Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
எனக்கு உண்மை பேசுவது பிடிக்கும் - I Love to Tell the Truth - Tamil children's book - cover

எனக்கு உண்மை பேசுவது பிடிக்கும் - I Love to Tell the Truth - Tamil children's book

Shelley Admont, KidKiddos Books

Maison d'édition: KidKiddos Books

  • 0
  • 0
  • 0

Synopsis

ஜிம்மி என்ற குட்டி முயல் சிக்கலில் மாட்டிக்கொண்டது. தற்செயலாக, அது தனது தாய்க்கு பிடித்த பூக்களை சிதைத்து விட்டது. பொய் சொல்வது உதவி செய்யுமா? அல்லது உண்மையைச் சொல்லி பிரச்சனையை வேறு விதமாகத் தீர்க்க முயல்வது நல்லதா?
இந்த வேடிக்கையான, குழந்தைகளுக்கான புத்தகத்தினூடாக இன்னும் நேர்மையாக இருப்பதற்கு உங்கள் குழந்தைகளுக்கு உதவுங்கள்.
Disponible depuis: 24/05/2024.
Longueur d'impression: 34 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Avvaiyar Aathichudi - Tamil AudioBook - பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Aathichudi - Tamil...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    ஆத்திசூடி என்பது  ஒளவ்வையார் எழுதிய புகழ்பெற்ற நூல். இந்நூலில் தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு நல்லொழுக்கக் கருத்து வழங்கப்பட்டுள்ளது. 
    இதில் தர்மம், ஒழுக்கம், கல்வி, அன்பு, அடக்கம், பணிவு, கடமை போன்ற வாழ்க்கை வழிகாட்டும் நெறிமுறைகள் எளிமையாகவும் சிறப்பாகவும் சொல்லப்பட்டுள்ளன. 
    ஆத்திசூடியை படிப்பதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒழுக்க நெறி, பண்பாடு, மனிதநேயம் ஆகியவற்றை எளிதில் கற்றுக் கொள்ள முடியும். 
    இது தமிழ் இலக்கியத்தின் அடித்தள நூல்களில் ஒன்றாகவும், பள்ளிக் கல்வியில் அவசியமான பாடமாகவும் போற்றப்படுகிறது.
    Voir livre
  • Valmiki Ramayanam Part 1 - Bala Kandam - cover

    Valmiki Ramayanam Part 1 - Bala...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    குழந்தைகளுக்கு பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லணும் என்கிற எனது முயற்சியிலே ஒரு அடுத்த முக்கியமான கட்டமாய், நான் வால்மீகி ராமாயணத்தை ஒரு தொடர்கதையா சொல்லணும் என்கிற முயற்சி வெற்றிகரமா ஒலிபரப்பாகி நிறைவு அடையறதுக்கு வழக்கம்போல உங்க எல்லோருடைய ஆதரவையும், ஆசிகளையும் வேண்டிக் கேட்டுக்கிறேன். 
    இந்தப் பகுதி நூல் அறிமுகத்துடனும், கொள்ளைக்காரனாய் இருந்த ரத்னாகரன் வால்மீகி முனிவராய் உருவான கதையுடனும் தொடங்குகிறது. தொடர்ந்து வரும் பால காண்டத்தில் வால்மீகி ராமாயணம் உருவான கதையில் ஆரம்பித்து, தசரதர் அச்வ மேத யாகம் செய்ததன் மூலம் ஸ்ரீ ராமரும், அவரது சகோதரர்களும் பிறந்தது, விசுவாமித்திர முனிவர் பால ராமனை காட்டுக்கு அனுப்ப வேண்டுகோள் விடுத்தது, லக்ஷ்மணன் உடன் வர, அவருடன் வனம் சென்ற ராமன் தாடகையை வதம் செய்தது, விசுவாமித்திரரின் யாகம் காத்தது எல்லாம் சொல்லப்படுகிறது; பின் கங்கை பூமிக்கு வந்த கதை, தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்த கதை, அஹல்யை சாபம் பெற்ற கதை, ராமனின் பாதம் பட்டு அவள் சாப விமோசனம் பெற்றது, ராம லக்ஷ்மணர்கள் விசுவாமித்திரருடன் மிதிலை சென்றது, அங்கே அவர்கள் விசுவாமித்திரரின் சரித்திரத்தைக் கேட்டறிந்தது, ராமன் சிவ தனுஸை ஒடித்து சீதையை மணந்தது, பின் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரசுராமரை வென்றது, அயோத்தியில் ராமனும் சீதையும் மகிழ்ச்சியான மணவாழ்வைத் தொடங்கியது – ஆகியவரை பால காண்டத்தில் சொல்லப்படுகின்றன.
    Voir livre
  • Valmiki Ramayanam Part 6 - Yuddha Kandam - cover

