Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
இமையாக நானிருப்பேன்… - cover
LER

இமையாக நானிருப்பேன்…

தோழர் கா.கருமலையப்பன்

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

பீடியை வீசியெறிந்தான் அவன். “எவன் வீட்டில இழவு விழுந்ததுன்னு இம்மாங்கூட்டம். எம்மா நேரம் வெயில்ல கிடக்கிறது. ந்தா... அந்தச் சனியன் ஏன் இப்படி உயிர் போறாப்போல கத்துது? கல்லு மாதிரி நிக்கிறியே... பால் பாட்டிலை எடுத்துக் குடேன்...” - என்றான். 
 
சாராய வாடை குமட்டிக்கொண்டு வந்தது வெண்ணிலாவுக்கு. 
 
பழக்கமற்ற இரைச்சல். குழந்தையின் அழுகை. வாகன நெரிசல். சுட்டெரிக்கும் வெயில்... எல்லாவற்றுக்கும் மேலாக மாமனின் சாராய நாற்றம். பதில் பேச மனமின்றித் தோளிலிருந்து வழுக்கிக்கொண்டிருந்த குழந்தையை வியர்வை வழியும் கையோடு தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள். 
 
குழந்தை திமிறிக்கொண்டு வீறிட்டது. அப்போதுதான் அவள் அருகே அந்தக் கம்பீரமான ஆண் குரல் கேட்டது.
 
“எக்ஸ்கியூஸ் மீ!” என்றான் சந்துரு. 
 
தனக்கு வெகு அருகே கேட்ட குரலில் திரும்பினாள் வெண்ணிலா. அவளைத் தொடர்ந்து குருசாமியும் திரும்பினான். “யாரு?” என்றான் அதட்டும் குரலில். 
 
சந்துரு அமைதியாய், “ஸார்! வெயில் இப்படிக் கொதிக்குதே... கைக் குழந்தையோட இப்படிக் கஷ்டப்படுறாங்களே... இதுதான் என்னோட கார். ஏ.சி. கார். டிராஃபிக் குறையுற வரைக்கும் என் கார்லே வேணா உட்காருங்களேன். பாவம்... இந்த வெயிலைக் குழந்தையும் எப்படித் தாங்கும்? செருப்புகூட இல்லாம நிக்கிறாங்களே... ப்ளீஸ் ஸார்! கார்ல உட்கார்ந்துக்குங்க...” என்றான். 
 
குருசாமியின் கண்கள் இரத்தச் சிவப்பாய் மாறிவிட... வெண்ணிலாவைப் பார்த்தான். அவள் முகம் வெளிறி நடுங்கினாள். எச்சில் விழுங்கியவாறே பயமாய்ப் பார்த்தாள். 
 
“யாருடி இவன்?” - சிங்கத்தின் சீற்றம் தெரிந்த அவன் குரலில் நடுநடுங்கிப் போனாள் வெண்ணிலா. 
 
“மாமா... தெரியாது மாமா. இவர் யாருன்னே தெரியாது மாமா!” - சொல்லும்போதே கண்ணில் நீர் நிறைந்தது. 
 
சந்துருவின் முகம் குழப்பம் அடைந்தது.
 
'என்ன கேட்கிறான், இவன்?' 
 
“எனக்குத் தெரிஞ்சு போச்சுடி. இவராம் இவர்... உன் இவருக்கு நீ வெறும் காலோட நிக்கிறதைப் பார்க்க முடியலியாமே... ஏன்டி இவனை நினைச்சுட்டுத்தான் என்னை வேண்டாமின்னியா? 
 
அதுவும் சரிதான். ஏ.சி. கார் வைச்சிருக்கிறவனை விட்டுட்டு வாடகை ரிக்ஷா ஓட்டுபவனைக் கட்டிக்க மனசு வருமா என்ன? ஆளும் பார்க்க ஷோக்காத்தான் இருக்கான். எத்தினி நாள் பழக்கம் இது? கேட்கறனில்ல... சொல்லுடி!” - குருசாமியின் அதட்டலில் அழுதேவிட்டாள். 
 
“ஐயோ! இல்லை மாமா... சத்தியமா இவர் யாருன்னே - தெரியாது. என்னை நம்புங்க மாமா!” - என்றவளின் கண்ணீர் தன்னைச் சுட வெகுண்டு எழுந்தான் சந்துரு. 
 
சட்டெனக் குருசாமியின் சட்டையைக் கொத்தாகப் பற்றினான்.
Disponível desde: 03/02/2024.
Comprimento de impressão: 163 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver livro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver livro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver livro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Ver livro