Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
இமையாக நானிருப்பேன்… - cover

இமையாக நானிருப்பேன்…

தோழர் கா.கருமலையப்பன்

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

பீடியை வீசியெறிந்தான் அவன். “எவன் வீட்டில இழவு விழுந்ததுன்னு இம்மாங்கூட்டம். எம்மா நேரம் வெயில்ல கிடக்கிறது. ந்தா... அந்தச் சனியன் ஏன் இப்படி உயிர் போறாப்போல கத்துது? கல்லு மாதிரி நிக்கிறியே... பால் பாட்டிலை எடுத்துக் குடேன்...” - என்றான். 
 
சாராய வாடை குமட்டிக்கொண்டு வந்தது வெண்ணிலாவுக்கு. 
 
பழக்கமற்ற இரைச்சல். குழந்தையின் அழுகை. வாகன நெரிசல். சுட்டெரிக்கும் வெயில்... எல்லாவற்றுக்கும் மேலாக மாமனின் சாராய நாற்றம். பதில் பேச மனமின்றித் தோளிலிருந்து வழுக்கிக்கொண்டிருந்த குழந்தையை வியர்வை வழியும் கையோடு தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள். 
 
குழந்தை திமிறிக்கொண்டு வீறிட்டது. அப்போதுதான் அவள் அருகே அந்தக் கம்பீரமான ஆண் குரல் கேட்டது.
 
“எக்ஸ்கியூஸ் மீ!” என்றான் சந்துரு. 
 
தனக்கு வெகு அருகே கேட்ட குரலில் திரும்பினாள் வெண்ணிலா. அவளைத் தொடர்ந்து குருசாமியும் திரும்பினான். “யாரு?” என்றான் அதட்டும் குரலில். 
 
சந்துரு அமைதியாய், “ஸார்! வெயில் இப்படிக் கொதிக்குதே... கைக் குழந்தையோட இப்படிக் கஷ்டப்படுறாங்களே... இதுதான் என்னோட கார். ஏ.சி. கார். டிராஃபிக் குறையுற வரைக்கும் என் கார்லே வேணா உட்காருங்களேன். பாவம்... இந்த வெயிலைக் குழந்தையும் எப்படித் தாங்கும்? செருப்புகூட இல்லாம நிக்கிறாங்களே... ப்ளீஸ் ஸார்! கார்ல உட்கார்ந்துக்குங்க...” என்றான். 
 
குருசாமியின் கண்கள் இரத்தச் சிவப்பாய் மாறிவிட... வெண்ணிலாவைப் பார்த்தான். அவள் முகம் வெளிறி நடுங்கினாள். எச்சில் விழுங்கியவாறே பயமாய்ப் பார்த்தாள். 
 
“யாருடி இவன்?” - சிங்கத்தின் சீற்றம் தெரிந்த அவன் குரலில் நடுநடுங்கிப் போனாள் வெண்ணிலா. 
 
“மாமா... தெரியாது மாமா. இவர் யாருன்னே தெரியாது மாமா!” - சொல்லும்போதே கண்ணில் நீர் நிறைந்தது. 
 
சந்துருவின் முகம் குழப்பம் அடைந்தது.
 
'என்ன கேட்கிறான், இவன்?' 
 
“எனக்குத் தெரிஞ்சு போச்சுடி. இவராம் இவர்... உன் இவருக்கு நீ வெறும் காலோட நிக்கிறதைப் பார்க்க முடியலியாமே... ஏன்டி இவனை நினைச்சுட்டுத்தான் என்னை வேண்டாமின்னியா? 
 
அதுவும் சரிதான். ஏ.சி. கார் வைச்சிருக்கிறவனை விட்டுட்டு வாடகை ரிக்ஷா ஓட்டுபவனைக் கட்டிக்க மனசு வருமா என்ன? ஆளும் பார்க்க ஷோக்காத்தான் இருக்கான். எத்தினி நாள் பழக்கம் இது? கேட்கறனில்ல... சொல்லுடி!” - குருசாமியின் அதட்டலில் அழுதேவிட்டாள். 
 
“ஐயோ! இல்லை மாமா... சத்தியமா இவர் யாருன்னே - தெரியாது. என்னை நம்புங்க மாமா!” - என்றவளின் கண்ணீர் தன்னைச் சுட வெகுண்டு எழுந்தான் சந்துரு. 
 
சட்டெனக் குருசாமியின் சட்டையைக் கொத்தாகப் பற்றினான்.
Disponibile da: 03/02/2024.
Lunghezza di stampa: 163 pagine.

Altri libri che potrebbero interessarti

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Mostra libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Mostra libro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Mostra libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Mostra libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Mostra libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Mostra libro