Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
எனக்கு உண்மை பேசுவது பிடிக்கும் I Love to Tell the Truth - cover

எனக்கு உண்மை பேசுவது பிடிக்கும் I Love to Tell the Truth

Shelley Admont, KidKiddos Books

Verlag: KidKiddos Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

ஜிம்மி என்ற குட்டி முயல் சிக்கலில் மாட்டிக்கொண்டது. தற்செயலாக, அது தனது தாய்க்கு பிடித்த பூக்களை சிதைத்து விட்டது. பொய் சொல்வது உதவி செய்யுமா? அல்லது உண்மையைச் சொல்லி பிரச்சனையை வேறு விதமாகத் தீர்க்க முயல்வது நல்லதா?இந்த வேடிக்கையான, குழந்தைகளுக்கான புத்தகத்தினூடாக இன்னும் நேர்மையாக இருப்பதற்கு உங்கள் குழந்தைகளுக்கு உதவுங்கள்.
Verfügbar seit: 29.05.2024.
Drucklänge: 34 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Valmiki Ramayanam Part 3 - Aaranya Kandam - cover

    Valmiki Ramayanam Part 3 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    ஆரண்ய காண்டத்தில், சித்ரகூடத்தை விட்டு ராமர் சென்று வனத்துக்குள் தொடர்ந்து பயணிப்பது, விராதன் எனும் ராட்சசனை வதம் செய்வது, தவத்தால் பழுத்த பல ரிஷிகளையும்  சந்திப்பது, அகஸ்திய முனிவரை தரிசிப்பது, அவர் ஆலோசனைப்படி பஞ்சவடியில் சென்று வாழ்வது, அங்கே வந்து தகாது நடந்து கொண்ட சூர்ப்பனகையை லக்ஷ்மணன் தண்டிப்பது, அதன் பலனாய் கர தூஷணர்கள் வந்து ராமருடன் போர் செய்வது, அவர்களை ராமர் வதம் செய்வது, சீதையின் அழகைப்பற்றி சூர்பனகையிடமிருந்து கேட்ட ராவணன், மாரீச மானின் உதவியுடன் சீதையைக் கவர்ந்து செல்வது, , சீதையை இழந்த ராமர் அளவிலா துக்கத்தில் ஆட்படுவது, கழுகு ஜடாயு சீதைக்கு உதவ முயன்று ராவணனால் வெட்டுப் பட்டு சாவது, ராவணன் சீதையை இலங்கைக்குக் கொண்டு சென்று சிறை செய்வது, ராமர் கபந்தன் எனும் ராட்சசனை வதம் செய்வது, வானரன் சுக்ரீவனைத் தேடி பம்பா ஏரிக்கு செல்வது, அங்கே சபரிக்கு அருள் செய்வது, ருஷ்ய சிருங்க மலையயை நாடிச் செல்வது – ஆகியவை இடம் பெறுகின்றன.
    Zum Buch
  • Ayndhaavadhu Marundhu - cover

    Ayndhaavadhu Marundhu

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை சித்தரிக்கும் ஒரு சிறுகதை . இவ்விரு ஆற்றல்களுக்கும் இடையே இருந்தாக வேண்டிய இன்றியமையாத ஒத்திசைவை சற்றும் பொருட்படுத்தாது மனிதன் எங்ஙனம் இயற்கையிலிருந்து விலகிச் செல்கிறான் என்பதை சொல்லும் கதை. இயற்கையின் விதிகளை அவன் எந்த அளவுக்கு உதாசீன படுத்துகிறான் என்பதைச் சொல்லும் ஓர் படைப்பு.
    Zum Buch
  • Alli Arasani Malai - cover

    Alli Arasani Malai

    Pukazhenthi

    • 0
    • 0
    • 0
    நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது. 
    தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. 
    கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை. 
    அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.
    Zum Buch
  • Karippu Manigal - cover

    Karippu Manigal

    Rajam Krishnan

    • 0
    • 0
    • 0
    தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். - ராஜம் கிருஷ்ணன்
    Zum Buch
  • Avvaiyar Aathichudi - Tamil AudioBook - பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Aathichudi - Tamil...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    ஆத்திசூடி என்பது  ஒளவ்வையார் எழுதிய புகழ்பெற்ற நூல். இந்நூலில் தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு நல்லொழுக்கக் கருத்து வழங்கப்பட்டுள்ளது. 
    இதில் தர்மம், ஒழுக்கம், கல்வி, அன்பு, அடக்கம், பணிவு, கடமை போன்ற வாழ்க்கை வழிகாட்டும் நெறிமுறைகள் எளிமையாகவும் சிறப்பாகவும் சொல்லப்பட்டுள்ளன. 
    ஆத்திசூடியை படிப்பதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒழுக்க நெறி, பண்பாடு, மனிதநேயம் ஆகியவற்றை எளிதில் கற்றுக் கொள்ள முடியும். 
    இது தமிழ் இலக்கியத்தின் அடித்தள நூல்களில் ஒன்றாகவும், பள்ளிக் கல்வியில் அவசியமான பாடமாகவும் போற்றப்படுகிறது.
    Zum Buch
  • தொல்காப்பியம் - cover

    தொல்காப்பியம்

    தஞ்சை தொல்காப்பியர்

    • 0
    • 0
    • 0
    தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. பழங்காலத்து நூலாக இருப்பினும் இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. 
    தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம், எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும் தமிழ்மரபையும் விளக்குகிறது. 
    எழுத்ததிகாரம் 
    நூல் மரபு மொழி மரபு  பிறப்பியல்  புணரியல் தொகை மரபு உருபியல் உயிர் மயங்கியல்  புள்ளி மயங்கியல்  குற்றியலுகரப் புணரியல்  
    சொல்லதிகாரம் 
    கிளவியாக்கம் வேற்றுமை இயல் வேற்றுமை மயங்கியல் விளி மரபு பெயரியல் வினை இயல் இடையியல் உரியியல் எச்சவியல் 
    பொருளதிகாரம் 
    அகத்திணையியல் புறத்திணையியல் களவியல்  கற்பியல்  பொருளியல் மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியல் 
    தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இதனை இலக்கணம் - சொல்விளக்கம் என்னும் பகுதியில் காணலாம். 
    தொல்காப்பிய நூற்பாக்கள் அனைத்தையும் ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் கேட்கலாம்.
    Zum Buch