Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
நினைக்காத நேரமில்லை! - cover

நினைக்காத நேரமில்லை!

தோழர் கா.கருமலையப்பன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

“அக்கா!” - கொஞ்சலாய் அழைத்தாள் மீரா. பரிட்சை பேப்பர் திருத்திக் கொண்டிருந்த ராதா தலையை நிமிர்த்தாமலே “ம்...!” என்றாள். இரண்டு வருடம் முன்னே பின்னே என்று பிறந்திருந்தாலும் உருவ ஒற்றுமை அச்சு அசலாய் ஒரே போல் அமைந்திருந்தது. 
 
ராதாவிற்கு அலை அலையாய்ச் சுருள் கேசம். மீராவுக்குத் தளர்வாய்ப் பட்டுக் கூந்தல். “அம்மா திணறக்கூடாதுன்னுதான் அப்பாவோட சுருள் முடியை ராதா வாங்கிண்டு வந்திருக்கா!” தலைவாரி விடும் போதெல்லாம் 
 
அம்மா சொல்லும் வார்த்தை இது. “ஹும்... அதுதான். எனக்குப் பெரிய தலைவலியாய்ப் போச்சி... இல்லேன்னா நான் எது செய்தாலும் அக்காமேல பழியைப் போட்டுட்டு தப்பிச்சிக்கலாம். உங்களாலயும் கண்டுபிடிக்க முடியாது!” வருத்தமான குரலில் மீரா சொல்ல, அம்மா முதுகில் பட்டெனப் போடுவாள். 
 
“எத்தனை குழந்தைங்க ஒரே மாதிரி இருந்தாலும் தாய் தன் குழந்தைகளைச் சரியா கண்டுபிடிச்சிடுவா. அதுவும் உன்னைக் கண்டுபிடிக்க பெரிய திறமை எதுவும் வேணாம். இந்த ஓட்டை வாயே போதும். ஒரு நேரமாவது வாயை மூடிக்கொண்டு இருக்கிறாயா? உன்னோடு பிறந்தவள்தானே இவளும்... இவ பேசுறது வீட்டை விட்டு வெளியே கேக்குதா! நீ பேசினா தெருவில நின்னாலே கேக்குது.” 
 
“போங்கம்மா! வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும். ஊமையா இருந்தா தலையில மொளகா அரைச்சிடுவாங்க. ஏய் ராதா! நீ ஊமைக் கோட்டானா இருக்கிறதுக்கும் எனக்குத்தானேடி திட்டு விழுது. வாயைத் திறந்து பேசேன்!” ராதாவிடம் சீறுவாள் மீரா. 
 
“அடிக்கழுதை! அவளை ஏன்டி மிரட்டுற. ஒரு வாயாடி போதாதா...! அவளாவது அமைதியா அடக்கமா இருக்கட்டும். அப்போதான்டி புகுந்த வீட்ல போய் நல்லா குடும்பம் நடத்த முடியும். நீயும் வாயைக் குறைச்சு அமைதியாக வாழப் பழகிக்கோ. அப்பத்தான் வாழ்க்கை நல்லா அமையும்.” 
 
அம்மா சொன்னது போல் நடக்கவில்லையே... அமைதியாகவே இருந்த ராதா எதைச் சாதித்தாள்? எல்லாவற்றையும் இழக்கத்தானே செய்தாள். ஜன்னல் வழியாக வந்த தென்றல் ராதாவின் கூந்தலைக் கலைத்துச் சென்றது. தலை பின்னிக் கூந்தலோடு பூவும் சூடாமல் அக்கா இருந்ததே இல்லை எனலாம். படிக்கும்போதே கிளம்பிப் போகும் அவசரத்தில் ஒற்றை ரோஜாவைப் பறித்துக் காதோரமாய்ச் செருகிவிட்டுப் போவாள் மீரா. ராதா அப்படி அல்ல... காலையில் எழுந்து முற்றத்தில் படர விட்டிருக்கும் ஜாதியையும், முல்லையையும், மல்லிகை யையும் பறித்துப் பொறுமையாக அவற்றைக் கட்டிச் சாமி படங்களுக்குப் போட்டுவிட்டு அம்மா தலையில் துளி சூட்டிவிட்டு, தனது கூந்தலில் அம்சமாய் வைத்துக்கொண்டுதான் செல்வாள். 
 
“ராதா! இந்த யெல்லோ புடவைக்கு மேட்சாய் இந்த யெல்லோ ரோஸ் வெச்சிட்டுப் போயேன்!” எனும் மீராவிடம் புன்னகையாலே மறுத்துவிடுவாள். “வாசனை இல்லாத பூ எதுக்கு மீரா? அதெல்லாம் அழகுக்கு வளர்க்கலாம். ஆனா மல்லிகைப்பூ வெச்சாத்தான் தலையும் மணக்கும். அந்தப் பூவுக்கும் பெருமை!” என்று சொல்வாள். 
 
இன்று அந்தப் பூக்கள் எல்லாம் மாலையில் மலர்ந்து மறுநாள் வீணே உதிர்ந்து போகின்றன. உதிரும் முன் ராதாவிற்குத் தங்கள் வாசனையை ஜன்னல் வழியே வாரி வழங்கி விடுகின்றன. அதனாலேயே இரவு மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பாள் ராதா. நிலவொளியும் மல்லிகை மணமும் பூந்தென்றல் காற்றும் அவள் காதோடு ஆயிரம் கவிதைகள் சொல்லும். தன்னை மறந்து அதில் லயித்துப் போய் விடுவாள். இன்று அந்த ரசனைகள் அனைத்தும் இந்த மலர்களைப் போல் வாடி உதிர்ந்து விட்டனவோ! 
 
“என்னடி! கூப்பிட்டு அரைமணி நேரமாச்சு. ஒன்னும் சொல்லாம இருக்கே!” பேப்பரை மடித்து மார்க் போட்டவாறே கேட்டாள் ராதா. 
 
“ம்! ஆமாம், கூப்பிட்டேன் இல்ல? அக்கா! காலையில சீதாராமன் மாமா வந்திடுவாரு. நான் போகட்டுமா... இல்லை போக வேண்டாமா?” கேட்டவளைத் திரும்பிப் பார்த்தாள் ராதா. அவளது கண்கள் கட்டிலின் மீதிருந்த சூட்கேஸ் மீது சென்று மீண்டும் தங்கையின் முகத்தில் வந்து நின்றன. பின் அமைதியாக அடுத்த பேப்பரைப் பிரித்துத் திருத்த 
 
ஆரம்பித்தாள். 
 
“இப்படி ஒண்ணும் பேசாம இருந்தா நான் எப்படி போறதாம். ஒண்ணு போன்னு சொல்லு... இல்லேன்னா போயிட்டு வான்னு சொல்லு...!” வேகமாகத் தொடங்கியவள் தமக்கையின் பார்வையால் அடங்கினாள். 
Available since: 02/03/2024.
Print length: 154 pages.

Other books that might interest you

  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Show book
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Show book
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Show book
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Show book
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Show book
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Show book