக்கும் பெருமை!” என்று சொல்வாள். 
 
இன்று அந்தப் பூக்கள் எல்லாம் மாலையில் மலர்ந்து மறுநாள் வீணே உதிர்ந்து போகின்றன. உதிரும் முன் ராதாவிற்குத் தங்கள் வாசனையை ஜன்னல் வழியே வாரி வழங்கி விடுகின்றன. அதனாலேயே இரவு மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பாள் ராதா. நிலவொளியும் மல்லிகை மணமும் பூந்தென்றல் காற்றும் அவள் காதோடு ஆயிரம் கவிதைகள் சொல்லும். தன்னை மறந்து அதில் லயித்துப் போய் விடுவாள். இன்று அந்த ரசனைகள் அனைத்தும் இந்த மலர்களைப் போல் வாடி உதிர்ந்து விட்டனவோ! 
 
“என்னடி! கூப்பிட்டு அரைமணி நேரமாச்சு. ஒன்னும் சொல்லாம இருக்கே!” பேப்பரை மடித்து மார்க் போட்டவாறே கேட்டாள் ராதா. 
 
“ம்! ஆமாம், கூப்பிட்டேன் இல்ல? அக்கா! காலையில சீதாராமன் மாமா வந்திடுவாரு. நான் போகட்டுமா... இல்லை போக வேண்டாமா?” கேட்டவளைத் திரும்பிப் பார்த்தாள் ராதா. அவளது கண்கள் கட்டிலின் மீதிருந்த சூட்கேஸ் மீது சென்று மீண்டும் தங்கையின் முகத்தில் வந்து நின்றன. பின் அமைதியாக அடுத்த பேப்பரைப் பிரித்துத் திருத்த 
 
ஆரம்பித்தாள். 
 
“இப்படி ஒண்ணும் பேசாம இருந்தா நான் எப்படி போறதாம். ஒண்ணு போன்னு சொல்லு... இல்லேன்னா போயிட்டு வான்னு சொல்லு...!” வேகமாகத் தொடங்கியவள் தமக்கையின் பார்வையால் அடங்கினாள். 
Disponible depuis: 03/02/2024.
Longueur d'impression: 154 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Voir livre
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Voir livre
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Voir livre
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Voir livre