    Valmiki Ramayanam Part 6 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    யுத்த காண்டத்தில் ராமர்  வானர சேனையுடன் கிஷ்கிந்தையிலிருந்து புறப்பட்டு தெற்குக் கடற்கரையை அடைவது, இலங்கையில் ராவணனுக்கு அறிவுரை சொன்ன தம்பி விபீஷ்ணன் ராவணனின் கோபத்துக்கு ஆளவது, விபீஷ்ணன் ராமரரிடம் வந்து சரணடைவது, கடலரசன் மீது ராமர் கோபத்தை வெளிப்படுத்துவது, கடலைக் கடந்து இலங்கை செல்லப்  பாலம் கட்டுவது, இலங்கைக்கு வந்து சேர்ந்து போரைத் துவங்குவது, ராவணன் மகன் இந்திரஜித்தால் தாக்கப் பட்ட ராம லக்ஷ்மணர்களை கருடன் குணப்படுத்துவது, ராவணனின் தம்பி கும்பகர்ணன் போரில் மடிவது, இந்திரஜித்தால் மீண்டும் படுகாயப் பட்ட ராம லக்ஷ்மணர்களை குணப்படுத்த அனுமார் ஸஞ்சீவனி மூலிகை மலையைத் தூக்கி வருவது, லக்ஷ்மணன் இந்திரஜித்தைக் கொல்வது, ராமர் கடைசியில் பிரம்மாஸ்திரம் கொண்டு ராவணனை வதம் செய்வது, சீதையைத் தீக்குளிக்கச் செய்து அவளது தூய்மையை உலகுக்கு நிரூபிப்பது, அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் எல்லாரும் திரும்பி வருவது, பதினான்காண்டு வனவாசம் முடிந்து வந்த ராமரை பரதன் வரவேற்பது, ராம பட்டாபிஷேகம் நடந்து மீண்டும் அயோத்தி மன்னராய் பொறுப்பேற்பது – ஆகியவை இடம்பெறுகின்றன.
    Voir livre
  • Avvaiyar Nalvazhi - Tamil Audio Book - நல்வழி - ஔவையார் பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Nalvazhi - Tamil Audio...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    நல்வழி பாடல் என்பது ஒளவையார் எழுதிய நற்பண்பு மற்றும் ஒழுக்கக் கவிதைகளின் தொகுப்பு. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்க்கை நெறி, ஒழுக்கம், மரியாதை மற்றும் நல்லொழுக்கப் பயிற்சிகளை எளிமையாக கற்றுத்தரும் இந்த நூல், தமிழ் கல்வி மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குகிறது. 
    Voir livre
  • Panchatantra Stories - cover

    Panchatantra Stories

    Thilagam, Deepika Arun, Bavya

    • 0
    • 0
    • 0
    பழைய பஞ்சதந்திரக் கதைகளை நீங்க கேட்டிருப்பீங்க—அதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் ஏமாத்தி, சண்டை போட்டு, சில சமயம் கொடுமையா நடந்துக்கற கதைகள் தான் நிறைய இருக்கும், இல்லையா? 
    சிட்டுக்குருவி போட்காஸ்ட் ல குழந்தைகளுக்கான பஞ்சதந்திரக் கதைகள் தொடர்ல, பழைய கதைகளை கொஞ்சம் மாத்தி, கருணையும் நல்ல மனசும் பிரச்சனைகளை தீர்க்கும்ங்கிற முடிவோட உங்களுக்கு சொல்றோம். இதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் கொல்லாம, ஏமாத்தாம, புத்திசாலித்தனமா யோசிச்சு, உணர்ச்சிகளை சரியா புரிஞ்சுகிட்டு ஒத்துமையா வாழ கத்துக்கறாங்க. இந்தக் கதைகள் உங்களை சிந்திக்க வைக்கும், யோசிக்க வைக்கும், முக்கியமா, உங்கள சுத்தி இருக்குறவங்களோட சிரிச்சிகிட்டு கிரிச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ உதவி பண்ணும்னு நம்பறோம்! கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க!
    Voir livre
  • Sotru Kanakku - cover

    Sotru Kanakku

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை அது. தாயத்து கட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட ஒரு  கரடிக்கரம். அன்னமிட்ட கைக்கு காப்பும் காசும் ஈடாகுமா? பசி மிகுந்த வயிற்றுக்கு ஈயப்படும் உணவிற்கு விலை வைக்க முடியுமா? வறுமையும் பசியும் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெறுமையையும் வலிமையையும் மிக அழகாக சொல்லும் கதை. திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் சிறிய கொட்டகையில் சோற்றுக்கு கணக்கு பாராமல், வருபவர்களின் பசியோடு ருசியையும் அறிந்து அவர்களுக்கு உணவளித்த ஒரு மாபெரும் மனிதரின் கதை கேளுங்கள் !
    Voir livre